மங்காமல் திருநீறு பூசி மகிழ்வோம். எங்கும் எப்போதும் திருநீறு பூசியே இருப்போம். No ratings yet.

மங்காமல் திருநீறு பூசி மகிழ்வோம்

திருநீறு இறைவன் திருமேனியில் உறைகின்ற உயர்ந்த பொருள். அதை இறைவனிடமிருந்து நாம் அவனுடைய பிரசாதமாக வாங்கி நாம் அதை அணிந்து கொள்கிறோம். எத்தனை உயர்ந்த பிரசாதம் ? அதனால் தான், அதை கீழே சிந்தி விடாமல் வாங்கி நம் நெற்றியில் முழுதுமாக அணிய வேண்டும் என்று நம் குருமார்கள் கூறுகிறார்கள்.

திருநீற்றின் பெருமையை திருஞானசம்பந்தப் பெருமான் மந்திரமாவது நீறு பாடலில் உரைத்திருப்பதை நாம் அறிவோம். திருநீற்றினால் ஆகாதது என்ன இருக்கிறது ?

காலம் காலமாக சைவ சமயத்தோடு இணைந்து வாழ்ந்து வந்த நம் நாடு, தற்போது, உலகமய தாக்கலின் காரணமாகவும் அந்நிய மதங்களின் ஊடுருவல் காரணமாகவும், உலகில் எங்கும் இல்லாத ஒரு புதிய மதசார்பின்மை என்ற வழியில் தடம் மாறிச் செல்கிறது. திருநீறு பூசுவதை பழமையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அவர்கள் யாருக்கும் திருநீற்றின் பெருமையும், சிவபெருமானின் கருணையும் எள்ளளவு கூட தெரியாது. அவற்றில் சிலவற்றைத் தெரிந்த நாம் தான் அவர்கட்கும் புரியுமாறு எடுத்துச் செல்ல வேண்டும். ஆகையால், திருநீறு இறைவன் பிரசாதம் என்பது மட்டுமின்றி அதை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில் நாம் எப்போதும் திருநீறு அணிந்தே இருப்பது மிக அவசியம். திருநீற்றினை அலுவலகங்களிலும், பள்ளி கல்விக்கூடங்களிலும் அணியுங்கள். இது நம் அடிப்படை உரிமை மட்டுமின்றி அது நிறைந்த நன்மைகளை நமக்கு அளிக்கும். ஆகவே, மங்காமல் திருநீறு எப்போதும் பூசி மகிழ்வோம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *