ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம். அவ்வினைக்கு இவ்வினையாம் Avvinaikku Ivviani 5/5 (2)

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

இறைவனைக் காட்ட முடியுமோ என்றார். ஒழுக்கம் விலகினார். கண்டதையும் எடுத்துத் தின்றார். செய்யத் தகாதன செய்தார். என்னை விஞ்ச ஆள் இல்லை என்றார்.  நானே கடவுளும் என்று கூட சொல்லிப் பார்த்தார். எத்தனை ஆட்டம் போட்டார் ? இன்று உலக மக்கள் அனைவரையும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது கண்களுக்குத் தெரியாத நுண்கிருமி. நிலநடுக்கம் வந்தது. பேரலை வந்தது. புயல் மழை வந்தது. வெள்ளம் வந்தது. இப்போது கிருமி வந்திருக்கிறது. இந்த பிரபஞ்சம் எத்தனை எத்தனை இன்னல்களைப் பார்த்து விட்டது? எத்தனை விலங்குகள் இங்கு காணாமல் போய்விட்டது?

இயற்கையோடு இயைந்து வாழ் என்று நமக்கு இறைவன் மணி அடித்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறான். நம் அறியாமையை அகற்ற ஒவ்வொரு பொழுதும் பாடு பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால், நாமோ, எங்கோ சென்று கொண்டே இருக்கிறோம். எதுவுமே நடவாதது போல சென்று கொண்டே இருக்கிறோம். அவ்வப்போது நம்மை நம் கனவிலிருந்து எழுப்பி உண்மையை உணர வைக்கிறான். இன்பமும் துன்பமும்  கொடுத்து நம்மை வலுவுறச் செய்யவே தருகிறான். நம்மைப் பக்குவப் படுத்துகிறான்.

ஒவ்வொரு துன்பத்திலும் நம் அறிவை செயல்படுத்தி பாதுகாப்பாக இருக்கச் சொல்கிறான். இறைவன் என்னென்ன செய்வான் என்று நம்மால் கூறவே இயலாது. ஆனால், எல்லாமே நமக்கு நன்மை தருவதற்க்கே செய்வான் என்பது மட்டும் திண்ணம்.

கொரானா பரவாமல் தடுக்க அற்புதமான நடவடிக்கைகளை நம் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, அவர்கள் கொடுக்கும் விதிமுறைகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அவ்வப்போது நன்றாக கழுவ வேண்டும். குறிப்பாக வெளியே சென்று வந்த பின் கை கால், முகம் அகியவற்றை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். உடல் நிலை சரியில்லாதது போல இருந்தால், முதலில் பயம் கொள்ளத் தேவையில்லை. மருத்துவரின் துணையை நாட வேண்டும். அரசாங்கம் கேட்கும் தகவல்களைக் கொடுக்க வேண்டும்.  பின்னர், இறைவனை வணங்க வேண்டும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. ஆகவே, இறைவனை வணங்கி விண்ணப்பிப்பது மிகவும் முக்கியமானது. நம் கடமைகளை ஒழுக்கமாக சரியாகச் செய்துவிட்டு இறைவனிடம் விண்ணப்பிக்க வேண்டும். இறையருள் எதையும் செய்ய வல்லது.

நம் நாட்டிலும், உலகம் முழுவதிலும், கொரானா நுண்கிருமியின் பரவுதலைத் தடுக்கவும், அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மக்கள் இனிதாக தங்கள் வழக்கமான வாழ்விற்க்குத் திரும்பவும், நம் குருமார்கள் அருளிய இந்த பதிகத்தை ஒரு முறையாயினும் வாயார படிப்போம். திருஞானசம்பந்தர் தேவாரம்.

( Avviniakku Ivvinai )

அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் திருஞானசம்பந்தர் தேவாரம்  திருநீலகண்டப் பதிகம் விஷ ஜுரம், விஷக் கடி நீங்க, தொண்டையில் ஏற்பட்ட கோளாறுகள் நீங்க, எடுத்த காரியம் வெற்றி பெற, குரல் வளம் பெருக, செய்வினை பில்லி சூனியம் ஆகியவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, துணிவுடன் செயலாற்ற ஓத வேண்டிய பதிகம். திருச்சிற்றம்பலம்.

 

திருச்சிற்றம்பலம்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *