சைவ முழக்கம் எவை ? உலகெங்கும் எடுத்துச் செல்லுங்கள் 5/5 (2)

சைவ முழக்கங்கள் எவை ?

உலகின் உயர்ந்த சமயமாம் சைவ சமயத்தை அனைவருக்கும் எடுத்துச் செல்வது நம் ஒவ்வொருவர் கடமையாகும். நம் எண்ணங்களே செயல்களாக உருவெடுக்கும். ஆகையால், தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களையே சிந்தித்து மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்வது மிக அவசியம்.

சிவம் என்றாலே பேரானந்தம். அந்த சிவனையே சிந்தித்து இருக்கும் போது நாமும் சிவத்தோடு ஒன்றி பேரானந்தம் காண்போம். அவ்வாறாக, நாம் காணும் இடமெல்லாம் சிவம் தெரிந்தால், நம்மை விட பாக்கியசாலி யார் உளர் ? சைவ முழக்கங்களையும், சைவ சிந்தனைகளையும் நாம் காணும் இடம் எங்கும் வியாபித்திருந்தால், நம் சிந்தனைகளை அது நெறிப்படுத்திக் கொண்டே இருக்கும் அல்லவா ?

நம் இல்லங்கள், பொது இடங்கள், கோவில்கள், கார், மோட்டார் வாகனங்களின் முன் பின் பக்கங்கள் என்று சைவ முழக்கங்களை நாம் எழுதி வைக்க, அது நம்மைத் தொடர்ந்து நெறிப்படுத்திக் கொண்டே இருக்கும். மேலும், நமக்கு மட்டுமின்றி காண்போர் யாவருக்கும் அது அதே சிந்தனை அனுபவத்தைத் தந்து பல்கிப் பெருகும். அவ்வாறாக எழுதி வைக்க சில வாசகங்கள் இங்கே. எழுதுங்கள், ஒட்டுங்கள், படியுங்கள், சிந்தியுங்கள், அனுபவியுங்கள், இன்பமாய் இருங்கள். திருச்சிற்றம்பலம்.

சிவனொடு ஒப்ப தெய்வம் தேடினும் இல்லை.

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

திருமுறையே வாழ்வியல் வெளிச்சம்.

திருமுறையே வாழ்வின் நெறிமுறை.

திருமுறையே சைவ நெறிக் கருவூலம்.

63 நாயன்மார்களே நமது வாழ்வின் வழிகாட்டி

நால்வர் நெறியே நமது கொள்கை.

இறைவன் ஒருவன் ஒருவனே. அவனே சிவபெருமான்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியே சிவம்.

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.

அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே.

சிவசிவ என்றிட தீவினை மாளும்

நாதன் நாமம் நமசிவாயவே.

ஆளாவது எந்நாளோ திருக்காளத்தி அப்பனுக்கே

63 நாயன்மார்கள் மலரடிகள் போற்றி போற்றி

நால்வர் மலரடிகள் போற்றி போற்றி

சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மலரடிகள் போற்றி போற்றி

திருக்கோவில் தூய்மை செய்வோம். அகக்கோவில் தூய்மை அடையும்.

சைவ சமயமே உலகின் சமயம்.

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

கங்காளன் பூசும் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வீரே.

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்.

பன்னிரு திருமுறையே தமிழ் வேதம்.

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே.

பிறப்பு இறப்பு முதலும் முடிவும் இல்லாத சிவபெருமான் ஒருவனே இறைவன்.

சிவாயநம என்பாரை அபாயம் என்றும் நெருங்காது.

இறைவன் உயிர்களோடு ஒன்றாய் உடனாய் வேறாய் இருக்கிறான்.

மானுடப் பிறவி சிவபெருமானைத் தொழுவதற்கே.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் சிவபெருமான்

சிவாலயங்களை சேவிப்போம். செல்வம் வளரும் குறையாது.

அரகர நமப் பார்வதி பதையே 

    அரகர மகாதேவ நமக

தென்னாடுடைய சிவனே போற்றி!

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!     

    பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!

பராய்த்துறை மேவிய பரனே போற்றி!

    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!    

    சீரார் திருவையாறா போற்றி!

தென்தில்லை மன்றினுள் ஆடிபோற்றி!  

    இன்றெனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!

குவளைக் கண்ணி கூறன் காண்க!

    அவளுந் தானும் உடனே காண்க!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

    கண்ணாரமுதக் கடலே போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி

    கயிலை மலையானே போற்றி போற்றி!

சிவசிவ சிவசிவ சிவசிவ

படிப்போம் – தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருக்குறள் திருமுறை

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் திருக்கூட்டம்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *