அச்சரப்பாக்கம் மலைமாதா கோவிலை அகற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு 5/5 (2)

அச்சரப்பாக்கம் மலைமாதா கோவிலை அகற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னையிலிருந்து தெற்கே உள்ள நகரங்களுக்கு செல்வபர்கள் கண்ணில் படமால் போகாது இந்த அச்சரப்பாக்க மலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம். இது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை உள்ள அச்சரப்பாக்கம் ஊரில் உள்ள மலையாகும். இந்த மலையில் பன்நெடுங்காலமாக சிவாலயம் ஒன்று உள்ளது. மேலும் இந்த மலையைச் சுற்றி கிரிவலமும் மக்கள் வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த மலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான 55 ஏக்கம் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிமித்து மலைமாதா கோவில் என்ற கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டது. மலைகளை வெடி வைத்துத் தகர்த்தும், விதிகளை மீறி படிக்கட்டுகளை அமைத்தும், கட்டப்பட்டுள்ளது. மேலும் கடைகளும் பல வைக்கப்பட்டுள்ளது. இது காரணமாக அந்த மலைப் பகுதியில் உள்ள வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், அவை ஊருக்குள் வர வாய்ப்பு இருப்பதாகவும், இந்த மலைமாதா கோவிலையும் அதன் அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் ஆர். கேமலதா மற்றும் எம். சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசு, தொல்லியல் துறை மற்றும் மலைமாதா தேவாலய நிர்வாகம் ஆகியோர் உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் மாதம் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *