சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு No ratings yet.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு

ௐௐௐ
சிவ சிவ :


சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு


( சுந்தர மூர்த்தி சுவாமிகள் திரு அவதாரம் தொடங்கி ,
இறைவனால் தடுத்தாட் கொள்ளப் பட்ட வரலாற்றினை
உள்ளடக்கி , தில்லையை கண்டு களித்து ,வணங்கிப் போந்தது வரை / இரண்டு மணி நேரம் தொடர் விளக்கமளிக்க நான் வைத்துள்ளக் குறிப்பு / அன்பர்கள் பயின்று மகிழ்க / ஆடி சுவாதி 21-07-18 சிறப்பு வெளியீடு / கோமல் கா சேகர் 9791232555 )

========

‘” வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் ” –

===== ===== =====

மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் / வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார் . ( தடுத் – 03 )

அவதாரம் செய்தார் என்றக் குறிப்பு : ~

01 ) திருஞானசம்பந்தர் 02 )திரு நாவுக்கரசர்

03 ) வன் தொண்டர்

04) விறன் மிண்டர்

05)மானக்கஞ்சாறர்

06 )ஏயர் கோன் கலிக்காமர்.

07)கலிய நாயனார்.

+ 01)பரவையார். 02 ) சங்கிலியார் 03 )சீராளத் தேவர்.

×××× ×××× ××××

ஆரூரர் அறிமுகம்.

===== =====

காட்சி ~01 =

இடம் : ~கயிலை வரை .

உபமன்னிய முனிவர் தன் சீடர்களுடன் வீற்றிருக்கிறார் !

யார் இந்த உப மன்னிய முனிவர் ?

×××××××××

~பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் / மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் / ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப் / பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே ~எனத் திருப் பல்லாண்டில்(09) சேந்தனாரால் குறிப்பிடப்பட்டவர்.

==============

திருமலைச் சிறப்பு :~

÷÷÷÷÷÷÷÷÷÷

– திருச் சிற்றம்பலம்

××××××××××

~ பொன்னின் வெண் திரு நீறு புனைந்தெனப் / பன்னு நீள் பனி மால் வரைப் பாலது / தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும் / மன்னி வாழ் கயிலைத் திரு மாமலை ~ (01)

~ அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின் / நண்ணும் மூன்றுலகும் நான் மறைகளும் / எண்ணில் மா தவம் செய்ய வந்தெய்திய / புண்ணியம் திரண்டுள்ளது போல்வது – ( 02 )

~ நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி / இலகு தண் தளிராக எழுந்ததோர் / உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் / மலரும் வெண்மலர் போல்வது அம் மால் வரை ~ ( 03 )

×××××××××

அன்னதன் திருத் தாழ்வரையின் இடத்து / இன்ன தன்மையன் என்று அறியாச் சிவன் / தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் / உன்னருஞ் சீர் உபமன்னிய முனி ~ (13- )

இவர் பெருமைகள் :

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

யாதவன் துவரைக்கு இறை ஆகிய /மாதவன் முடிமேல் அடி வைத்தவன் / பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு / ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் ~(14 )

+++++++++++

அத்தர் தந்த அருட்பால் கடல் உண்டு /சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் / பத்தராய முனிவர் பல் ஆயிரர் / சுத்த யோகிகள் சூழ இருந்துழி ~ (15)

×××××××××××

~ அங்கண் ஓரொலி ஆயிர ஞாயிறு /பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத் / துங்க மாதவர் சூழ்ந்திருந்தார் எலாம் / ” இங்கிது என் கொல் அதிசயம் ?” ,என்றலும் .~ (16)

===========

அந்தி வான்மதி சூடிய அண்ணல் தாள் / சிந்தியா உணர்ந்து அம்முனி ” தென் திசை /வந்த நாவலர் கோன் புகழ் வன்தொண்டன் / எந்தையார் அருளால் அணைவான் ” என ~ (17 ) ×××××××××

~ கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத்திசை / மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் / செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி / ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர் ~ (18 )

~~~~~~~~~~~~~

“”சம்புவின் அடித் தாமரைப் போதலால் / எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் ? “எனத் /

“”தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன் / நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் “” ~ (19 )

×××××××××××

~என்று கூற இறைஞ்சி இயம்புவார் : / ” வென்ற பேரொளியார் செய் விழுத்தவம் / நன்று கேட்க விரும்பும் நசையினோம் / இன்று எமக்கு உரை செய்தருள் ” ,என்றலும் – ( 20 )

~ உள்ள வண்ணம் முனிவன் உரை செய்வான் / ” வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருளாகிய / வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும் / அள்ளும் நீறும் எடுத்து அணைவானுளன் “- (21)

××××××××××××

– அன்னவன் பெயர் ஆலால சுந்தரன் / முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு / இன்னவாம் என நாள் மலர் கொய்திடத் / துன்னினான் நந்தனவனச் சூழலில் ~(22)

~அங்கு முன்னரே ஆளுடை நாயகி / கொங்கு சேர் குழற்கா மலர் கொய்திடத் / திங்கள் வாள் முகச் சேடியர் எய்தினார் / பொங்குகின்ற கவினுடைப் பூவைமார் “‘ – (23)

~ ” அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல் / கந்த மாலைக் கமலினி என்பவர் /கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி / வந்து வானவர் ஈசர் அருள் என ~ ” (24 )

~ ” மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் / தீதிலாத் திருத் தொண்டத் தொகை தரப் / போதுவார் அவர் மேல் மனம் போக்கிடக் / காதல் மாதரும் காட்சியில் கண்ணினார் ~ (25 ) ~

( அவரவர் மலர் பறித்துக் கொண்டு தம் இடம் ஏகினர் )

~ ” ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே/” மாதர் மேல் மனம் வைத்தனை ; தென் புவி/ மீது தோன்றி அம் மெல்லியலாருடன் / காதல் இன்பம் கலந்து அணைவாய் ” என – (27 )

~ ” கைகள் அஞ்சலிக் கூப்பிக் கலங்கினான் / ” செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் / மையல் மானுடமாய் மயங்கும் வழி / ஐயனே தடுத்து ஆண்டு அருள் செய் ” என ”

( இறைவனார் அதற்கு இசைய ,முனிவர் வன் தொண்டர் அம் மகளிருடன் புவியில் பிறந்து இயற்றிய செயல்களை அவர்களுக்கு விரித்துரைத்தார் )

யோகியர் : ~ ” பந்த மானுடப் பாற்படு தென் திசை / இந்த வான் திசை எட்டினும் மேற்பட / வந்த புண்ணியம் யாது ? ”

முனிவர் : ~01 ) திரு ஆரூர் ( இதயக் கமலம் )

02 ) காஞ்சி ( அம்பிகை இறைவனைத் தவத்தால் எய்தியது )

03 ) ஐயாறு ( நந்தி தேவர் தவம் செய்து அருள் எய்தியது )

04 ) தோணிபுரம்

××××××××××××××

~ தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை / ஈசர் தோணிபுரத்துடன் எங்ஙணும் / பூசனைக்குப் பொருந்தும் இடம் பல / பேசில் அத் திசை ஒவ்வா பிற திசை ~ ( 36 )

~மற்று இதற்குப் பதிகம் வன் தொண்டர் தாம் / புற்றிடத்து எம் புராணர் அருளினால் / சொற்ற மெய்த் திருத் தொண்டத் தொகை எனப்/ பெற்ற நல் பதிகம் தொழப் பெற்றதால் ~ (38)

~ அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை / நந்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி /புந்தி ஆரப் புகன்ற வகையினால் / வந்தவாறு வழாமல் இயம்புவாம் ~

~ திரு சிற்றம்பலம்.

ௐௐௐௐௐ

~ தடுத்தாட் கொண்ட புராணம் ~

=== ==== ===

~ திரு முனைப் பாடி நாடு ~

~ வாய்மை குன்றாத் திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூர் ~

~ மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்/ வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். ( 03)

சடையனார் / இசை ஞானியார் : ” ~ “~தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றி ” ~ ( 04 )

***************

~ நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு மகன்மை கொண்டார் ~(05)

**********

வைதிக முறையிலும் வைகி , அருமறை முந்நூல் சாத்தி , அளவில் தொல் கலைகள் ஆய்ந்து ,சீர் மணப் பருவம் சார்ந்தார் . (06)

=============

புத்தூர் சடங்கவி மறையோன் மகளை , வேண்டி பெரியோர்களை அனுப்புதல் / அவர் மகிழ்ந்து உடன் படல் /

மண ஓலை இடல் / பெண் வீட்டில் திரு மணம் / அலங்கரித்தல் / திரு மண முதல் நாள் சுந்தரருக்குக் காப்பு நாண் இடல் ~ / மணக் கோலம் செய்வித்தல் ~

××××× ××××× ×××××

~ மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க / நன்னகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன் / தன்னடி மனத்துள் கொண்டு தகுந் திரு நீறு சாத்திப் / பொன்னணி மணியார் யோகப் புரவி மேல் கொண்டு போந்தார் ~ (19 ) ××××××××××××××

~ ” அருங்கடி மணம் வந்தெய்த அன்று தொட்டு என்றும் அன்பில் / வருங் குல மறையோர் புத்தூர் மணம் வந்தப் புத்தூராமால் “” ~(23)

+++++++++++

( இறைவனார் வேதியர் வடிவில் வருதல் )

~ மொய்த்து வளர் பேரழகு மூத்த வடிவேயோ / அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ / மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ / இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி ~ (32 )

×××××××

( சபை முன் நின்று ) ~

இறை : ~ ” இந்த மொழி கேண்மின் யாவர்களும் ” (33)

ஆரூரரும் மறையோர்களும் : ~

“” நன்று உமது நல் வரவு நங்கள் தவம் “” ~~

“” நின்றது இவண் நீர் மொழிமின் நீர் மொழிவது “‘- (34)

~ இறை : ~ ( ஆரூரரை நோக்கி ) ~ ” என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான் / முன்னுடையதோர் பெரு வழக்கினை முடித்தே / நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி “” ( 35 )

ஆரூரர் : ~ ” “உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல் / மற்றது முடித்தலது யான் வதுவை செய்யேன் ; / முற்ற இது சொல்லுக “” (36)

இறை : ~ ” ஆவது இது கேண்மின் மறையோர் என் அடியான் இந் / நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது “”

சபையோர் ஏனையோர் : ~ ” இவன் என நினைந்தான் கொல் ” ( என்று சென்றார் ,வெகுண்டார் ,சிரித்தார் ; )

ஆரூரர் : ~ ” நன்றால் மறையோன் மொழி ‘” எனச் சிரித்தார் .

~ நக்கான் முகம் நோக்கி நடுங்கி ,நுடங்கி யார்க்கும்/ மிக்கான் மிசை உத்தரியத் துகில் தாங்கி மேற் சென்று : ~

இறை : ~ “அக்காலம் உன் தந்தைதன் தந்தை ஆள் ஓலை ஈதால் / இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட ” ( 39)

ஆரூரர் :~ ( சிரிப்பு நீங்கி ) ‘” ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல் / பேச இன்று உன்னைக் கேட்டோம் ; பித்தனோ மறையோன் “” – ( 40)

இறை : ~ “” பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று / எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன் / அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று / வித்தகம் பேச வேண்டா பணி செய்ய வேண்டும் “” ~ (41 )

ஆரூரர் : ~ ” ஓலை காட்டுக ”

இறை : ~ ” நீ ஓலை காணற் பாலையோ ? அவை முன் காட்டப் பணி செயற் பாலை ‘”

( நாவல் ஆரூரர் விரைந்து சென்று ஓலையைப் பறிக்க முயலுதல் ; பந்தரின் கீழ் இறைவன் ஓடவும் பின் தொடர்ந்து ஓடி ஓலையைப் பற்றிப் பறித்தார் ஆரூரர் ;

“ஆரூரர் : ~ ” ஆளாய் அந்தணர் செய்தல் என்ன முறை ‘” , ( என்று கூறி ஓலையைக் கிழித்திட்டார் ; இறை முறையிட்டார் .(45 )

இறை : ~

“” முறையோ “” ?

அவையோர் : ~ ” இந்தப் பெருமுறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற திரு மறை முனிவரே ! நீர் எங்குளீர் செப்பும் ?

====+++ ====

இறை :~ இங்குளேன் ; இருப்பும் சேயதன்று ; இந்த வெண்ணெய் நல்லூர் ; அது நிற்க ; அறத்தாறின்றி / வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி / நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை “” ~ (47)

ஆரூரர் : ~ ” பழைய மன்றாடி போலும் ! ” , “” வெண்ணெய் நல்லூராயேல் உன் / பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் ” – (48)-

இறை : ~ “” வெண்ணெய் நல்லூரிலே நீ / போதினும் நன்று ; மற்றப் புனித நான் மறையோர் முன்னர் / ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமையாதல் சாதிப்பன் “”

( என்று தண்டு முன் தாங்கிச் சென்றான் )- (49)

( காந்தம் ஈர்ப்பது போல ஈர்க்கப்பட ஆரூரரும் , அவர் பின் விரைந்து சென்றார் ; ஏனையோரும் “இது என்னாம் ” ,என வியந்து வெண்ணை நல்லூர் அவையை அடைந்தனர் )

×××××× ××××××

திரு வெண்ணெய் நல்லூர் பேரவை ÷

+++++++++++++

இறை : ~ “” சொல்லும் நாவலூர் ஆரூரன்தான் / காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி / மூதறிவீர் முன் போந்தான் இது மற்று என் முறைப்பாடு “” (51)

அவையோர் : ~ “மறையவர் அடிமையாதல் / இந்த மாநிலத்தில் இல்லை ; என் சொன்னாய் ஐயர் ? ”

இறை : ~ ” வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு ; இவன் கிழித்த ஓலை / தந்தை தன் தந்தை நேர்ந்தது “” -(52)

அவையோர் : ~ ( ஆரூரரிடம் )

” இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று / விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றியாமோ ? , தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான் ; / அசைவில் ஆரூரர் எண்ணம் என் ? -(53)

ஆரூரர் : ~ ” 🎂அனைத்து நூல் உணர்ந்தீர் ! ஆதி சைவன் என்று அறிவீர் !என்னைத் / தனக்கு வேறடிமை என்று இவ் வந்தணன் சாதித்தானேல் /மனத்தினால்

உணர்தற்கு எட்டா மாயை !என் சொல்லுகேன் யான் ? எனக்கு இது தெளிய ஒண்ணாது “”- (54)

அவையோர் : ~( இறையை நோக்கி )

“” இவ் வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற / வெவ்வுரை எம் முன்பு ஏற்ற வேண்டும் “‘- (55)

& “” ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் / காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் “”

இறை : ~ “” முன்னே மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை ; மூல ஓலை / மாட்சியில் காட்ட வைத்தேன் “” – (56)

அவையோர் : ~ “வல்லையேல் காட்டு இங்கு “”

இறை :~ ” மறையவன் வலி செய்யாமல் சொல்ல நீர் வல்லீராகில்↑+±+ காட்டுவேன். “” அவையோர் : ~ “”நாங்கள் தீங்குற ஒட்டோம். “” (57)

( ஆரூரர் தொழுது ஓலையை தொழுது வாங்கி சபையோர் முன் படிக்கிறார் )-(58)

~ ” அருமறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை / பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்பால் / வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை / இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து ” ~ (59)

( அவையோர் சாட்சியமிட்டோர் எழுத்தை நோக்கி அவை சரி என ஏற்றனர் )

அவையோர் : ~ (ஆரூரரிடம் ) “ஐயா மற்று உங்கள் பேரனார் தம் / தேசுடை எழுத்தேயாகில் தெளியப் பார்த்து அறிமின் ”

இறை : ~ “இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் ; / தந்தை தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்துண்டாகில் / இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி / வந்தது மொழிமின் “” ~ (61)

( அவையோர் காப்பிலிருந்து ஒரு ஓலை அழைத்துடன் ஒப்பு நோக்கி )

அவையோர் : ~ (ஆரூரர் முன் ) ” இரணடும் ஒத்திருந்தது என்னே ! இனிச் செயல் இல்லை ” -(62)

‘” நான்மறை முனிவனார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர் !/ பான்மையின் ஏவல் செய்தல் கடன் ”

ஆரூரர் : ~ “” விதி முறை இதுவேயாகில் / யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ ? ” -(63)

அவையோர் : ~ ( இறையை நோக்கி )

“‘ அருமுனி ! நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் / பெருமை சேர் பதியே ஆகப் பேசியது உமக்கு இவ்வூரில் / வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக “(64)

இறை : ~ “என்னை ஒருவரும் அறியீராகில் போதும் ”

( பெருமறையவர் குழாமும் , நம்பியும் பின்னே செல்லத் / திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார். (66)

ஆரூரர் : ~ ” இலங்கு நூல் மார்பர் எங்கள் / நம்பர் தம் கோயில் புக்கது என் கொலோ ” -(66)

(அம்பிகையுடன் விடைமேல் தோன்றுதல் )

இறைவனார் : ~

” முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் / பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது / துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து / நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோம் ” (67)

~ ஆரூரர் : ~ “மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது ” ~ (68)

இறைவனார் : ~

~ ” மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் / பெற்றனை ; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க / அற்சனை பாட்டே ஆகும் :; ஆதலால் மண் மேல் நம்மைச் / சொற்றமிழ் பாடுக ” ~(70)

ஆரூரர் : ~ ‘” வேதியனாகி என்னை வழக்கினால் வெல்ல வந்த / ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட / கோதிலா அமுதே இன்றுன் குணப் பெருங் கடலை நாயேன் / யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன் ? ” ~(72)

இறைவனார் : ~ ” முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே / என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் “” ~ (73)

~ கொத்தாரா மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால் / மெய்த் தாயினும் இனியானை அவ் வியன் நாவலூர் பெருமான் / ” பித்தா பிறைசூடி ” ,எனப் பெரிதாந் திருப் பதிகம் / இத் தாரணி முதலாம் உலகெல்லாம் உய்ய எடுத்தார் ~ (74)

***** *****

07-01-01 / இந்தளம் ~

~ பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா / எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை / வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் டுறையுள் / அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~

***** ***** *****

~ நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னை /

பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன் / வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் / ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~ (02) ××××× ×××××

~ ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய் / வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய் / தேனார் பெண்ணைத் தென்பால்

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் / ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~(07)

××××× ×××××

இறைவனார் : ~ ” இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு “”-(76)

==========

~ அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் / செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் / உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் / பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் ~ (77)

××××× ××××× ×××××

பிற அகச் சான்றுகள் .

÷÷÷÷÷÷÷÷÷÷

~ கற்பகத்தினைக் கனக மால் வரையைக் காம கோபனைக் கண்ணுதலானைச் / சொற்பதப் பொருள் இருளறுத்தருளும் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில் / அற்புதப் பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்ட/ நற் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே ~

07- 68-06 / தக்கேசி ~

~ ××××× ×××××

~ அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆளதாக என்று ஆவணங் காட்டி / நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத் திரள் தொத்தினை முத்திக்கு /ஒன்றினான் தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெடச் சீறும் / குன்ற வில்லியை மெல்லியயலுடனே கோலக்காவினில் கண்டு கொண்டேனே .

– 07-62-05/ தக்கேசி

×××××× ××××××

~ “வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட “” – 07-17-08

++++-++++

“” ஆவணம் செய்து ஆளுங் கொண்ட வரை ” – 07-05-10 ( ஓணகாந்தன் தளி )

=============

“” நேசத்தினால் என்னை ஆளுங் கொண்டார் “” -07-19-02( திரு நின்றியூர் )

÷÷÷÷÷ ÷÷÷÷÷

“” ஒட்டி ஆட் கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை “”

~07-59-10( திருவாரூர் )

~~~~~ ~~~~~ ~~~~

” மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து எனை ஆண்டு கொண்டானே “”

~ 07- 70-02( திருவா வடுதுறை )

×××××××××××××××

திரு நாவலூர் திருத்தலம் ஏகுதல் / வழி படல் ~ அகச் சான்றுகள் உடைய பாடல்கள் ! /நட்டராகம் .

===== ===== =====

~ கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய / மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் / ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட / நாவலனார்க்கிடமாவது நந்திரு நாவலூரே “”-(07-17-01)

==========

~ தன்மையினால் அடியேனைத் தாம் ஆட் கொண்ட நாட் சபை முன் /வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார் / புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்து என்னை போகம் புணர்த்த / நன்மையினார்க் கிடமாவது நந் திரு நாவலூரே ~07- 17-02

××××××××××

” வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்டு / நஞ்சம் கொண்டார்க்கிட மாவது

நந் திரு நாவலூரே ” ~ 07-17-04 –

============

“” ஓர் ஆவணத்தால் / எம்பிரானார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட /நம் பிரானார்க்கிடமாவது நந் திரு நாவலூரே “”

~07-17-03 ~××××××× ×××××× ×××××

திருத் துறையூர் ஏகி தவ நெறி வேண்டுதல் ~

~ சிவன் உறையும் திருத் துறையூர் சென்றணைந்து ” தீ வினையால் / அவ நெறியில் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத் / தவ நெறி தந்தருள் ” ,என்று தம்பிரான் முன் நின்று / பவ நெறிக்கு விலக்காகும் திருப் பதிகம் பாடினார் . ~(79)

××××× ××××××

07-13 / தக்க ராகம் ~

~ மலையார் அருவித் திரள் மா மணியுந்திக் / குலையாரக் கொணர்தெற்றி யோர் பெண்ணை வடபால் / கலையார் அல்குல் கன்னியராடும் துறையூர் / தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவ நெறியே ~01

+++++

~ செய்யார் கமலம் மலர் நாவலூர் மன்னன் / கையால் தொழுதேத்தப்படும் துறையூர் மேல் / பொய்யாத் தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் / மெய்யே பெறுவார்கள் தவநெறிதானே ~ 11-

————————–

~ புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்தருளப் பெற்றார் ~(80)

தில்லையில் நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு எண்ணினார் ~

பெண்ணை நதியைக் கடந்து ,மாலையில் திருவதிகைப் புறத் தணைந்தார் .(82)-

~ உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி / விடையவர்க்குக் கைத் தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து /அடையுமதற் கஞ்சுவன் ” ,எனறந் நகரில் புகுதாதே /மடை வளர் தம் புறம்பணையில் சித்தவட மடம் புகுந்தார் (83)

அங்கு அடியவர்களுடன், வீரட்டானத்து இறைவர் தாள் விருப்புடன் நினைந்து , இரவில் பள்ளி கொண்டார் ~ (84)

*************

~ அது கண்டு வீரட்டத்து

அமர்ந்தருளும் அங்கணரும் /முது வடிவின் மறையவராய் முன்பொருவர் அறியாமே/ பொது மடத்தின் உட் புகுந்து பூந்தாரான் திரு முடிமேல் / பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார் ~ (85)

ஆரூரர் :~ ((உணர்ந்து கண்டு ) ” அரு மறையோய் உன் அடி என் சென்னியில் வைத்தனை ”

இறை : ~ “” திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண் ”

~ஆரூரர் அப்பால் சென்று துயிலல் ~(86)

அங்கும் அவர் திரு முடிமேல் மீண்டும் இறைவனார் தாள் நீட்டினார் ~

ஆரூரர் : ~ ( வெகுண்டு ) ” இங்கு என்னைப் பல காலும் மிதித்தனை நீ யார் ? ”

இறை : ~ “அறிந்திலையோ ”

(- என மறைந்தார் )(87)

~ ×××××× ××××××

~ ” செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் ” எனத் தெளிந்து / தம்மானை அறியாத சாதியார் உளரே ” ,என்று / அம்மானைத் திரு வதிகை வீரட்டானத்து அமர்ந்த / கைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார் .(88)

×××××××××××

07/38 ~ கொல்லிக் கௌவாணம் ~

~ தம்மானை யறியாத சாதியா ருளரே சடை மேற்கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் / கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானைக் கறை கொண்ட கண்டத் தெம்மான்றன் அடி கொண்டென் முடிமேல் வைத்திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் / எம்மானை எறி கெடில வட வீரட்டானத் துறைவானை இறை போதும் இகழ்வன் போல் யானே (01)

**************

தென் திசையில் கங்கை எனும் திருக் கெடில நதியில் திளைத்தாடி திரு மாணிக்குழி அடைந்தார்.

திருமாணிக்குழி இறைவனாரை வழிபட்டு , திருத்தினை நகரை அடைந்து பணிந்தவருக்கு வரந் தருவானைப் போற்றி வணங்கி வண் தமிழ் பாடினார் !

×××××× ×××××××

~ பிணி கொளாக்கை பிறப் பிறப் பென்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணக்காள் / துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று / அணி கொள் வெஞ்சிலையாலுகச் சீறும் ஐயன் வையகம் பரவி நின்றேத்துந் / திணியும் வார் பொழில் திருத் தினை நகருட் சிவக் கொழுந்தினைச் சென்றடை மனனே -( 02)

××××× ××××× ×××××

*** தில்லை மருங்கணைதல் *****

“‘ தன் மருங்கு தொழுவார் தம் மும்மை / மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம் பதியின் எல்லை வணங்கி . – (92)

=====

“” பன் மலர்ப் புனித நந்தன வனங்கள் பணிந்து சென்றனன் மணங் கமழ் தாரான். ” -(94)

“” மிகு சேண் செல ஓங்கும் தட மருங்கு வளர் மஞ்சிவர் இஞ்சித் தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் (95)

“” தில்லை ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தரத் திசை வாயில் முன் எய்தி . ( 97)

×××××××

அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ / முன் பிறைஞ்சினர் யாவர் என்றறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து /”

~ திரு வீதி புகுந்தார்.( 98) ~

+++++++++++

~எண்ணில் பேருலகு அனைத்திலும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம் / மண்ணில் இப் பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தனவாகிப் / புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பில் விளங்கும் /

அண்ணல் ஆடு திருவம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி (102)

÷÷÷÷÷÷÷÷÷÷

~ பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கு பேரம்பலம் மேரு / வருமுறை வலங் கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் / அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த / திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் . (104)

=====+++ =====

~ வையகம் பொலிய மறைச் சிலம்பார்ப்ப மன்றுளே மாலயன் தேட / ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த / கைகளோ திளைத்தக் கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்புந்தச் / செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு . (105) ~

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

~ ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள , அளப்பரும் கரணங்கள் நான்கும் / சிந்தையே ஆகக் , குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக , / இந்து வாழ் சடையானாடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின் / வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் .- (106)

××××××××××××

~ ” தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திரு நடங் கும்பிடப் பெற்று / மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் “” ,என்று / கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம் மலர் உச்சி மேல் குவித்துப் / பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் . -( 107 )

+++++++++++++

இறைவனார் :~ ( வான் வாக்கு ) ” தரளம் எறி புனல் மறி திரைப் பொன்னி / மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால் “”- (108)

÷÷÷÷÷÷÷÷

இறைவனாரிடம் விடை கொண்டு , அம்பலத்தை வலங் கொண்டு வணங்கி ,எழு நிலை கோபுரம் கடந்தார்.

நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திரு வீதியை வணங்கி , அப் பதியின் தென் திசை வாயிலை வணங்கிப் பின் கொள்ளிடத் திரு நதியைக் கடந்தார் . ( 110 )

– திருச் சிற்றம்பலம் –

-ௐௐௐௐௐௐௐௐ-

கோமல் / 220618

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *