மணலூர்பேட்டை காக்கனேசுவரர் திருக்கோவில் திருப்பணி No ratings yet.

மணலூர்பேட்டை காக்கனேசுவரர் திருக்கோவில் திருப்பணிக்கு உதவுங்கள்

சிவாயநம…. ஆருரா தியாகேசா…

தங்களிடம் நம் அப்பன் திருப்பணிக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள்….

ஈசனுக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள்

எந்தை காக்கனேஸ்வரர் திருவருளால் இன்று அம்பாள் சன்னதியின் மேல் தளம் மூடப்பட்டது…. உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி….
மேலும் பெருமானின் ஆலய விமானப்பணிகளும் மஹா மண்டப திருப்பணி … 32 கால் கொண்ட கருங்கல் வசந்த மண்டப திருப்பணி மட்டுமே மீதம் உள்ளது .

ஆனால் திருப்பணி தொடர்ந்து நடத்திட போதுமான அளவு வசதி இல்லாத காரணத்தால் திருப்பணி தடைபட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம் ..

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் திருப்பணி செய்து கொண்டு இருக்கிறோம்.. ஆனாலும் இன்னும் 50 சதவிகிதம் கூட நிறைவடைய வில்லை…

உதவும் உள்ளம் கொண்டவர்கள் ஏதேனும் ஒரு திருப்பணி முன்னின்று நடத்தி தரலாம் அல்லது ஒரு மூட்டை சிமென்ட்…. ஒரு செங்கல் … ஒரு நாள் கூலி என எப்படி வேண்டுமானாலும் உதவலாம்… உதவி செய்யுங்கள் தங்களின் காலில் விழுந்து கேட்கிறேன்.. உதவி செய்யுங்கள் உலகினை ஆளும் ஈசன் அமர நிழல் இல்லாமல் வெளியில் இருக்கிறார்… நம் அப்பன் ஆலயம் இல்லாமல் இருக்கிறார்….

பல ஆயிரம் காலத்திற்கு முன் முனிவர்களாலும் சித்தர்களாலும் ரிஷிகளாலும் மன்னர்களாலும் நம் முன்னோர்களாலும் பூஜித்து வழிபாடு செய்யப்பட்ட ஆலயம்… காலத்தின் கோலத்தால் சிதலமடைந்தது.. அந்த சிதலமடைந்த ஆலயத்தை திருப்பணி செய்து மீட்டெடுத்து மீண்டும் ஆலயம் வழிபாட்டிற்கு கொண்டுவருவதற்கு உதவி செய்யுங்கள்….

தங்களிடம் நம் அப்பன் திருப்பணிக்காக கை ஏந்தி நிற்கின்றோம்🙏🙏 உதவி செய்யுங்கள்….

ஈசனுக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள் ..

தொடர்புக்கு

சிவ.எழில்
9080432395

விக்னேஸ்வரன்
9940037776
மணலுர்பேட்டை…

🙏மேன்மைக் கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்🙏 சிவாயநம திருச்சிற்றம்பலம்….

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *