முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம் 5/5 (1)

முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம்

ௐௐௐௐௐௐௐௐௐ
சிவ சிவ !
********************
முப்புரி நூல் ( பூணூல் )ஞான விளக்கம் !
**************
பூணூல் அணிவது சிவாச்சாரியார்கள் & பிராமணர்களுக்கு மட்டுமே உரியதா ஐயா !
~ எல்லா இனத்தவருக்கும் பொதுவான , நம் இறைவனாரே அணிந்து இருக்கும் போது ஏன் இந்த மயக்கம் ?

முக நூலில் பல அன்பர்கள் வினா தொடுத்திருக்கிறார்
களே !
~ ஆம் ! ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டியது நம் கடமை !
~ விளக்கம் செய்யுங்கள் ஐயா !
~ முப்புரி நூல் அந்தணர் , சத்திரியர் , வைசியர் ,சூத்திரர் என்ற நான்கு குலத்தவருக்குமே உரியது ! அது எல்லோருக்கும் தனி உரிமை !
~ சூத்திரர் என்பது இழிவான குலமா ஐயா ?
~ இவ்வளவு கற்றும் உனக்கு ஏன் இந்த ஐயப்பாடு ?
~ இல்லை , என ஓரளவு அறிவேன் ! ஐயா !
ஆயினும் தெளிய உணர்வதற்கும் , பிறர் அறிந்து தெளிந்து உணர்வதற்கும் , உணர்த்துங்கள் ஐயா !
~ இப் பெரும் பிரிவுகள் ,அவரவர் செய் தொழிலால் அமைந்தவை அல்லால் , சாதி குல ஏற்ற தாழ்வால் அல்ல !
~ விளக்கம் வேண்டும் ஐயா !
~ சிவாச்சாரியார்களும் ,அந்தணர்களும் எவர் உழைப்பால் உண்டு உடுத்து ,உறைந்து சுகித்து வாழ்கிறார்கள் ?
~ உணர்ந்தேன் ஐயா !
பிற குலத்தவர்கள் தான் தம் உடல் உழைப்பாலும் , அரிய செயல்களாலும் அவர்களைத் தாங்குகிறார்கள் !
~சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப் பட்டக் கடமைகள் என்ன ?
~ அகத் தூய்மை புறத் தூய்மைகளுடன் வாழ்ந்து ,வேத ,
ஆகமங்களை ஐயம் திரிபு அற ,அவர்கள் ஆச்சாரியார்களிடம் கற்று , சமய ,விசேட , நிர்வாண தீட்சைகள் ஏற்று ,நித்திய அக்னி வளர்த்து , சுவார்த்த பூசை எனப் படும் தனக்கு உரிய பூசைகள் இயற்றி , பின் ஆச்சாரிய அபிடேகம் செய்யப் பட்ட பிறகே , சிவாலயத்தில் கருவறையில் புகுந்து ,இறைவனை பூசை செய்யத் தகுதி உடையோராவர் !
~ சிவ சிவ !
~ அது மட்டுமல்ல ! ஒரு கன்னியை திருமணம் செய்த பிறகே பூசை செய்ய தகுதி பெறுவர் !
உடல் ஊனங்களும் ,தொடர் நோய் உடையோரும் , நல் ஒழுக்கங்கள் இல்லாதோரும் பூசிக்கத் தகுதி உடையோரல்ல !
~ திருமணம் இதர சுப ,அசுப காரியங்களும் இவர்கள் செய்யலாமா ?
~அவை அந்தணர்களுக்கு
*உள்ளேயே , சில உட்பிரிவினர்களுக்கே உரியவை !
~ சிவாச்சாரியார்கள் குலம் ,இறைவனாரின் ஐந்து முகங்களில் தோன்றிய முனிவர்கள் வழி வந்த மரபினர் என்பது சிவாகம முடிவு !
சிவத்தை மட்டுமே இறைவனாகக் கொண்ட கொள்கையால் அந்தணரினும் மேம்பட்டப் பெருமைகள் உடையோர் !
~ அவர்கள் இல்லற வருவாய்க்கு அரசு , தனியார் பணிகளுக்குச் செல்கிறார்களே ! ஐயா ?
~வகுக்கப் பட்ட நியதிகளை மீறுதல் ,சிவாச்சாரியார் என்ற குலப் பெருமைக்கு உகந்ததல்ல !
உடன் தகுதி இழப்பு ஏற்பட்டு விடும் !
~ போதும் ஐயா !*
அந்தணர்களின் குலப் பெருமைகளை அறிய அவா ஐயா !
அந்தணர்கள் வேதங்களில் வகுக்கப்பட்ட அறநெறிகளை வழுவாது கடைபிடித்துஏனைய குலத்தவருக்கெல்லாம் உதாரணமாக ,ஒரு தவ வாழ்க்கையை வாழக் கடமைப் பட்டோர் !
இவர்களுக்கு வகுக்கப் பட்ட வாழ்வியல் கடமைகள் என்ன ?
இறைவனார் அருளிச் செய்த நான்கு வேதங்களையும் ,ஐயம் திரிபு அறக் கற்க வேண்டும் !
அன்றாடம் முத்தீ வளர்த்து , சிவ பூசை இயற்றக் கடவர் !
~ வேதத்தின் ஞான பாத்த்தை ஆராய்ந்து வழிவழியாக வரும் வம்சத்தாருக்கு கற்பிக்கக் கடமை உடையோர் !
அவர்களில் சிலர் ஆச்சாரியர்களாக அவ் வினத்தவர்களுக்கு உரிய சுப , அசுப கடமைகளையும் , கரும காண்ட விதிப்படி ஆற்றுதற்கு உரியோர் ஆவர் !
ஞான பாதத்தை உணர்த்த ,அக் குலத்தவரில் தக்க ஆச்சாரியார்கள் இல்லா நிலை ஏற்படும் போது , பிற மூன்று குலத்தில் தோன்றிய வேத விற்பன்னர்களிடம் பயில அனுமதி உண்டு !

