வாட்சப் நிலை (whatsapp status) ஆக வைப்பதற்க்கு சைவ சமய செய்திகள் கொண்ட சில படங்களின் தொகுப்பு 4.67/5 (3)

வாட்சப் நிலை (whatsapp status) ஆக வைப்பதற்க்கு சைவ சமய செய்திகள் கொண்ட சில படங்களின் தொகுப்பு

வாட்சப்பில் பகிரக்கூடிய நம் சைவ சமயத்தின் அடிப்படை செய்திகளைக் கொண்ட சில படங்கள். இதை பதிவிறக்கம் செய்து வாட்சப்பில் நிலையாக வைத்துக் கொள்ளலாம்.

இறைவன் ஒருவனே என்று சைவ சமயம் அறுதியிட்டுக் கூறுகிறது. முதலும் முடிவும் இல்லாத  பேரொளியாக திகழும் இறைவனுக்கு நாம் இட்ட பெயர் சிவன்.

தமிழர்களின் மரபு வழி அடையாளம் என்ன ? மொழி தமிழ், நாடு பாரதம், சமயம் சைவ சமயம் உள்ளடக்கிய இந்து மதம், தமிழ் வேதம் நான்கு, பன்னிரு திருமுறை, குரு நாயன்மார்கள், தலைவன் ஒருவனே சிவபெருமானே.

தமிழர்களின் புனித நூல் எது? தமிழ் வேதங்கள் நான்கு. 28 சிவ ஆகமங்கள், பன்னிரு திருமுறை, பதினெட்டு புராணங்கள், பதினான்கு சாத்திரங்கள், இன்னும் எண்ணற்ற அருளாளர்களின் நூல்கள்.

தமிழர்களின் குருமார்கள் யாவர்? இறைவனே எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு உபதேசம் செய்தது வேதங்களும் ஆகமங்களும். அதன் வழிப்படி நின்று அந்த நெறிப்படி நமக்கு வாழ்ந்து காட்டி குருவாக திகழ்பவர்கள் நாயன்மார்கள், சமய குரவர்கள், சந்தான குரவர்களும் அவர்கள் ஞானப் பரம்பரையும் வரும் ஆச்சாரியர்களும் ஆவர்.

பன்னிரு திருமுறை நூல்கள் எவை ?

இறைவனை நாம் அடைவதற்க்குத் துணையாக நிற்கும் கருவிகள், திருநீறு, உருத்திராக்கம், ஐந்தெழுத்து நமசிவாய மந்திரம் ஆகும்.

கடவுள் என்று சொல்லக்கூடிய இறைவன் ஒருவனே. ஆனால், தெய்வங்கள் எண்ணற்றவை. தெய்வங்களுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நானே கடவுள் என்று நம் நாட்டில் ஊருக்கு ஒருவன் சொல்லி ஏமாற்றி நன்றாக சம்பாதித்து காணாமல் போய் இருக்கிறார்கள். நம் நாட்டில் மட்டுமல்ல, சில நாடுகளில் இருந்து நானே மெய்யான தேவன் என்று உலகம் முழுவதும் சொல்லிப் பிழைக்கும் கூட்டமும் உண்டு. உயிர்கள் ஒரு போதும் இறைவனாகவே முடியாது. இறைவன் வேறு, உயிர்கள் வேறு.

இறைவனுடைய உண்மையான சொரூபம், உருவம், நிறம், பெயர் இல்லாமை. ஆனால், அத்தகைய இறைவனால் மக்களுக்கும் உயிர்களுக்கும் ஒரு நன்மையும் விளையாது. ஆகவே இறைவன் பெரும் கருணை கொண்டு, உயிர்களின் கண்களுக்குத் தெரிவது போல பல உருவங்கள் கொண்டு வருகிறான். எல்லாவற்றிற்க்கும், எல்லா உருவத்திற்க்கும் சொந்தக்காரன் அவனே.

இறைவனால் எந்த உருவமும் எடுக்க இயலும். அவனது உடல் வேறு. நமது உடல் வேறு. நமது உடல் மாயை என்ற அழுக்கிலிருந்து செய்யப்பட்டது. இறைவன் அழுக்கோடு கலவான். எனவே, இறைவனானவன் மனித உருக் கொண்டு வர இயலும். ஆனால், கருவுற்ற அன்னையில் வயிற்றில் மனிதனாக ஒரு போதும் பிறவான். அவனே பிறக்கமாட்டான் என்றால், அவனுக்கு குமாரன் என்ற தேவ குமாரன் எப்படி வருவான் ? விநாயக பெருமானையும், முருகப்பெருமானையும், வீரபத்திரரையும், பைரவரையும், இறைவனின் சக்திகளாகத் தான் நாம் காண்கிறோம். நம்முடைய எளிமையான புரிதலுக்காக, அவர்களை இறைவன் பிள்ளைகளாக பாவித்து சொல்கிறோமே ஒழிய, இறைவனுக்கு காமமும் கிடையாது. குழந்தை குட்டியும் கிடையாது.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *