சிறுவர்களின் சைவ நிகழ்வோடு நிறைவு பெற்றது கோடை விடுமுறை வகுப்பு 5/5 (2)

சிறுவர்களின் சைவ நிகழ்வோடு நிறைவு பெற்றது கோடை விடுமுறை தமிழ் சைவ வகுப்பு

கோடை விடுமுறையில் சிறிது நேரமாவது நம் பண்பாட்டையும் சமயத்தையும் அறியுமாறு கோடை விடுமுறை சைவத் தமிழ் வகுப்பு நடைபெற்றது சென்னை பள்ளிக்கரணை மற்றும் சித்தாலபாக்கத்தில். இந்த வகுப்புகளை எஸ். எஸ். பவுண்டேஷன் ட்ரஸ்ட், நமசிவாயா பிரார்த்தனை கோபுரம் மற்றும் திருநந்திதேவர் திருக்கூட்டம் இணைந்து நடத்தியது. இந்த ஆண்டின் கோடை கால வகுப்பு சிறுவர்களின் இனிய நிகழ்ச்சிகளோடு மே 28 ஞாயிறு அன்று நிறைவுற்றது.

சிறுவர்கள் மேடையில் போடும் வண்ணம் எழுதப்பட்ட மெய்ப்பொருள் நாயனார் நாடகத்தின் வசனம்.

https://drive.google.com/file/d/0B5oSXjiZfL5aRnlsQWRqQmxJeE0/view?usp=sharing

விழா மேடையமைப்பு

திருநந்திதேவர் திருக்கூட்டத்தின் கயிலாய வாத்திய இன்னிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

கடவுள் வாழ்த்து

இனிய கீர்த்தனை

பரதநாட்டியம்

சிறுதொண்டர் திருமுறைக் குழுவினரின் திருநாளைப்போவார் (நந்தனார்) நாடகத்தின் ஒரு காட்சி

63 நாயன்மார்களின் பெயர்களை உரைத்தலும் கண்ணப்ப நாயனார் மற்றும் பூசலார் நாயனார் ஆகியோரின் வரலாறு உரைத்தலும்

மெய்ப்பொருள் நாயனார் நாடகத்தின் ஒரு காட்சி

திருவாசகம் திருப்பொற்சுண்ணம் பாடலுக்கு கோலாட்டம் ஆடிய குழுவினர்

விடுமுறை வகுப்பில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழும் பரிசுகளும் வழங்கல்

ஆசிரியர்களை வாழ்த்திய போது

மெய்ப்பொருள் நாயனார் நாடகத்தின் காட்சிகள்

இந்த நிகழ்வுகள் போல ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமங்களிலும் நடைபெற வேண்டும் என்று பிறப்பு இறப்பு அற்ற கருணைக் கடலாம் சிவபெருமானிடம் வேண்டிக் கொள்கிறோம். அதற்கு ஆவன செய்வீர்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *