சைவர்கள் செய்ய வேண்டியது யாது ?
உலகில் பல சமயங்கள் தோன்றி அழிந்துள்ளன. அவற்றில் உண்மைகள் இல்லாமையே அதற்கு மூல காரணம். கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல, மதமாற்றம் செய்பவன் அதே மதமாற்றத்தால் அழிந்துள்ளான். புற சமய நடவடிக்கைகளைப் பார்த்து கோபப்படும் முன்னர், நம் சமயத்தை நாம் எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதை நாம் ஆராய வேண்டும். முதலில் நம் சமயத்தை ஆழமாக அறிந்து கொண்டு, அதன் தத்துவங்களை உணர வேண்டும். புற சமய சிந்தனையை விட மிக முக்கியம், நம் சமயத்தை ஆழமாக உணர்வது. ஆகையால், நம் சமயத்தை உணர்ந்து அதை பரவுவதில் நேரத்தை செலவிடல் வேண்டும். சரி, நம் தலைப்புக்கு வருவோம்.
இந்த 12 உம் செய்து வந்தால், இப்பிறவியில் மிகுந்த பேரின்பமும், சிவபெருமான் தரிசனமும், திருவடிப்பேறும் உங்களுக்கு கிட்டுவது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்.
நாத்திகர்கள் யார் ?
கடவுள் இல்லை என்று சொல்பவன் மட்டும் நாத்திகன் அல்ல. வேத நெறியை ஏற்காத யாவரும் நாத்திகர்களே. இன்றைய உலகில், கடவுள் இல்லை என்று சொல்பவன், புத்தர்கள், முகம்மதியர்கள், கிறிஸ்தவர்கள் என்று யாவரும் நாத்திகர்களே. அன்று சமணர்கள் என்னவெல்லாம் சூழ்ச்சி செய்தார்களோ, அதே போன்றும், அதை விடவும் கொடிய பொய்களை பரப்பவும் தயங்காதவர்கள். இன்று பல பொய்களை பரப்பியும் வருகிறார்கள். இனியும் இவர்கள் புதுப்புது பொய்களையும் உருவாக்குவார்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது திருக்குறள். அறிவு உள்ளவர்கள், யார் எதைக் கூறினாலும் அப்படியே நம்பி விடமாட்டார்கள். மாறாக, அதில் என்ன உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்து மெய்ப் பொருளைக் காண்பவர்கள். இந்த அடிப்படை பகுத்து அறியும் அறிவு நம்மிடம் இல்லாமையால் தான் பல்வேறு விளம்பரங்களைப் பார்த்து ஏமாறுபவர்களும், மதம் மாறுபவர்களும் இன்று இருக்கிறார்கள். இந்த அடிப்படை பகுத்தறிவு இருந்தமையால் தான் இந்தியாவில் கடந்த சில நூற்றாண்டுகளில் பல்வேறு தலைவர்கள் மதம்மாறவில்லை. அநாதியான சனாதன தர்மத்தை உணர்ந்து போற்றி வந்துள்ளனர். ஆனால், நாத்திகர்கள் வெளிநாட்டவர் தூண்டுதலாலும், தம் சொந்த பகுத்தறிவு இன்மையாலும், தங்களுக்கு தெரிந்த பொய்களை பரப்புவர். ஆனால், நாம் என்றும் அடிப்படை பகுத்தறிவை விடாமல் தெளிவாக இருந்து ஞான மார்க்க வழியில் செல்ல வேண்டும்.