சைவ சமயம் அடிப்படை நுட்பம்

சைவர்கள் இன்று செய்யவேண்டியது யாது ? 5/5 (3)

சைவர்கள் செய்ய வேண்டியது யாது ?

உலகில் பல சமயங்கள் தோன்றி அழிந்துள்ளன. அவற்றில் உண்மைகள் இல்லாமையே அதற்கு மூல காரணம். கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல, மதமாற்றம் செய்பவன் அதே மதமாற்றத்தால் அழிந்துள்ளான். புற சமய நடவடிக்கைகளைப் பார்த்து கோபப்படும் முன்னர், நம் சமயத்தை நாம் எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதை நாம் ஆராய வேண்டும். முதலில் நம் சமயத்தை ஆழமாக அறிந்து கொண்டு, அதன் தத்துவங்களை உணர வேண்டும். புற சமய சிந்தனையை விட மிக முக்கியம், நம் சமயத்தை ஆழமாக உணர்வது. ஆகையால், நம் சமயத்தை உணர்ந்து அதை பரவுவதில் நேரத்தை செலவிடல் வேண்டும்.  சரி, நம் தலைப்புக்கு வருவோம்.

1. ஆனந்தமாக நெற்றி முழுவதும் திருநீறு இடுங்கள். வேலை செய்யும் இடத்திலும் சரி, மக்கள் கூடும் இடங்களிலும் சரி, வீட்டிலும் சரி,  விழாக்களிலும் சரி. எங்கும் நீறணியுங்கள்.
2. உருத்திராட்சம் அணிந்திடுங்கள். பிறரை அணிய ஊக்குவியுங்கள்.
3. தினமும் காலையில் உங்கள் வீட்டில் விளக்கேற்றி, திருமுறை பாடல் ஓதி, சிவபெருமானை எழுந்தருளச் செய்யுங்கள்.
4. தினமும் திருக்கோவில் சென்று அப்பனை தரிசனம் செய்யுங்கள்.
5. தினமும் ஓரிருவரிடமாவது சைவ சமய விடயங்களை பேசுங்கள். சிவபெருமானின் புகழ் பேசுங்கள்.
6. சைவ நிகழ்வுகள் பற்றிய தகவல்களை அறிந்து அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுங்கள். (வீட்டில் வெட்டியாக இருக்கும் நேரம் அனைத்தும், தொலைக்காட்சி பார்க்கும் நேரமும், இதற்கு மாற்றப்படலாம்.)
7. ஆங்கில வார்த்தைகள் பேசுவதை தவிர்த்து பிழையில்லாத தமிழில் பேசுங்கள், எழுதுங்கள். தமிழில் கையெழுத்து போடுங்கள். பொது இடங்களில் தமிழில் எழுதுங்கள்.
8. சைவ நூல்களை படியுங்கள். சொற்பொழிவுகள் கேளுங்கள். ஒவ்வொரு மாதமும் நம் சைவ ஞானம் வளர்ந்து கொண்டே போக வேண்டும்.
9. அனைத்து சிவ பூசைகளும், குரு பூசைகளும், குடமுழுக்குகளும்,  பண்டிகைகளும், திருவிழாக்களும் ஒன்று விடாமல் கலந்து கொள்ளுங்கள்.
10. சிவ தலங்கள் யாத்திரை செய்து கொண்டே இருங்கள். தேவார பாடல் பெற்ற தலங்கள் 276 உம், சிவமலை கோவில்களும், திருவாசக தலங்களும், வைப்புத் தலங்களும் சென்று தரிசனம் செய்யுங்கள்.
11. உங்கள் வீட்டில் உங்கள் வசதிக்கேற்ப, சிவபூசை நடத்துங்கள். திருவாச முற்றோதல்கள், திருமுறை விண்ணப்பம், கூட்டு வழிபாடு, மாகேசுவர பூசை போன்று தொடர்ந்து நடத்துங்கள்.
12. உழவாரப்பணி செய்யுங்கள். உங்களால் முடிந்த ஒரு சிவதொண்டை இடைவிடாது செய்து வாருங்கள்.

 

இந்த 12 உம் செய்து வந்தால், இப்பிறவியில் மிகுந்த பேரின்பமும், சிவபெருமான் தரிசனமும், திருவடிப்பேறும் உங்களுக்கு கிட்டுவது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்.


நாத்திகர்கள் யார் ?

கடவுள் இல்லை என்று சொல்பவன் மட்டும் நாத்திகன் அல்ல. வேத நெறியை ஏற்காத யாவரும் நாத்திகர்களே. இன்றைய உலகில், கடவுள் இல்லை என்று சொல்பவன், புத்தர்கள், முகம்மதியர்கள், கிறிஸ்தவர்கள் என்று யாவரும் நாத்திகர்களே. அன்று சமணர்கள் என்னவெல்லாம் சூழ்ச்சி செய்தார்களோ, அதே போன்றும், அதை விடவும் கொடிய பொய்களை பரப்பவும் தயங்காதவர்கள். இன்று பல பொய்களை பரப்பியும் வருகிறார்கள். இனியும் இவர்கள் புதுப்புது பொய்களையும் உருவாக்குவார்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது திருக்குறள். அறிவு உள்ளவர்கள், யார் எதைக் கூறினாலும் அப்படியே நம்பி விடமாட்டார்கள். மாறாக, அதில் என்ன உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்து மெய்ப் பொருளைக் காண்பவர்கள். இந்த அடிப்படை பகுத்து அறியும் அறிவு நம்மிடம் இல்லாமையால் தான் பல்வேறு விளம்பரங்களைப் பார்த்து ஏமாறுபவர்களும், மதம் மாறுபவர்களும் இன்று இருக்கிறார்கள். இந்த அடிப்படை பகுத்தறிவு இருந்தமையால் தான் இந்தியாவில் கடந்த சில நூற்றாண்டுகளில் பல்வேறு தலைவர்கள் மதம்மாறவில்லை. அநாதியான சனாதன தர்மத்தை உணர்ந்து போற்றி வந்துள்ளனர். ஆனால், நாத்திகர்கள் வெளிநாட்டவர் தூண்டுதலாலும், தம் சொந்த பகுத்தறிவு இன்மையாலும், தங்களுக்கு தெரிந்த பொய்களை பரப்புவர். ஆனால், நாம் என்றும் அடிப்படை பகுத்தறிவை விடாமல் தெளிவாக இருந்து ஞான மார்க்க வழியில் செல்ல வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *