இறந்தவர் இல்லத்தில் தேவாரம் திருவாசகம் பாடலாமா ? 5/5 (6)

இறந்தவர் இல்லத்தில் தேவாரம் திருவாசகம் பாடலாமா ?

ஓம்
சிவசிவ
========
புனித நூல் !
=============
சிவமே விளங்கும் புனித நூல் ; பொருள் சிவமே !
ஐயா, இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்கவேண்டும் என பதிவு செய்திருக்கிறீர்களே ? தயவு செய்து இது எதனால் என்றும் எந்த அருளாளர் இப்படி தெரிவித்துள்ளார் என தகவல் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன்..
ௐௐௐௐௐ
சிவ சிவ :
===== =====

தவறு ! தவறு ! தவறு !
===== ===== =====

இறந்தவர்கள் இல்லத்தில் அடியார்கள் சென்று திருவாசகம் தேவாரப் பதிகங்கள் பாடுகின்றனர். இது சரியா ? தவறா ?
××××× ××××× ×××××
இது அன்பர் ஒருவர் தனிப்பட்ட முறையில் படிக்கலாம் எனக் கருத்திட்டவரிடம் வினவிய வினா !  இதை விடத் திருமுறைகளை இழிவு படுத்த எவராலும் இயலாது !

இந்தக் கொடிய வழக்கம் தென் மாவட்டச் சைவர்கள் இல்லங்களில் எப்படியோ , எப்போதோ தொடங்கி , பரவலாக நடை முறைக்கு வந்து விட்டது ! திருமுறைகளில் பற்றும் பயிற்சியும் உள்ள ஒரு சிவனடியார் , இறப்புக்கு முன் நினைவு தவறும் முன்பாக , அவர் செவியில் ஏறுமாறு திரு முறைகளைப் பாடுதல் தவறில்லை !
அதைக் கேட்பவர் சிவ சிந்தையே நிறைவாகிட , இறை நினைவுடன் மட்டும் உடலை நீங்குதல் , உயர் பதம் அடைவதை விளைவிக்கும் .

பல ஆலயங்களுக்குத் தல புராணங்களை வகுத்தளித்து அருந் தொண்டாற்றிய ,
சிவ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் நினைவாற்றல் நீங்கு முன் ,அவரது சீடர்
சிவ. உ. வே . சுவாமி நாத ஐயர் அவர்கள் திருவாசகம் ஓதிக் கொண்டிருக்க , கேட்டுக் கொண்டே , கண்களின் இருபுறமும் நீர் வழிய ,அவர் உயிர் நீத்தது வரலாறு ! உயிர் நீங்கிய பிறகு ,தொடர்ந்து பாடவில்லை ! உயிர் நீங்கிய பின் பாடுதல் வேதத்தை அவமதிப்பதாகும் !
திருமுறைகளின் பெருமைகளை அறியாதார் இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள் ! ஆலய வழிபாடே அறியாத , திருமுறைகளையே அறியாத , பெரிய தனவந்தர்கள் இறந்த வீடுகளிலும் , பொருள் பேசி திருவாசகம் ஓதுவதில் போய் நின்றுள்ளது இன்றைய அவல நிலை !

இதற்காக ,
இறைவனாரால் அருளாளர்கள் மீது மேலோங்கி நின்று , அருளப் படவில்லை இந்த மெய்ஞ் ஞானப் பாடல்கள் ! பல்வேறு படி நிலைகளில் உள்ள மக்களும் பயின்று பயன் கொள்ளும் நோக்குடனும் , உயிர்களைப் படி முறையில் வளர்த்தெடுத்து, சிவத்தை நோக்கிச் செலுத்திடவும் வகை செய்யும் பனுவல்கள் இவை ! ; ஞான பாதம் !
வாழ்வியல் சுப ,அசுப காரியங்களுக்காகப் படைக்கப் பட்டவை அல்ல !

ஏன் படிக்கக் கூடாது ?
தீட்டாவது ஒன்றாவது ? என்பர் பிழைப்பாளர்கள் !எப்படித் தெளிவிப்பீர்கள் ?
நல்ல வினா !

இறந்தவர் வாரிசு ஒருவர் ,உடனே திருவாசகத்தை எடுத்துக் கொண்டு ,
சிவாலயத்துக்குள் புகுந்து ,இறைவன் திருமுன் , இறந்தவர் சிவ பதம் அடைய வேண்டும் என்று திருவாசகம் படிக்கத் துணிவாரா ? எது தடுக்கும் ? கடுமையான வினாக்களாக உளவே ? பித்தம் உறைந்து போன சித்தத்தவரை தெளிவிக்க , இது போன்றக் கடுங் கசப்பு மருந்து கொடுத்தால்தான் தெளியும் ! திருமுறைகளின் ஒவ்வொரு பாடலிலும் சிவமே வரி வடிவாக உறைந்திருக்கிறார் ! ஓதும் போது ஒலி வடிவில் வெளிப்படுகிறார் ! பொருளறிந்து உருகி ஓதின் , இறையாற்றல் ஓதுபவரின் ஆன்மாவைப் பக்குவப் படுத்தும் ! துன்ப நீக்கத்துக்கும் ,இன்ப ஆக்கத்துக்கும் வகை செய்யும் !

திங்களூர் , திருமருகல் ஆகிய தலங்களில் இறந்தவரை எழுப்பப் பாடப் பட்ட நிகழ்வுகள் நடந்ததே ?

அந்த சூழல்கள் வேறு !
அவர்கள் இறந்திருப்பினும் , விதிப்படி , இவர்களைக் கருவியாக வைத்து ,உயிர்பிக்கப் பட முன்னை விதியுடையோர்.  எழுப்பிய அருளாளர்கள் வழி இறைவனாரே நிகழ்த்திய அருள் திருவிளையாடல்கள் அவை ! எழுப்பிடக் கருவியாக நின்றோர் ,நாம் பொறி புலன்களைப் பயன்படுத்துதல் போல் செயல் படத்தாமல் , பதி கரணமாக நின்று , அதாவது அவர்கள் உயிரறிவு இறையறிவில் அடங்கிட , சிவம் ஒன்றே அவர்களது உருவில் மேலோங்கி நின்று நிகழ்த்திய நிகழ்வுகள் அவை ! பொருள் விழைவாளர்களுக்கு இது விளங்காது ! இது சிவ ஞானப் புகலுடையோருக்கே விளங்கும் !  இறந்த உடலாக அங்கு எஞ்சி இருப்பது பஞ்ச பூதக் கலவையான சட நிலையில் உள்ள உடல் மட்டுமே என அறிக ! சுவர் பயன் பெறட்டும் என அதன் முன் நின்று ஓதுவதை ஒப்பதே இது ! இறந்தவருக்கு எந்தப் பயனும் விளையாது என அறிக !
தூய்மையற்ற இடம் என்பதையும் அன்பர்கள் கருத்தில் கொள்க !

25000 / = கட்டணம் பேசி ,திருமுறைகள் ஓதி ,கரும காரியம் செய்யப் பட்ட நிகழ்வு ஒன்றை , திரு நெல் வேலிப் பயணத்தின் போது அறிவிக்கப் பட்டு அதிர்ந்தேன் !
திரு முறைகளில் பெருமைகளை உள்ளவாறு உணர்ந்தோர் இவ்வாறு செய்யத் துணியார் ! இது வரை எவரும் இதைப் பற்றி எல்லாம் எவரும் வாய் திறக்கக் கூட இல்லையே !
துணிவு இல்லாததே ஒரே காரணம் ! தாங்கள் ?
இறைவனையே உள்ளத்தில் தாங்கி ,திருவருளே உணர்த்தக் கருவியாக நின்று பதிவு செய்கிறேன் !
~சிவோஹம் ~
~கோமல் கா சேகர் /9791232555/ 060418.
சிவ சிவ :
திருச்சிற்றம்பலம்.
கோமல் /260120-(74/20)

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *