சிறுவர் சமயம் பாடம் புத்தகம்
செய்தி ஆசிரியர்: சிவதிரு சத்தியகுமார்.
கிட்டத்தட்ட 700-800 ஆண்டுகள் அந்நியர்களின் அடாவடித்தனமான போர் மற்றும் ஆளுமைப் பிடியிலிருந்து மீண்டு, நாம் தற்போது தான் 70 ஆண்டுகள் ஆகியுள்ளன. நம்மை நாமே யார் என்று தற்போது தான் உணர்ந்து வரும் தருணம் இது. நம் சமயங்கள் புத்துணர்ச்சி பெற்று ஓங்கி மீண்டும் மலரும் காலம். நாம் நம் சமயங்களை முழுவதுமாக உணர்வது ஒரு புறம் இருந்தாலும், நம் சமய புதையலை அடுத்த தலைமுறைக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே எடுத்துச் செல்ல வைப்பது நம் தலையாய கடமையிலும் முதல் கடமையாகும். ஆகவே, அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக, அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி அவர்களுக்குள் நம் சமயத்தை ஆழமாக விதைப்பது இன்றியமையாதது. அந்த வழியில், அவர்களுக்கான சமய பாடம் புத்தகம் (இலங்கை வெளியீடு) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்து, நீங்களும் கூடவே உட்கார்ந்து அவர்களோடு சேர்ந்து இன்பமாக படித்தும் ஆழ பதியுமாறு செய்யுங்கள்.
சிறுவர் சைவ பாடம் – புத்தகம்
இந்த சிறுவர் பாட புத்தகங்கள் நம் வலைதளத்தின் பாடசாலை பகுதியில் சேமிக்கப் பட்டுள்ளது.