அப்பிபட்டி தேனி மாவட்டம் சைவத் திருவிழா
அடியார் பெருமக்கள் திருப்பாதம் போற்றி
சைவத் திருவிழா அழைப்பிதழ்
வருகின்ற 28 / 05 / 2017 அன்று
மீனாக்ஷியம்மை உடனமர் ஆலவாய் அண்ணல் சொக்கநாதப் பெருமான் திருவருளாலும்..
கமலாம்பிகை உடனமர் வீதிவிடங்கப் பெருமான் திருவருளாலும்
நம்மை ஆளும் நாயகர் சிவகாமியம்மை உடனாடு தில்லை அம்பலவாணர் திருவருளாலும்….
சமய குரவர்கள், சந்தான குரவர்கள், குருமார்கள் குருவருளாலும்.
தேனி மாவட்டம் அப்பிபட்டி கிராமத்தில்..
பாரில் சைவம் தழைக்கும் பொருட்டு.. உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டு
சீர்போற்றும் அடியார் வழிபாடு மற்றும் சமய சொற்பொழிவு நடத்த பெருமான் திருவுள்ளம் கூடியுள்ளது..
ஈரோடு நசியனூர் திருமுறை திருக்காவணம் அறக்கட்டளை தலைவர் சிவதிரு. ஹரிஹர தேசிகர் அய்யா அவர்கள் அருளுரை ஆற்றவுள்ளார்..
மேலும் பல ஓதுவார் மூர்த்திகள் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்..
திருமுறை பண்ணிசை வழிபாடு நடத்தப்பெற உள்ளது…
ஆகையால் அடியார் பெருமக்கள் வந்திருந்து விழாவில் கலந்து கொண்டு மனம் , மொழி , மெய்யினால் வாழ்த்தி எல்லாம் வல்ல கருணைமாக்கடல் சிவபெருமானின் திருவருளை பெற வேண்டுகிறோம்…
அடியார் பெருமக்கள் , ஆன்மீக மெய்யன்பர்கள் எழுந்தருளுக..
வழி : –
தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கம்பம், குமுளி, செல்லும் பேருந்தில் ஏறி சின்னமனூர் நிறுத்தத்தில் இறங்கவும்…
அங்கிருந்து அப்பிப்பட்டி ஷேர் ஆட்டோ வசதி உண்டு..
அலைபேசி :
சிவ. விஜய் கர்ணல் : 9597364320
சிவ. வெங்கடேஷ் குமார் : 9688925987