விதியை வெல்வது எப்படி ? இந்த பிறவியில் இது தான் அனுபவிப்பாய் என்று விதித்த பின், அதை வெல்ல முடியுமா? 4.6/5 (15)

விதியை வெல்வது எப்படி ? விதியை வெல்லும் திருமுறை பதிகங்கள்.

கருவாகி உருவாகி குழந்தையாய் குமரி குமரனாய் வாலிபனாய் இல்லத்து அரசனாய் பக்குமுற்று பெரியோனாய் நாம் திருவாகிச் செல்லும் முன்னர் தான், நாம் சந்திக்கும் இன்னல்கள் எத்தனை எத்தனை ? எத்தனை விதமான பிரச்சனைகளை நாம் வாழ் நாள் முழுவதும் துரத்திச் செல்கிறோம் ? வாழ்நாள் முழுவதும் நாம் பிரச்சனைகளைே துரத்திக் கொண்டிருந்தால், நம்மைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சிந்திப்பது எப்போது ?

அற்பமான இவ்வுலக இன்ப துன்பங்களைத் துரத்தவா நாம் பிறந்து வந்துள்ளோம் ? அதிசயமான அற்புதமான மனித பிறவியை நாம் அற்பமான பொருளில் வீணாக்கலாமா ? நம்மையும் இறைவனையும் உணர வேண்டுமானால், நாம் நம் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நாம் நிம்மதியான வாழ்கையும் இன்பமான வாழ்கையும் வாழ ஆரம்பித்தால் தான், நாம் இறைவனைப் பற்றி சிந்திப்போம். வழிபாடுகளில் உழன்று இறையனுபவமான பேரின்பத்தை அனுபவிக்க முடியும்.

அவ்வாறாயின், முதல் படியாக, நாம் இவ்வுலகத் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நம் வினைகள் நம்மைத் துரத்தி வந்து துன்பங்கள் கொடுக்கும். முதலில் புதிய வினைகள் செய்யாமல் இருக்க சபதம் ஏற்க வேண்டும். பின்னர், பழைய வினைகளைக் கழிக்க வேண்டும். பழைய வினைகள் நம்மை வாட்டி வதைக்கும். ஊழ் வந்து நம்மைத் துரத்தும். அதிலிருந்து விடுபட்டால் தான் நாம் இறை சிந்தனையில் திளைத்து சிவ புண்ணியங்களைச் சேர்க்க முடியும்.

அப்படி இவ்வுலத் துன்பங்களிலிருந்து விடுபட ஏதாவது வழி அல்லது கருவி இருக்கிறதா அல்லது மந்திரம் இருக்கிறதா ? இருக்கிறது. அது தான் பன்னிரு திருமுறைப் பதிகங்கள். இவை அனைத்தும் மந்திரங்கள். நாம் திருமுறை ஓதும் ஒலியானது நம் துன்பங்களைப் போக்கும் வலிமையுடையது. அருமருந்தானது. நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நாம் சந்திக்கும் துன்பங்களுக்கு ஒவ்வொரு மருந்து உள்ளது. அந்த மருந்துகளின் பட்டியல் தான் பலன் தரும் திருமுறைப் பதிகங்களாகும்.

இந்த பதிகங்களை உள்ளன்போடு நம்பிக்கையோடு இறைவனின் திருமுன் பாடி வந்தால், அந்த துன்பங்கள் காணாமல் போகும். இது நம் குருமார்களின் வாக்கு. இது வேத வாக்கு. இது இறைவனின் திருவாக்கு. இவ்வாறு நம் துன்பங்களை எளிதாகக் கடக்கும் வழியைக் கற்றுக் கொண்டு விட்டால், நாம் நம் கணிசமான நேரத்தை இறை வழிபாட்டில் செலுத்தி சிவ புண்ணியங்களைச் சேர்க்கலாம் அல்லவா ? இப்பிறவியில் வரும் துன்பத்தை வெல்லும் ரகசியம் அறிந்தால் தானே, அடுத்து பிறப்பு இறப்பு என்னும் மா துக்கமாகிய பெரும் துன்பக் கடலை கடக்கும் வழியைத் தேடிச் செல்வோம் ?

ஆகவே, இவ்வுலகில் இப்பிறப்பில் நமக்கு வரும் துன்பங்களைப் போக்கவும், எளிதாக கடக்கவும் ஓத வேண்டிய பதிகங்களின் பட்டியல் இங்கே உள்ளன. இதை அனைவரும் அறிந்து படித்து ஓதி துன்பங்களிலிருந்து விடுபட்டு சிவபிரானின் வழிபாடுகளில் உங்கள் காலத்தைச் செலவிடுங்கள்.

இந்த பதிகங்கள் அனைத்தும் YouTube இல் பார்த்து படித்தும் கூடவே பாடியும் ஓதலாம். இந்த பட்டியில் உள்ள அனைத்து பதிகங்களைையும் காண:

விதியை வெல்வது எப்படி ? YouTube Playlist

விதியை வெல்வது எப்படி பதிகங்களின் பட்டியல்

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *