சேக்கிழார் பெரியபுராணம் 5/5 (1)

சேக்கிழார் பெரியபுராணம்

திருநகரச்சிறப்பு
[12/பாயிரம்/130 – 27/05/18]

சிவதீபன்
9585756797

குறிப்பு: “புராணங்கள் அத்தனைக்கும் மணிமகுடமாக விளங்குவது சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த பெரியபுராணமாம்”

அதில் திருநகரச்சிறப்பில் வைத்துப் போற்றப்பெரும் தலம் “திருவாரூர்” திருநகரமாம்

“பவனி வீதிவிடங்கனாக இறைவன் இருந்தாடி அருள்புரியும் தலம் திருவாரூர் திருநகரமாகும்”

“அரியகாட்சியராம் நம் தியாகேசப் பெருமான் தற்காலத்தில் ஆண்டுக்கு ஒருமுறையே வெளிவந்து ஆழித்தேர் ஏறி வீதியுலாப் போகிறார்” அதற்குரிய நாளும் இன்றாம்

இந்நாளில் முன்பு திருவாரூர் நகரத்தில் பசுவின் மனக்கேதம் தீரும் பொருட்டு மகனை தேர்காலில் இட்ட மனுவேந்தருக்கும் உயிர்நீத்த அமைச்சருக்கும் பசுக்கன்றுக்கும் அரசன்மகனுக்கும் பசுவிற்கும் அருள்புரியும் பொருட்டு “வீதிவிடங்கர் எழுந்தருளிய காட்சியை சேக்கிழார் பெருமான் காட்டும் பாடல்” இன்றுநம் சிந்தனைக்கு

பாடல்

தண்ணளி வெண்குடை வேந்தன் செயல்கண்டு தரியாது மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூமழை சொரிந்தார் அண்ணல் அவன் கண்ணெதிரே  அணிவீதி மழவிடை மேல் விண்ணவர்கள் தொழநின்றான்  வீதிவிடங்கப் பெருமான்

பொருள்

உயிர்கள் மாட்டு வைத்த கருணையாகிய வெண்கொற்றக் கொடையினை உடைய கண்டு, ஆற்றாதவர்களாய் நிலவுலகில் உள்ள மனிதர்கள் கண்ணீரைப் பொழிந்தார்கள். வியந்த தேவர்கள் பூமழையைச் சொரிந்தார்கள். அந் நிலையில் அறத்தின் மேம்பட்ட அவ்வரசனின் கண்ணெதிரே அழகிய திருவீதியின்கண், இளைய மழவிடையின்மீது விண்ணவர்களும் தொழுமாறு தியாகேசர் காட்சி கொடுத்தருளினார்.

“விண்ணவர்கள் தொழநின்றான் வீதிவிடங்கப் பெருமான்” என்னும் இடத்தில் ஓதுவார் காட்டும் உருக்கம் இன்று ஆழித்தேரில் ஏறி விண்ணவரும் மண்ணவரும் தொழ வீதிவலம் வரும் பெருமானை கண்முன்னே நிறுத்தும் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *