மகாசிவராத்திரி முழு இரவு ஜெபம் செய்ய தயாராகியாச்சா ? விடுமுறை கோரிக்கை No ratings yet.

மகாசிவராத்திரி முழு இரவு ஜெபம் செய்ய தயாராகியாச்சா ? விடுமுறை கோரிக்கை

பூமி சுற்றி வருவதில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் புனிதமான ஒரு இரவு என்றால், அது மகாசிவராத்திரி தான். இந்த மகாசிவராத்திர முழுவதும் சிவனை சிந்தையில் வைத்து சிவனோடு மிக எளிதாக ஐக்கியமாகும் ஒரு ஈடு இணையற்ற அற்புதமான காலமாகும்.  இந்த மகாசிவராத்திரியை கொண்டாட, ஈசா யோகா மையம் சார்பில் முழு இரவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குருவின் வழிகாட்டுதலோடு தியானம் செய்தல், தெய்வீகம் பரவக்கூடிய இசை, இறைவனை நினைந்தும், இறைவனின் கருணையை நினைந்தும் ஏற்படும் ஆனந்தம் மற்றும் நடனம், குருவின் உபதேசம், பயிற்சி பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் என்று இறைவனின் கருணை மழையில் நனைய நிகழ்ச்சி திட்டங்களோடு காத்திருக்கிறது ஈசா யோகா மையம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மகாசிவராத்திரிக்கான விழா நிகழ்ச்சிகளை உறுதி செய்து காத்திருக்கிறது. மாலை இரவு முழுவதும் வரும் கூட்டத்தை சமாளிக்க தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெறுகிறது. மகாசிவராத்திரியை வீட்டில் இருந்து முழுவதுமாக கழிப்பதை விட, வீட்டில் சிறிது நேரம் பூசை செய்து விட்டு, சிவாலயங்கள் சென்று முழுநேரமும் அங்கு நம் நண்பர்கள், உறவினர்கள், சிவனடியார்கள், அங்கு நடக்கும் சொற்பொழிவுகள், தோத்திரங்கள், வழிபாடுகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு கழிப்பதே மிகவும் சிறந்ததாகும்.

மகாசிவாத்திரி அன்று விரதம் இருப்பது எப்படி ? சிவ வழிபாடு செய்வது எப்படி ?

இங்கு நேரடியாக செல்ல இயலாதவர்கள் நேரலையில் வெப்கேஸ்ட் (Webcast) இல் கலந்து கொண்டு வீட்டில் இருந்த படியே இணைந்து அவர்களோடு சிவ சிந்தனையில் திளைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரியின் மகிமை சிறப்புகள் என்ன ?

பண்டிகைகளிலேயே சிறப்பான பண்டிகையாக நாம் தீபாவளி கொண்டாடுகிறோம். ஆனால், ஆன்மீகத்தில் சற்று உள்ளே எட்டிப் பார்த்தவர்கள், மகாசிவராத்திரியே மிகவும் முக்கியமான பண்டிகையாக கருதுகின்றனர். எல்லா பண்டிகைகளும் திருவிழாக்களும் நமக்கு சிறப்பு தான் என்றாலும், மகாசிவராத்திரி மிகவும் சிறப்பான ஒன்றாகும். ஏன் என்றால், இது நம் உயிரான ஆன்மாவை இறைவனோடு கலக்க வைக்கத் தரும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. இதை விட மிகச் சிறந்த வாய்ப்பு வாழ்கையில் வேறு என்ன இருக்கிறது ?

மகாசிவராத்திரி அன்று காலை முதலே விரதம் துவங்கி அன்று சிவாலயங்கள் சென்று வழிபட்டு முழு இரவு தூக்கமின்றி வழிபாடு செய்வதால், அடுத்த நாள் காலையில் நன்றாக தூக்கம் வரும். களைப்பாகவும் இருக்கும். குறிப்பாக அடுத்த நாள் வேலை நாளாக இருந்தால், வேலை கூட சிறிது பாதிக்கும். இந்த மிகச் சிறந்த சிவராத்திரியானதை கொண்டாட நமக்கு விடுமுறை அவசியம். மகாசிவராத்திரிக்கு விடுமுறை வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறுது. மகாசிவராத்திரியின் மகிமையை இன்னும் அனைத்து மக்களும் உணரவில்லை. அதை உணர்ந்துவிட்டால், அனைவரும் விடுமுறை கோருவர். இதை உணர்ந்து தமிழக அரசு மகாசிவராத்திரிக்கு விடுமுறை அளிக்க முன் வர வேண்டும்.

Please rate this

One thought on “மகாசிவராத்திரி முழு இரவு ஜெபம் செய்ய தயாராகியாச்சா ? விடுமுறை கோரிக்கை”

  1. ஓம் நமசிவாய
    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம் பென்னுறு ஆனாய் போற்றி காவாய் கனகதிறலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *