விழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா ?
இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும் உயிர்கள் என்றும், அவை தம்மைப் பிணித்துள்ள ஆணவ மலத்தை உதறிவிட்டு, எப்போதும் பேரின்பம் தந்து கொண்டிருக்கும் இறைவனை அடைய வேண்டும் என்று வேண்டி, சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் ஆகிய படிநிலையில் இறைவனை வழிபடுகின்றன. அவ்வாறு வழிபடும் போது, தக்க முதிர்வு நிலையில், இறைவனே ஞான குருவாக வந்து ஞான உபதேசம் அருளி முக்தியாகிய பேரின்பத்தை வழங்குவன். அவ்வாறு சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய படிநிலைகளில் விளங்கும் ஒருவர், தன் தலைவனாகிய சிவபிரானின் கருணை மிகு கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் போது, தன் உள்ளம் உருகி பாடுகிறார். இந்த பாடலைக் கேட்டால் உருகாதவர் யாருளர் ?
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருச்சிற்றம்பலம்.