~ உதாரணம் வேண்டும் ஐயா ?
~ வேத வியாசர் யார் ?
~ பராசர முனிவர் வழி , சத்தியவதி என்ற
மீனவ குலப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பது வரலாறு !
~ மகா பாரதத்தை அருளியவர் யார் ?
~ வியாச மா முனிவர்! பராசர முனிவருக்கும் , சத்திய வதிக்கும் பிறந்தவர் !
இராமாயணத்தை யாத்த வான்மீகி முனிவர் யார் ?
~ சூத்திர குலத்தவர் என்பர் !
~18 புராணங்களையும் அருளிய சூத முனிவர் யார் ?
வியாச முனிவரின் சீடர் ! அவர் எக் குலத்தவர் ?
பிராமணருக்கும் , பிராமணல்லாருக்கும் பிறந்தவர் என்பதாலேயே , சூத முனிவர் எனப் படுவார் !
~ அவர் எவருக்கு 18 புராணங்களையும் போதித்தார் ?
~ நௌமி சாரண்ய பிராமண குலத்தவர் உள்ளிட்ட , முனிவர்கள் அவரை எதிர் கொண்டு ,வணங்கி வரவேற்று ,உபசரித்து ,உயர்ந்த ஆசனத்தில் இருத்தி ,தாங்கள் கீழே அமர்ந்து 18 புராணங்களையும் விரும்பி மீண்டும் மீண்டும் கேட்க ,அவர் , தன் ஆச்சாரியார் வியாசர் , தனக்கு உணர்த்தியவாறு எடுத்து உரைத்தது வரலாறு !
இப்படியாகப் பல வரலாறுகள் உள்ளன ! விரிப்பின் பெருகும் !
~ இறைவனார் சாதி குலப் ஏற்ற இரக்க சிந்தனைகளை , திருமுறை சாத்திரங்களிலும் , திருமுறை , சாத்திர குரு சீடர் உறவு முறையிலும் வைத்து , எல்லா இனத்தவரும் சம நிலையினரே என உணர்த்தியதை உய்த்து உணர்க !
~ பிராமணர்கள் வேறு தொழில் செய்யக் கூடாதா ? ஐயா !
செய்யக் கூடாது !
அவ்வாறு பிற குலத்தவருக்கு வகுக்கப்பட்டத் தொழில்களைச் செய்யின் , நெறிகள் கெடும் ; உலகிற்கே கேடு சூழும் !
இன்றைய நிலை முற்றிலும் மாற்றம் அடைந்திருக்கிறதே ?ஐயா !
அதனால்தான் பஞ்ச பூதங்கள் தம் செயல்களில் வழுவுவதால் வாழ்வியல் கேடுகள் சூழ்ந்து விட்டன !*இதற்கு யாரைக் குறை கூறுவது ஐயா ?
அரசு ,சமுதாயம் இரண்டுமே
குற்றவாளிகள் !
என்ன செய்தால் தீரும் ?
~ எல்லையைத் தாண்டி விட்டது !
இருப்பினும் ஓரளவு முன்னோர் வகுத்த நெறிக்குத் திரும்ப முயலலாம் !
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் !
~ சொல்லுங்கள் ஐயா !
~வேதாகம , தேவாரப் பாட சாலைகள் ஆங்காங்கே தொடங்க வேண்டும் !
சிவாச் சாரியார்களையும்*,
அந்தணர்களையும் ,
அனைத்து ஊர்களிலும் வீடுகள் கட்டிக் கொடுத்துக் குடி அமர்த்த வேண்டும் !
யோக நிலையில் நின்று ,ஞான காரியங்களை நிறைவேற்ற வேண்டிய அவர்களுக்கு இல்லத் தேவைகளைப் பற்றிய எந்த சிந்தையும் இல்லா அளவுக்கு ,தேவையான செல்வ வளங்களை அளித்துக் கண்ணின் மணிபோல் காக்க வேண்டும் !
பயன் என்ன விளையும் !
வானம் சுரக்கும் !
பஞ்ச பூதங்களுக்கான அதி தேவர்களும் , வேதங்களும் , திருமுறைகளும்* *சிவாலய பூசைகளும்,
விழாக்களும் போற்றுதல் செய்யப் படுவது கண்டு ,மகிந்து ஆசி வழங்குவர் !
மக்கள் பூமியிலேயே
துன்பமிலா வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைவர் !
~முன் உதாரணம் ஐயா ?
~சிவாலயத் திருப் பணிகளுக்காக கோவை வசந்த குமார் ஐயா அவர்களுடன் பட்டி தொட்டிகளெல்லாம் 12 ~ஆண்டுகள் அலைந்தவன் நான் !
~அதில் நாங்கள் உணர்ந்தது சோழர்கள் ஆலயங்களை எடுத்து ஆகம விதிகளின்படி
முறைமயாகப் பராமரித்ததும், இறைவனாரே நாட்டை அவர்கள் மேலோங்கி நின்று ,சுவர்க்க போகங்களை மக்களுக்கும் ,அருளிய தூய வரலாற்று நிலைதான் !
இது நடக்கக் கூடிய காரியமா ?
~ ஏன் முடியாது ?
அரசு அற நிலையங்களின் நிர்வாகத்தை பொது மக்களிடையே விட்டு , கண்காணிப்பாளர் என்ற முறையில் காத்தால் போதும் !
அரசு நிதி உதவியே ,மேற் கண்டவாறு மீண்ட சுவர்க்கம் காண்பதற்குத் தேவையில்லை ! ஆனால் சிவாச்சாரியார்களும் ,அந்தணர்களும் ,வேத ,உப நிடத ,சிவாகம சாத்திரங்களின் பிழிவே ,சைவத் திருமுறைகளும் , சாத்திரங்களும் என அறிந்தும் , அவற்றைப் போற்றிக் கொண்டாடததும் , இன்றைய நாளில் அருட் செல்வத்தை அவர்கள் இழந்ததற்குக் காரணம் என்பதை உணர்ந்து , இறைவனிடம் மன்னித்தருள வேண்டி இறைஞ்ச வேண்டும் !
அவைகளை உய்த்து உணர்ந்து , கற்று இறைவனாரைப் போற்றி பயன் பெற வேண்டும் !

ஐயா ! அந்தப் பூணூல் ?
~என்ன ஐயம் ? சாதி ஏற்ற தாழ்வுகளை இறைவனாரே உடைத்து எறிந்த வரலாறுகளைச் சொல்லியும் திருந்த மாட்டாயா ?
ஆதாரங்கள் கேட்பார்களே ஐயா ?*
* அதுவும் சரிதான் !*
*சிறுத் தொண்ட நாயனார் என்ன குலத்தவர் ?*
*~மாமாத்திரர் குலத்தவர் !*
*சூத்திர குலத்தவர் ; மருத்துவத் தொழிலினர் என்பது சிவக் கவி மணி ஐயா அவர்கள் முடிவு ;*
*வன்னிய குலத்தவர் என்பது தவத்திரு ஊரன் அடிகளார் முடிவு !*
*~ *இவர் முப்புரி நூல்*
*அணிந்திருந்த *வரலாறு* *சேக்கிழார் பெருமானால் குறிக்கப் பட்டுள்ளது !*
*சிறுத் தொண்டர் வரலாறு / பாடல் எண் 23 ~ ” முந் நூல் சேர் பொன் மார்பில் சிறுத் தொண்டர் ” ~*
*மகிழ்ச்சி ஐயா !*
*ஆனாலும் ஆகமச் சான்று காட்டினால் ,எல்லா குலத்தவருமான அடியார்களும் , மேலும் , தெளிந்து , முப்புரி நூல் அணிவோம் ஐயா !*
*~ சரி ! மறை ஞான சம்பந்தர் என்ற ஆகம விற்பன்னர் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் !*
*சிவாகமக் கருத்துக்களைத் தொகுத்து 727 குறட்பாக்களாக அருளியுள்ளார் !*
*இதனைப் பதிப்பித்து உரையும் கண்டவர் , எல்லையில்லாப் பெருமைக்குரிய , யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயா அவர்கள் !*
*நூல் பெயர் ~சைவ சமய நெறி ~ உட் தலைப்பு ~ஆசாரியார் இலக்கணம் ~ பாடல் எண் -49 -ல் அந்தணர் ஏழு நூல் தரிக்கக் கடவர் என உணர்த்துகிறார் !*
*பாடல் எண் ~50 =*
*~ மன்னர்க்கு மூன்று அருகமாம் வசியருக்கு இரண்டாம் அன்னியருக்கே ஏகம்* *அருகம் ~ ; அருகம் = பூணூல் /*
*மன்னர்கள் மூன்று , வைசியர்கள் இரண்டும் ஏனைய சூத்திர குலத்தவர் முதலானோர்க்கு ஒரு பூணூலும் தரிக்கக் கடவர் என ஆகம விதியை உணர்த்துகிறார் !*
*சூத்திரர்கள் தரித்தற்குரிய காலம்* *வரையறை செய்தல் .: ~*
*~பாடல் எண் : ~52 -*
*~ தர்ப்பணத்தில் அர்ச்சனையில் ஆகுதியிலும் தரிக்க / விற் பயிலும் சூத்திரர் இந் நூல் ~*
*தர்ப்பண காலத்திலும்* ,
*அர்ச்சனை செய்யும் போதும் , அக்னி காரிய காலத்திலும் இப் பூணூலைத் தரிக்கக் கடவர் !*
*ஆகவே இவர்கள் பூசை செய்வதற்கும் , வேள்வி செய்வதற்கும் உரியர் என அறிக !*
*சூத்திரர்களுள் எக் காலத்திலும் ,பூணூல் தரிக்க உரிமை உடையோர் : ~~*
*~பாடல் எண் 53 ~*
*~இவருள் நைட்டிகன் எப்போதும் தரிக்க /* *அவனியிலும் ஆசை அறுத்தால் ~*
*சூத்திரருள் நைட்டிக பிரமாச்சாரியானவன்* , *மண்ணாசை* ,
*பொன்னாசை* ,
*பெண்ணாசை , ஆகிய மூவகை* *ஆசைகளையும் நீக்கி*
*இருப்பானாகில் எக் காலத்தும் தரிக்கக் கடவன்*.
*ஆக ,ஆகமங்களில் விதிக்கப் பட்டவாறு நால் வகை வருணத்தாரும் , முப்புரி நூல் தரித்தற்கு உரியர் என சிவ பெருமான் வகுத்த ,ஆகம நூல் அனுமதித்துள்ளது காண்க !*
*53 -ஆம் பாடலில் வகுத்த விதி , ஏனைய குலத்தவருக்கும் விலக்கு அன்று என ஊகித்து அறிக !*
*சிறுத் தொண்டர் இல்லறத்தவர் !*
*அவர் முப்புரி நூலணிந்தவர் !*
*ஆகவே , நம் பெருமான் அணியும் முப்புரி நூல் அடியார்களாகிய நாம் எக் குலத்தவராயினும் அணிய உரிமை உடையோம் எனத் தெளிக !*
*ஐயா !*
*குல ஏற்ற தாழ்வு இல்லை எனத் தெளிந்தோம் !* *ஆயினும் மேலும் சில உதாரணங்கள் வேண்டும் !*
*சாதி குல ,ஏற்ற தாழ்வு பார்க்கின்றவர்களுக்கு , சிவத்தின் முன் நிற்கத் தகுதி இல்லை என உணர்த்துவதே பெரிய புராணம் !*
*01 ~ மானக்கஞ்சாறர் புராணம் பாடல் எண் 01 ~ ” நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால் இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடிப் பதி மாறனார் ! ~'”*
*02 ~ ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாயனார் ~பாடல் – 02 ~*
*~03 ~மூர்த்தி நாயனார் / ” அப் பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மைச் / செப்பத் தகு சீர்க் குடி செய் தவம் செய்ய வந்தார் ” ~பாடல் 08 ~*
*~04 ~ திரு நாவுக் கரசு நாயனார் ~*
” *அனைத்து வித / நலத்தின் கண் வழுவாத நடை முறையில் குடி நாப் பண் / விலக்கில் மனை* *ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் / குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும் ~* *பாடல் 15* ~*
*~05 ~ ” மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்துள்ளார் ” ~ சிறுத் தொண்ட நாயனார் புராணம் . பாடல் ~02 ~*
*06 ~ ” தொன்மை நீடிய சூத்திரத் தொல் குலம் / நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார் ~ வாயிலார் நாயனார் புராணம் பாடல் 10~*
*இவை போதுமா ?*
*அந்தணராகிய *அப்பூதி *அடிகள் ,வேளாண் *குடியினரான* ,
*நாவுக்கரசர் பெருமான் திருவடியில் வீழ்ந்து* *வணங்கியதும் ,ஆதி சைவர் ஆகிய நம்பி ஆரூரர் , ஏயர் கோனார் திருவடியில் வீழ்ந்து வணங்கியமையும் நினைவில் கொள்க !*
*ஆக , சைவர்களுக்குள் குல ஏற்ற தாழ்ச்சியே இல்லை என்பது பெருமானே வகுத்த விதி என்பதையும் , முப்புரி நூல் எக்குல சைவருக்கும் உரியது எனவும் அறிக !*
*அடியார்கள் , திரு நீறு உருத்திராக்கத்துடன் முப்புரி நூலும் அணியாகக் கொள்க !*
~கோமல் கா சேகர் / 9791232555 /110817

Please rate this

2 thoughts on “முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம்”

  1. சமஷ்டி உபநயனம் அந்தணர்களுக்கு மட்டுமா .அல்லாதவர்கள் ஏன் செய்வதில்லை பார்த்தசாரதி gsarathy@gmail.com

  2. samashti upanayanam is being conducted for all poor bramin boys.Can it be extended to all nonbramins under blessing of all Mutts.parthasarathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *