காரைக்கால் அம்மையார் திருப்பதிகம் -திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 2 No ratings yet.

காரைக்கால் அம்மையார் திருப்பதிகம்

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 2

சிவதீபன் -📱9585756797

குறிப்பு: திருவாலங்காட்டில் “அண்டமுற நிமிர்ந்தாடும் அப்பனது திருநடம் கண்டபோது அம்மை பாடிய பதிகங்களுள் இது இரண்டாவதாம்”

சுடுகாட்டின் காட்சியமைப்புகளையும் பேய்களின் இயல்புகளையும் விரிவாக பதிவு செய்யும் இப்பாடல்கள் மிகுந்த சுவை மிகுந்தவைகளாம்

இறைவனது ஆடல்கோலம் பற்றி விரிவாகப் பேசும் இப்பாடல்களின் நிறைவில் “காடுமலிந்த கனல்வாய் எயிற்று காரைக்கால் பேய்” என்று தம்மை குறித்து கொள்வது அம்மையாருக்கே உரிய தனிப்பெரும் சிறப்பாம்

இப்பதிகத்தின் நிறைவான இரண்டு பாடல்கள் இவை

பாடல்
பண் : இந்தளம்

குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென்று இசைபாட மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே

சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்  ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடியாடப் பாவம் நாசமே
பொருள்

வயிறு பெருத்ததும் சிறிய உருவம் உடையவையும் பெரியதுமான பேய்கள் கரிய இருட்டில் மிகநெருக்கமாக வாயில் தீயை உடைய கோலத்தில் சின்னஞ்சிறிய குழந்தை பேய்களுக்கு விளையாட்டு காட்டியபடி “கொள்” என்ற ஒலியெழுப்பியபடி ஆடும் மயானத்தில் சடைகள் பொன்போல மிளிர்ந்திட விமலன் ஆடுகிறார்

சடைமேல் மதிசூடி சுழன்று சுழன்று திருநட்டம் செய்பவரும் ஆடுகின்ற அரவத்தை இடுப்பில் கட்டியவருமான இறைவரது அருளினால் காட்டில் வாழ்கின்ற கனல்போன்ற பற்களை உடைய காரைக்கால் பேயாகிய நான் சொன்ன இப்பாடல்களை பாடியாடுபவர்களது பாவம் நாசமாகும்

தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

காரைக்கால் அம்மையார் திருப்பதிகம் – திருவாலங்காட்டு மூத்தபதிகம் – 1 No ratings yet.

காரைக்கால் அம்மையார் திருப்பதிகம்

திருவாலங்காட்டு மூத்தபதிகம் – 1
[11/2-1/10,11 – 02/06/18]

சிவதீபன் – 📱9585756797

குறிப்பு: “பதிகம்” என்ற சொல்லுக்கு பத்து பாடல்கள் அடங்கிய தெகுப்பு என்று பெயர்.

தேவார மூவரும் இப்பதிக நடையை அதிகம் கையாண்டிருந்தாலும் இதற்கு முன்னோடியாக தமிழ் பாடியவர் “காரைக்கால் அம்மையாரேயாவார்”
இதுபற்றியே இப்பதிகம் “திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம்” எனப்பட்டது, இது திருவாலங்காட்டில் அருளிச்செய்யப்பெற்றது

திருக்கயிலையை தலையால் கடந்தேறிய அம்மை சிவதரிசனம் செய்து “ஆடும்போது அடியின் கீழிருக்கும் வரம் வேண்டினர்”

அப்பொழுது ஆடல்காட்சி காண்பதற்கு “திருவாலங்காடு வரப்பணித்த இறைவர் பேய்களும் விலங்குகளும் திரியும் ஈமப்புறங்காட்டில் நடனம் ஆடிக்காட்டினார்”

அவ்வாடல் காட்சிகளை பதிவு செய்வதே இப்பாடல்களாம்

பதிகத்தின் கடைக்காப்பு பாடலில் தம்மை “காரைக்கால் பேய்” என்று அம்மையார் குறித்து கொள்ளும் பாங்கு நம் நெஞ்சம் நிறையும் அற்புதக்குறிப்பாம்

பாடல்
பண்: நட்டபாடை

புந்தி கலங்கி, மதிமயங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா
முந்தி அமரர் முழவி னோசை
திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி,
ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து,
பப்பினை யிட்டுப் பகண்டை பாட,
பாடிருந் தந்நரி யாழ மைப்ப,
அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம்
அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே

பொருள்

இறைவனை பற்றி நினைவு இல்லாமல் வாழ்ந்து புந்தி கெட்டு மதி மயங்கி இறந்து போனவருக்காக சாலைகள் சந்திக்கும் இடங்களில் சடங்குகள் செய்தபின் கொண்டுபோய் எரிக்க தக்க இடமான ஈமப்புறங்காட்டில் ஆடுகின்ற அப்பனது இடம் திருவாலங்காடு ஆகும்

பெரும் பேய்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதும் பகண்டை இடுவதும் நரிகள் ஊளையிடுவதுமான காட்டில் ஆடுகின்ற ஆலங்காட்டு ஐயனை காரைக்கால் பேயாகிய யான் சொன்ன பத்து பாடல்களையும் பாடிவழிபடுபவர் சிவகதி பெறுவர்

தவறாமல் கேட்டின்புறுங்கள் கிடைத்தற்கரிய பாடல்கள்🙏🏻🙂

 

Please rate this

சம்பந்தர் தேவாரம் – திருக்கோளிலி திருப்பதிகம் No ratings yet.

சம்பந்தர் தேவாரம்

திருக்கோளிலி திருப்பதிகம்
[1/62/4 – 23/06/18]

சிவதீபன்  – 📱9585756797

குறிப்பு: “திருக்குவளை என்று தற்காலத்தே அழைக்கப்பெறும் இத்தலம் நவகோள்கள் வழிபட்டமையால் திருக்கோளிலி எனப்பட்டது”

திருவாரூருக்கு அருகில் இருக்கும் இவ்வூருக்கு நாகையில் இருந்தும் திருவாரூரில் இருந்தும் பேருந்து வசதிகள் உண்டு

சப்தவிடங்க தலங்களுல் ஒன்றான இத்தலத்தில்தான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்பெற்ற அற்புதம் நிகழ்ந்தது

“சிவபூசையின் மகத்துவத்தை உணர்த்தும் சண்டேச நாயனாரது வரலாற்றை பிள்ளைப் பெருமானார் இத்தலத்து பதிகத்தில் குறித்து பாடியிருக்கிறார்”

“நாளாய போகாமே” என்று துவங்கும் அற்புதமான இத்தல பதிகத்தின் நான்காம் பாடல் இது

பண் : பழந்தக்கராகம்

பாடல்

வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.

பொருள்

மண்ணியாறு கொண்டுவந்த மணலால் அவ்வாற்றின் கரையில் இலிங்கம் அமைத்து மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசுவின் பாலை அபிடேகித்து வழிபட்ட விசாரசருமனது செயலைக் கண்டு அச்சிவபூசையைச் சிதைக்க முற்பட்ட அவன் தந்தையின் காலை அவன் தடிய, அதனைக் கண்டு அவ்விசாரசருமனுக்குச் சண்டீசப் பதவி அருளித் தான் உண்ட கலத்தொடு சூடிய மலர் மாலைகளைச் சூடிக்கொள்ளும் சிறப்பை அளித்தவன், திருக்கோளிலியில் விளங்கும் எமது பெருமான் ஆவான்

அற்புதமான இசை தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

சம்பந்தர் தேவாரம் -இலம்பையங்கோட்டூர் திருப்பதிகம் 4/5 (1)

சம்பந்தர் தேவாரம்

இலம்பையங்கோட்டூர் திருப்பதிகம்
[1/76/1,11 – 29/06/18]

சிவதீபன் -📱9585756797

குறிப்பு: தேவலோக மங்கையாம் “அரம்பை வழிபட்டதால் அரம்பையங் கோட்டூர் எனப்பட்டு பின்னாளில் இலம்பைய்கோட்டூர் என்றழைக்கப் பெற்றது”

இது ஒரு தொண்டைநாட்டு தலம், திருவள்ளூர் மாவட்டம் கூவம் என்னும் திருவிற்கோலத்தில் இருந்து தென்மேற்கே 4கிமீ தொலைவில் அமைந்துள்ளது, திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் செல்லலாம், அல்லது சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் இருப்பு பாதையில் கடம்பத்தூரில் இறங்கி பேரம்பாக்கம் சென்றும் செல்லலாம்

முப்புர சம்ஹாரத்தின் பொருட்டு சுவாமி தேரில் ஆரோஹணித்து செல்கையில் அவரது கொன்றைமாலை விழுந்த இடத்தில் உண்டான சுயம்பு லிங்கமே இத்தலத்து மூலமூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தேவர்களுக்கு உதவ சென்றமையால் இவருக்கு தெய்வநாதீஸ்வரர் என்றும் அரம்பை வழிபட்டதால் அரம்பேஸ்வரர் என்றும் பெயர்களாம், இத்தல அம்பிகை கோடேந்து முலையம்மை என்ற திருநாமத்துடன் விளங்குகிறார்

பிள்ளைப் பெருமானார் இத்திலத்திற்கு எழுந்தருளியது பற்றி ஒரு செவிவழிச் செய்தியும் இங்கு நிலவுகிறது, “எனதுரை தனதுரையாக” என்ற பெருமானது புகழ்பெற்ற வாக்கியம் இத்தலப் பதிகத்தில்தான் பாடல்தோறும் இடம்பெற்றுள்ளது

பெருமானார் பாடல்களில் வைப்பு தலங்களை குறிப்பது அரிது என்றாலும் இப்பதிகத்தில் முதல் பாடலிலேயே பருப்பதம் கயிலாயம் நெய்த்தானம் துருத்தி உள்ளிட்ட தலங்களை குறிப்பது எண்ணி மகிழத்தக்க ஒன்றாம்

பண்: குறிஞ்சி

பாடல்

மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு மாசிலாச்சீர்மறைக் காடுநெய்த்தானம்
நிலையினானெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும்
இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.

கந்தனைமலிகனை கடலொலியோதங் கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியாருறைபதி நான்மறைநாவ னற்றமிழ்க்கின்றுணை ஞானசம்பந்தன்
எந்தையார்வளநக ரிலம்பையங்கோட்டூ ரிசையொடுகூடிய பத்தும்வல்லார்போய்
வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும் வீடுபெற்றிம்மையின் வீடெளிதாமே.

பொருள்

கயிலாய மலையை இடமாகக் கொண்டுறையும் இறைவன், சீபருப்பதம், துருத்தி, மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு, நெய்த்தானம் ஆகிய தலங்களில் நிலையாக எழுந் தருளியிருப்பவன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய பெண் மான்களோடு துயில்வதும், சோலைகளில் வாழும் ஆண் மயில்கள் பெடைகளைத் தழுவி அகவுவதுமாய இலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ?

மணம் நிரம்பியதும், கடல் ஒலியோடு அதன் வெள்ளம் பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும் சிவன் உறைபதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினனும் நற்றமிழ்க்குஇனிய துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார் உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீதுபாடிய இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்.

தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

Please rate this

சேக்கிழார் பெரியபுராணம் 5/5 (1)

சேக்கிழார் பெரியபுராணம்

திருநகரச்சிறப்பு
[12/பாயிரம்/130 – 27/05/18]

சிவதீபன்
9585756797

குறிப்பு: “புராணங்கள் அத்தனைக்கும் மணிமகுடமாக விளங்குவது சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த பெரியபுராணமாம்”

அதில் திருநகரச்சிறப்பில் வைத்துப் போற்றப்பெரும் தலம் “திருவாரூர்” திருநகரமாம்

“பவனி வீதிவிடங்கனாக இறைவன் இருந்தாடி அருள்புரியும் தலம் திருவாரூர் திருநகரமாகும்”

“அரியகாட்சியராம் நம் தியாகேசப் பெருமான் தற்காலத்தில் ஆண்டுக்கு ஒருமுறையே வெளிவந்து ஆழித்தேர் ஏறி வீதியுலாப் போகிறார்” அதற்குரிய நாளும் இன்றாம்

இந்நாளில் முன்பு திருவாரூர் நகரத்தில் பசுவின் மனக்கேதம் தீரும் பொருட்டு மகனை தேர்காலில் இட்ட மனுவேந்தருக்கும் உயிர்நீத்த அமைச்சருக்கும் பசுக்கன்றுக்கும் அரசன்மகனுக்கும் பசுவிற்கும் அருள்புரியும் பொருட்டு “வீதிவிடங்கர் எழுந்தருளிய காட்சியை சேக்கிழார் பெருமான் காட்டும் பாடல்” இன்றுநம் சிந்தனைக்கு

பாடல்

தண்ணளி வெண்குடை வேந்தன் செயல்கண்டு தரியாது மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூமழை சொரிந்தார் அண்ணல் அவன் கண்ணெதிரே  அணிவீதி மழவிடை மேல் விண்ணவர்கள் தொழநின்றான்  வீதிவிடங்கப் பெருமான்

பொருள்

உயிர்கள் மாட்டு வைத்த கருணையாகிய வெண்கொற்றக் கொடையினை உடைய கண்டு, ஆற்றாதவர்களாய் நிலவுலகில் உள்ள மனிதர்கள் கண்ணீரைப் பொழிந்தார்கள். வியந்த தேவர்கள் பூமழையைச் சொரிந்தார்கள். அந் நிலையில் அறத்தின் மேம்பட்ட அவ்வரசனின் கண்ணெதிரே அழகிய திருவீதியின்கண், இளைய மழவிடையின்மீது விண்ணவர்களும் தொழுமாறு தியாகேசர் காட்சி கொடுத்தருளினார்.

“விண்ணவர்கள் தொழநின்றான் வீதிவிடங்கப் பெருமான்” என்னும் இடத்தில் ஓதுவார் காட்டும் உருக்கம் இன்று ஆழித்தேரில் ஏறி விண்ணவரும் மண்ணவரும் தொழ வீதிவலம் வரும் பெருமானை கண்முன்னே நிறுத்தும் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

திருப்பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா No ratings yet.

திருப்பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

கோயில் திருப்பதிகம்
[9/இசை/19/6 – 28/05/18]

சிவதீபன்
9585756797

குறிப்பு: சோழ வளநாட்டில் காவிரியின் தென்கரையில் திருவையாற்றுக்கு அருகிலுள்ளது, திருப்பூந்துருத்தி என்னும் பாடல்பெற்ற சிவத்தலம்.

இத்தலத்தில் “அந்தணர் குலத்தில் தோன்றியவர், நம்பிகாடநம்பி நம்பி என்னும் பெயர், அந்தணர் குலத்தில் தோன்றியவர்கள் தங்கள் பெயருடன் அமைத்துக்கொள்ளும் சிறப்புப் பெயர். காடவர் என்ற சொல் இவர் பெயருடன் இணைந் திருத்தலை நோக்கி இவர் பல்லவர் மரபில் தோன்றியவர் என்பர்.

இவர்தம் திருவிசைப்பாப் பதிகங்களை நோக்கும்போது இவர், மூவர் பாடிய தேவாரப் பாடல்களை இடைவிடாது ஓதி இன்புறுபவர் என்பதும், கண்ணப்பர், கணம்புல்லர், சேரமான்பெருமாள் முதலிய நாயன்மார் களைப் போற்றுவதில் விருப்புடையவர் என்பதும் நன்கு புலனாகும்.

இவர் திருவாரூர் சிதம்பரம் என்ற இரண்டு தலங்களுக்கும் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் அருளிச்செய்துள்ளார். திருவாரூர்த் திருப்பதிகத்துள் இரண்டு பாடல்களே உள்ளன.

கோயில் திருப் பதிகத்தைத் தேவாரத் திருப்பதிகங்களில் காணப்பெறாத சாளரபாணி என்ற ஒரு பண்ணில் இவர் பாடியுள்ளார்.

பாடல்
பண்: சாளரபாணி

அகலோக மெல்லாம் அடியவர்கள்
தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ
தேடாதே
புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள்
நண்ணியசீர்ச்
சிவலோக மாவதுவும் தில்லைச் சிற்றம்பலமே.

பொருள்

நீ புகுவதற்கு வேறு உலகம் உண்டு என்று நீ கருதாதபடி, மேல் உலகங்களை அடைவதற்கு உரிய நெறியானே எய்திய புண்ணியங்களால், இந்நிலவுலகம் முழுதிலுமுள்ள அடியவர் கள் உன்னைச் சூழ்ந்து நிற்க, அதனால் பொருந்திய சிறப்பினையுடைய சிவலோகமாகவே தில்லைத் திருப்பதியின் சிற்றம்பலம் அமைந்துவிட்டது.

தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

சிவதீபன்
📱9585756797

Please rate this

கருவூர்தேவர் திருவிசைப்பா 4.67/5 (3)

கருவூர்தேவர் திருவிசைப்பா

திருமுகத்தலை திருப்பதிகம்

சிவதீபன்
📱9595756797
குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் திருத்தருப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினத்திற்குச் செல்லும் பெருவழியில்,

திருத்தருப்பூண்டியில் இருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள கொக்காலடி இறங்கி வடக்கே மானாச்சேரி செல்லும் மணல்வழியில் ஒரு கி.மீ தொலைவில் உள்ள பன்னத்தெரு என்னும் ஊரே இம்முகத்தலை என்னும் ஊர்.

இவ்வூர்க்குரிய திருவிசைப்பாவில் மூன்று இடங்களில் “பன்னகாபரணர்” என இறைவர் அழைக்கப்படுகின்றார்.

ஆதலின் இதுவே முகத்தலை என்பர் சைவ அன்பர் திருவாளர் தி.கு. நாராயணசாமி நாயுடு அவர்கள். இத்தலம் மதுரை ஆதீன அருளாட்சியில்
விளங்குவது.

இத்தலம்தான் முகத்தலை என்பது முடிந்த முடிபன்று அது ஆய்வுக்குரியது என்பாரும் உளர்,

ஆனால் இங்குள்ள சுவாமி தலையும் முகமும் காட்டும் வண்ணத்தில் இருப்பதாலேயே இது “முகத்தலை” எனப்பட்டது என்பாரும் உளர்

பண்: பஞ்சமம்

பாடல்

புவன நாயகனே அகவுயிர்க்கு அமுதே
பூரணா ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்
பசுபதீ பன்னகா பரணா
அவனி ஞாயிறு போன்று அருள்புரிந்து அடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமை நீங்குதற்கே.

பொருள்

எல்லா உலகங்களுக்கும் தலைவனே! உன்னை அடைந்த முத்தான்மாக்களுக்கு அமுதம் போன்ற இனியனே! எல்லாப் பண்பு நலன்களாலும் நிறைந்தவனே! வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பவளம் போன்ற சிவந்த வாயினை உடைய மாணிக்கமே! உன்தொண்டுகளைச் செய்யும் அடியவர்பால் இரக்கம் காட்டிஅருளும் உயிர்களுக்குத் தலைவனே! பாம்புகளை அணிகளாக உடையவனே! இவ்வுலகிலே சூரியனைப் போன்று ஞானஒளி பரப்பி அருள்புரிந்து, தன்னுணர்வில்லாத அடியேனுடைய துணைஇல்லாத நிலை நீங்குதற்கு அடியேன் உள்ளத்திலும் திருமுகத்தலை என்ற திருப்பதியில் உள்ள வெண்மையான ஒளியை உடைய மணிகள் பதிக்கப்பட்ட அழகிய கோயிலிலும் விரும்பி உறைகின்றவனே! உன் திருவருள்வாழ்க.

தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம் No ratings yet.

தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
கோவை.கு.கருப்பசாமி
______________
தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்:
(நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்பதற்காக……….)
______________
தேவாரம் தனிப்பாடல் அல்லாத வைப்புத் தல தொடர்எண்: (2)

தேவாரம் பாடலுக்குள் அமைந்த வைப்புத் தலம்:

வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:

அகத்தீஸ்வரர் திருக்கோயில், அகத்தீச்சரம்:

இறைவன்: அகத்தீஸ்வரர்.

இறைவி: அறம்வளர்த்தநாயகி, அமுதவல்லி.

தல விருட்சம்: அகத்தி.

தல தீர்த்தம்: அகத்திய தீர்த்தம்.

வழிபட்டோர்: அகத்தியரும், அவர் துணைவியார் லோபா முத்திரையும்.

தேவார பதிகம் உரைத்தவர்:
அப்பர்.

ஆறாம் திருமுறையில், எழுபத்தொன்றாம் பதிகத்தில், எட்டாவது பாடல்.

இருப்பிடம்:
கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் சென்று, கொட்டாரம் என்னுமிடத்தை அடைந்து, அங்கிருந்து அகத்தீஸ்வரம் செல்லும் சாலையில் ஒரு கி.மி. சென்றால் வழியில் வடுகன்பற்று என்ற இடம் வரும்.

இங்கிருந்து அருகாமையிலுள்ள அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவிலை அடையலாம்.

கன்னியாகுமரியிலிருந்து சுமார் ஆறு கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் பதினைந்து கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

✉ஆலய அஞ்சல் முகவரி:
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,
வடுகன்பற்று,
அகத்தீஸ்வரம் அஞ்சல்,
கன்னியாகுமரி மாவட்டம்,
PIN – 622 101

ஆலயப் பூஜை காலம்:
தினமும் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

இத்தலத்தின் இப்பதிகப் பாடலில் ஈச்சுரம் என வரும் தலங்களை வகுத்து அப்பர் அருளிச் செய்துள்ளார்.

இத்தலம் வெள்ளிமலை, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் முள்ளிமலை ஆகிய மூன்று மலைகளால் சூழப்பெற்று உள்ளது.

அத்திரி முனிவர் வழிபட்டதால் இறைவனுக்கு அத்திரீசுவரர் என்ற பெயரும் உண்டு.

அம்பாள் பரமகல்யாணி என்று பெயருடன் காட்சி தருகிறாள்.

தீர்த்தம் அத்திரி தீர்த்தம் மற்றும் கடனா நதி.

சிவலிங்கத்தின் பின்பகுதியில் தலைமுடி இருப்பதைப் போன்ற தோற்றம் உள்ளது.

பின்புறக் கருவறைச் சுவரில் உள்ள சிறிய சாளரம் வழியே இதை தரிசிக்கலாம்.

பிருகு, அத்திரி முனிவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு காட்சி கண்டுள்ளனர்.

அத்திரி முனிவரால் உண்டாக்கப்பட்ட கங்கை இன்றும் சிவசைல மலையில் ஆயிரத்து ஐநூறு அடி உயரத்தில் அத்திரி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தீர்த்தத்தின் அருகில் முருகருக்கு ஒரு கோவில் இருககிறது.

அத்திரி முனிவரால் உண்டாக்கப்பட்ட கங்கை கருணையாற்றுடன் கலந்து சிவசைலம் கோவிலுக்கு வடக்குப் பக்கம் ஓடி திருப்படைமருதூர் தாமிரபரணி நதியுடன் கலந்து பாய்ந்தோடுகிறது.

தல அருமை:
அகத்தியர் வழிபட்டத் தலமாதலால், இது ‘அகத்தீச்சுரம்’ எனப்பட்டது.

கோயில் உள்ள இடம் வடுகன் பற்று ஆகும்.

அகத்தியர், தம்முடைய மனைவி லோபாமுத்திரையுடன் வழிபட்ட தலம்.

இக்கோயில் பாண்டிய மன்னன் ஜயச்சந்திர ஸ்ரீ வல்லபன் என்பவனால் கட்டப்பட்டவையாகும்.

சிறப்புகள்:
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும்.

கோயில் கருங்கல்லினால் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது.

அழகிய மணவாளப் பெருமாள் சந்நிதி தனியாகவும் உள்ளது.

சோழர்கள் காலத்தில் இக்கோயில் சிறப்புற்று விளங்கியதை இங்குள்ள கல்வெட்டுக்களால் அறியலாம்.

குறிப்பு:
அகத்தீச்சுரம் என்ற பெயரில் பல தலங்கள் உள்ளன.

திண்டிவனம் – பாண்டிச்சேரி சாலையில் உள்ள கிளியனூரில் உள்ள சிவாலயம் அகத்தீஸ்வரம் என்ற பெயருடைன் உள்ளது.

அகத்தியர் தன் மனைவி லோகமுத்திரையுடன் இத்தல இறைவனை வழிபட்டுள்ளார்.

அகத்தியர் வழிபட்டதால் இத்தலம் அகத்தீச்சரம் என்று பெயர் பெற்றது.

அகத்தியருக்கும், லோபமுத்திரைக்கும் இத்தல இறைவன் தலவிருட்சமான அத்தி மரத்தின் கீழ் திருமணக் கோலம் காட்டி அருளியுள்ளார்.

அழகிய மணவாளப் பெருமாள் சந்நிதியும் தனியாகவுள்ளது.

இந்தக் கோவிலில் உள்ள கல்வெட்டில் குமரி மங்கலத்துக்குத் திரு அகத்தீஸ்வரமுடைய மாதேவன்” என வரும் தொடரால் குமரிமங்கலம் என்பது ஊரின் பெயராகவும், அகத்தீஸ்வரம் என்பது ஆலயத்தின் பெயராகும்.

குலோத்துங்க சோழன் அகத்தீச்சுரமுடைய ஈசனார்க்கு வழங்கிய நிவந்தம் இந்தக் கல்வெட்டு சாசனத்தில் இருக்கின்றது.

ஆலயத்தின் பெயரே இன்றைய நாளில் ஊர்ப் பெயராயிற்று என்பதும் தெளிவாகிறது.

நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால் ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல் ஈடுதிரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி இறைவன் உறை சுரம்பலவும் இயம்புவோமே.

கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக!

திருச்சிற்றம்பலம்.

தேவாரம் வைப்புதலங்களின் நாளைய பதிவு, அயவந்தீஸ்வரர் திருக்கோயில், அசோகந்தி.

____________
அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.
____________
இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுர உயர்வதற்க்கு உபயம் அனுப்பி விட்டீர்களா?

நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.

இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாக அமையும்.

மனம் நினைக்க மகேசன் அருளாவான்!
உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!

இராஜபதியில் கைலாசநாதர் திருக்கோயிலில் திருக்கோபுரம் அமைவதற்கு கடந்த இரு வாரங்களாக அடியார்களிடம் பதிவுடன் சென்று யாசகம் கேட்கிறேன்.

சிலர் உபயம் அளித்திருக்கிறார்கள். சிலர் அனுப்புவதாய் கூறியிருக்கிறார்கள்.

அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.

இத்துடன் இராஜபதி ஆலய காணொலியும், வாசிக்கும் பத்திரிக்கையும் இணைத்தனுப்பி உள்ளோம்.

படித்து, உபயம் அளியுங்கள்.
அடியார்களே!, பக்தர்களே, பொதுஜனங்களே! ஆலய கோபுர வளர்ச்சிக்கு அவசியம் உபயம் அளியுங்கள்!

பணம் அனுப்ப வேண்டிய முகவரி.

கைலாஷ் டிரஸ்ட்
இந்தியன் வங்கி.
*கோவில்பட்டி கிளை
A/Ç no: 934827371
IFSC code: IDIBOOOKO51
Branch code no: 256

_____________
திருக்கோபுரம் அமைய உபயம் அளியுங்கள்!
திரும்ப பிறப்பில்லா நிலையெதுங்கள்!!

Please rate this

தேவாரத் திருத்தலங்கள் No ratings yet.

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

தேவாரத்தை பிடி! கயிறை பதி!!
தேவாரம் பாடல் நாட்டில் அமைந்துள்ளது பெண்ணாகடம் என்னும் ஒரு ஊர்.

இவ்வூரில் எழுநூறு ஆண்டுளுக்கும் முன்னால் அச்சுதக் களப்பாளர் என்ற வேளாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

இவர்  சைவசமயத்தைத் தழுவி வந்தவர். ஈசனிடம் மிகவும் பக்தி பூண்டவர். இவருக்கு நெடுநாட்களாக மக்கட் பேறு இல்லாமலிருந்ததால், வருத்தமுற்று மிகவும் மனம் கணத்திருந்தார்.

யார் யாரோரெல்லாம் குழந்தை பேறு வாய்க்க பரிகாரங்களைக் கூறினர். சொன்னவர்களின் யோசனைகளின்படி அத்தனை வகையான பரிகாரங்களைச் செய்ய நினைத்தார்.

ஆனால், பரிகாரங்களை செய்வதற்கு முன் தனது குருவைச் சந்தித்து தன் எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டு அவர் ஆசியைப் பெற்று அதன்பிறகே பரிகாரங்களை மேற்கொள்ளலாம் என எண்ணியிருந்தார்.

அதன்படியே தம்முடைய குலகுருவாகிய  சகலாகம பண்டிதரிடம் போய் தம் குறை  நீங்க வழிகாட்டுமாறு கேட்டு நின்றார்.

குருவானர் அவர் உடனே தம்முடைய திருமுறைப் பாராயண கட்டுகளில் உள்ள தேவாரத்தை எடுத்து கயிறு சாத்திப் பார்த்தார்.

அந்தக் காலத்தில் நிலவி வந்த ஒரு ஜோதிட சாஸ்திர முறை இது. (கிளி ஜோசியம்போல) கயிறு சாத்திப் பார்த்தல் என்றும் இதைக் கூறுவர்.

அதாவது, தேவாரம் போன்ற நூலை எடுத்துக்கொண்டு, கண்களை  மூடிக்கொண்டு, ஒரு கயிறை எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தில் கயிறை பதிக்க வேண்டும்.

கயிறு எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ அந்தப் பக்கத்தைப் பிரித்துப் படித்தால் இறைவன் அருளால், அந்தப் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் பாட்டின் மூலம்  தீர்வு காணப்பெறுவர்.

பொதுவாக இந்தவகை சாஸ்திரம் அனைவருக்குமே தெரியும் என்றாலும், இப்படி குரு ஸ்தானத்தில் உள்ளவர் மூலமாகத் தீர்வு காண்பது  அப்போதைய வழக்கமாக இருந்து வந்தது.

அவ்வாறு கயிறு பதித்து பார்த்ததில், ‘பேயடையா பிரிவெய்தும்’ என்ற தேவாரப் பதிக பார்வைக்கு கிடைத்தது.

அதில் ‘பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம் பெறுவர்’ என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றார்.

அச்சுதக் களப்பாளருடைய குறையும் பிள்ளை  இல்லை என்பதுதானே! அவர் குறைக்கு இறைவனே பரிகாரம் கொடுத்தது போல அந்தப் பாட்டு அமைந்திருந்தது.

அதைக் கண்ட பண்டிதரும் இறைவன்  திருவருளை நினைத்து அதிசயித்து, மகிழ்ந்து சொல்லொணாத ஆனந்தம் அடைந்தார்.

பின், நீ திருவெண்காட்டுத் தலத்திற்குச் சென்று அங்குள்ள முக்குள நீரில் மூழ்கி, இறைவனை வழிபட்டுக் கொண்டு அங்கு சிலகாலம் தங்கும்படி களப்பாளரைப்  பணித்தார் சகலாகம பண்டிதகுரு.

தன் குருவின் கட்டளைபடி திருவெண்காடு சென்றார். யாவையும் செய்தார் களப்பாளர், தன் மனைவியுடன் ஊர் திரும்பினார்.

அந்நிகழ்ச்சிக்குப் பிறகு களப்பாளரின் மனைவி கருவுற்று, ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள்.

திருவெண்காட்டு  மூர்த்தியை வழிபட்டதன் பயனாகப் பிறந்த  குழந்தையாதலால் இதற்குச் ‘சுவேதனப் பெருமாள்’ என்று நாமத்தைச் சூட்டி பெற்றோர்கள் குழந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர்.

இந்தக் குழந்தையே  பிற்காலத்தில் சிவஞானபோதம் என்னும் சைவ சாஸ்திர நூலை இயற்றியது.
சந்தானாசாரியர்களில் முதல்வராகத் திகழ்ந்த மெய்கண்டார் இவர் ஆவார்.

சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் யாவற்றிற்கும் மூலம், சிவஞானபோதம். அது பிறக்கக் காரணமூர்த்தியாக இருந்தவர் மெய்கண்டார்.

அவர் திருஅவதாரம் செய்ய  உறுதுணையாக இருந்தது, ‘பேய் அடையா பிரிவு எய்தும்’ என்று தொடங்கும் ஒரு தேவாரப்பாடல் ஆகும்.

இந்த தேவாரப் பாடலை சம்பந்தர் பெருமான் பாட உருவாக்கமானது எப்படி? என்பதை வாசியுங்கள்.

திருவெண்காடு தலத்திற்குச் சென்றாலே, ஆன்மிகச் சூழலான இங்கு, தீய எண்ணங்களெல்லாம் நம்மைத் தீண்டாது ஒழிந்து, நாம் இறைவனைச் சார்ந்த எண்ணங்களிலேயே லயிப்பதை உணர முடியும்.

ஒவ்வொரு தலத்தின் பயன்கள் கருதியே நம் நாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஆன்மிக வழிகாட்டல்கள் யாவையும் அமைந்திருக்கின்றன.

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த்  தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்கிறார்.
-தாயுமானவர்.

சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்து விளங்கும் திருவெண்காடு, பழமையான தலங்களில் ஒன்று.

இங்கே சோம தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி  தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.

இந்த மூன்று தீர்த்தங்களே முக்குளத் தீர்த்தம் எனவாகும்.

புனிதமான இந்தத் தீர்த்தங்களில் மூழ்கி எழுவோர்க்கு, தாம் நினைத்த பல  பயன்களைப் பெறுவர் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்து வருகிறது.

ஒரு சமயம், திருவெண்காட்டிற்கு ஒருமுறை  திருஞான சம்பந்தப் பெருமான் எழுந்தருளினார்.

சம்பந்தரைப் பார்க்க பல ஊர்களிலிருந்தும் வந்தனர் பக்தர்கள். தங்கள் மனதிலுள்ள குறைகளை சம்பந்தரிடம்  சொல்லி, தங்கள் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தனர் ஒவ்வொருவரும்.

ஒரு பக்தர் சம்பந்தரிடம், என்னுடைய மனைவியை நெடுநாட்களாகப் பேய்  பிடித்து அழைக்கலைத்தது.

இதைப் பார்த்த ஒரு பெரியவர் எங்களிடம், நீ வெண்காட்டு முக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடு. சுவேதாரண்யேஸ்வரரையும்பிரும்மவித்தியா நாயகியையும் வழிபடு சரியாகிவிடும் என்று  சொன்னார்.

அவர் கூறியதை நம்பி நானும், இங்கே வந்து முக்குள நீரில் நீராடி இறைவனை வழிபட்டோம்.

பீடித்திருந்த பழைய தொல்லையிலிருந்து நீங்கி, இப்போது என் மனைவிக்கு யாதொரு குறையும் இன்றி, நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம். எல்லாம் இந்த ஈசன் செயல் என்றார்.

இதனால், நாற்பத்தெட்டு நாட்கள் எங்கள் சங்கல்பத்தை முடித்துக்கொள்ள எண்ணி இங்கு தங்கியிருக்கிறோம் என்றார்.

மற்றொருவரோ,…சம்பந்தரைப் பார்த்து, தங்களை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது, என்று கூறி அவரும் அவர் மனைவியும், சம்பந்தப் பெருமான் காலில் விழுந்து வணங்கினர்.

திருஞானசம்பந்தர் சுற்று முற்றும் பார்த்தார். அங்கு வேறு சில மகளிர்களும் பேயாடுவதைக் கண்டு மனம் போக கண்டார்.

மேலும் ஒருவரைப் பார்த்த சம்பந்தர்,….. உங்கள் குறை என்ன? அது நிறைவேறி விட்டதா? அல்லது நிறைவேற்ற வந்திருக்கிறீர்களா? என்று அன்புடன் கேட்டார் ஞானசம்பந்தர்.

அதற்கு அவர், நான் ஒரு பெரும் செல்வந்தன். எனக்கு பங்களா, நிலம் என ஏகப்பட்ட சொத்துக்கள் வைத்திருக்கிறேன்.

ஆனால், இதனால் எனக்கு பயன் என்ன? எனக்குப் பின் இதை அனுபவிப்பதற்குத்  எனக்கு ஒரு வாரிசு இல்லையே என்ற ஏக்கம் எண்ணைத் தூங்கவிடாமல் செய்தது.

தானங்கள் பல செய்தேன். ஊர் ஊராகச் சென்று பல கோயில்களைத் தரிசித்துத்  தவம் புரிந்தேன்.

கடைசியாக இங்கும் அங்கும் அலைந்து இறுதியில் இந்த திருவெண்காட்டுக்கு, என் மனைவியுடன் வந்து முக்குள நீரில் மூழ்கி சிலகாலம்  இருந்து இறைவன் இறைவியைத் தரிசித்து ஊர் திரும்பினோம்.

நாங்கள் ஊர் திரும்பிய ஓராண்டிலேயே என் மனைவி கருவுற்று, எங்களுக்கு ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

அந்தப் பிள்ளைக்கு ‘வெண்காடன்’ என்று பெயரிட்டோம். அந்தக்  குழந்தைக்கு இப்போது ஓராண்டு நிரம்பிவிட்டது.

இதனால் இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில்  இக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு இப்போது இங்கு ஈசனைத் தரிசிப்பதற்க்காக இங்கு வந்திருக்கிறோம்.

குழந்தை செய்த பாக்கியம், தங்களையும்  இன்று வணங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று மகிழ்ந்து சொன்னார்.

இந்தச் செய்தியைக் கேட்டு தம்பதிகளையும், குழந்தையையும் வாழ்த்தி ஆசி கூறினார்  திருஞான சம்பந்தர்.

அடுத்து நிற்பவரிடம் குறைகளைக் கேட்டார்.

எனக்கு வெகு நாட்களாக, தீராத நோய் ஒன்று ஆட்டி வைத்தது. நம்பிக்கையுடன் நாமும் முக்குளம் சென்று நீராடி, இறைவனைத் தொழலாமே என்று  எண்ணினேன். இங்கு வந்து சிலகாலம் தங்கி நீராடினேன். என்ன ஆச்சரியம்! எனக்கு இருந்த நோய் முற்றிலும் மறைந்துவிட்டது, என்று வியப்பு மிக கூறினார்.

யாவற்றையும் கேட்டு அக மகிழ்ந்தார் சம்பந்தர்.

அன்பர்களைச் சந்தித்து  இவ்வளவு நேரம் அவர்களுடைய ஆனந்தமான அனுபவங்களைக் கேட்ட திருஞானசம்பந்தர், அவர்கள் பாவம் போக்கி  நினைத்தவற்றையெல்லாம் அருளும் முக்குளத்தையும், திருவெண்காட்டு அப்பனையும் கண்டு உருகி நின்றார்.

தாம் கண்டவற்றையும், கேட்டவற்றையும்மனதில் எழுப்பி ஈசனை அகத்தால் உணர்ந்து பாட முனைந்தார்.

அதனால் பிறந்தது ஒரு பதிகமே இது. இந்த பதிகமே அச்சுதகாப்பாளரின் குருவானவர், தேவார ஏட்டில் கயிறு பதித்து வழிகாட்டலை வாசித்துக் கூறினார்.

🔔 பேயடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாஒன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் தோயாவாம் அவர்தம்மைத் தீவினையே! என்று.

🙏மூங்கிலைப்போல வழுவழுப்பும், பசுமை நிறமும் கொண்ட தோள்களைப் பெற்ற உமாதேவியைத் தன் பங்கிலே வைத்தருளும் இறைவனுக்குரிய  திருத்தலமாகிய திருவெண்காட்டில் உள்ள முக்குள நீரில் தோய்ந்து ஆடும் செயலுடையாரைத் தீய செயல்கள் சாராது. அவர்களைப் பேய்கள் அண்டாது. முன்பே  அடைந்திருந்தாலும், அவை பிரிந்து நீங்கி விடும். பிள்ளை வேண்டுமென்றால் அதனையும், அதனோடு மனத்தில் வேறு எவற்றை நினைத்தார்களோ   அவற்றையும் பெறுவர். இவற்றை அடைவது பற்றி சிறிதும் ஐயுற வேண்டாம்.

திருச்சிற்றம்பலம்.

_____________
அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.

Please rate this

திருவாதவூரர் திருக்கோவையார் No ratings yet.

திருவாதவூரர் திருக்கோவையார்

இயற்கை புணர்ச்சி – தெய்வத்தை மகிழ்தல்
[8/கோவை/1/6 – 16/05/18]

குறிப்பு: “திருக்கோவையார்” என்பது அகத்துறை செய்திகளின் மூலம் தில்லை கூத்தபிரான் புகழ்பாடும் திருமுறை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை

இதனில் தலைவன் தலைவி செவிலி தோழி நற்றாய் உள்ளிட்டோரது பேச்சுகளுக்கு இடையே தில்லையில் திருக்கூத்தாடும் ஆடவல்லார் புகழ்பேசப்படும்

மேலோட்டமாகப் பார்த்தால் நேரடியாக அகத்துறை செய்திகள் மட்டும்தான் இதனில் பேசப்படுகிறது என்பதுபோல தோன்றும் என்றாலும் நுணுகிப் பார்ப்போர்க்கு மட்டுமே திருக்கோவையார் ஒரு சைவசித்தாந்த பெட்டகம் என்பது விளங்கும்

கோவையாரின் முதல் அதிகாரமான “இயற்கை புணர்ச்சி” என்பது தலைவனும் தலைவியும் இயற்கையாக முதல்முறை சந்திக்கும் பொழுது ஒருவரைப்பற்றி ஒருவர் சிந்திப்பது பேசுவது முதலான செய்கைகளை கொண்டிருப்பதாம்

இதனில் “தெய்வத்தை மகிழ்தல்” என்பது இத்தகு அழகிய தலைவியை தந்தமைக்கு தலைவனும் வீரமிக்க தலைவனை தந்தமைக்கு தலைவியும் தெய்வத்திற்கு நன்றி கூறுதலேயாம்

அத்தெய்வத்தை “கூடல்தெய்வமாக” கொள்ளுதலும் இங்கு மரபு என்றாலும் அவர்கள் போற்றும் தெய்வம் தில்லை கூத்தபிரானேயாவர்🙏🏻

தற்காலத்திலும் கூட கணவன் மனைவியரோ அல்லது காதலன் காதலியரோ “இவர்/இவள் எனக்கு கிடைப்பதற்கு தெய்வத்துக்குதான் நன்றி சொல்லனும்” என்று கூறுவது வழக்கம் இதுவே “தெய்வத்தை வியத்தலாம்”

பாடல்

வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத் தொல்லோன் கயிலைக் கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவை அல்லால்வியவேன் நயவேன் தெய்வம் மிக்கனவே.

பொருள்

தலைவன் கூறுகிறான்:

கீழ்கடலில் எறியப்பட்ட ஒரு வளைத்தடியானது அலைகளால் எற்றுண்டு மேல்கடலில் மிதக்கும் ஒரு நுகத்தடியில் உள்ள துளையில் போய் செருகிக்கொள்வது எப்படி இறைவனது சித்தமாக நடக்கிறதோ அதே போல “கயிலையில் இருந்து வந்து தில்லை என்னும் பழமையான பதியில் நடனமிடும் தில்லை கூத்தபிரான் எனக்கு அளித்த இவளை தெய்வத்தின் அருள் என்று வியப்பேன் நயப்பேன்”

பின்குறிப்பு: சைவ சித்தாந்த விளக்கப் பாடங்களில் ஆசிரியர்கள் பரசமய நிராகரண விளக்கம் கொடுக்கும் பொழுது

உலகாயுதர்கள் வினைக்கொள்கையை ஏற்க மறுப்பதற்கு மேலே தலைவன் கூறிய “கீழ்கடல் மேல்கடல் நுகத்தடி” உதாரணம் கூறி விளக்கப்படும்

உலகத்தில் அவரவர் வினைவசம் நடக்கும் அனைத்தையும் தானாகவே இயற்கையாக நடக்கிறது என்பது உலகாயுதர்களின் நம்பிக்கை

ஆனால் ஒரு வளைத்தடியும் அதனை கோர்த்து வீச ஏதுவான நுகத்தடியையும் நாம் பிரித்து வளைத்தடியை வங்கக்கடலிலும் நுகத்தடியை அரேபியக்கடலிலும் வீசிவிடுகிறோம் என்று வைத்து கொள்வோம்

அவையிரண்டும் இனி சேருவதற்கு எந்த வாய்ப்பு இல்லை, ஆனாலும் அலையின் வேகத்தில் எற்றுண்ட இரண்டு தடிகளும் மிதந்துவந்து ஒரிடத்தில் சந்தித்து இணைந்து தக்க வகையில் பொருத்தி கொள்கிறது என்றால் இதனை தானாக நடந்ததாக எப்படி கொள்ள முடியும்?? அது இறைவனின் அருளால் அன்றி தானாக நடக்க வாய்ப்பே இல்லை என்பது உலகாயுதருக்கு சொல்லப்படும் மறுப்பு ஆகும்

இந்த செய்தியை எடுத்தாளும் தலைவன், தலைவியும் அவனும் இணைந்தது கீழ்கடலில் எறியப்பட்ட வளைத்தடியும் மேல்கடலில் எறிப்பட்ட நுகத்தடியும் இணைந்தது போல தில்லைகூத்தன் திருவருளால் நிகழ்ந்த ஒன்று என்று உணர்ந்து தெய்வத்திற்கு நன்றி கூறுகிறார்.

Please rate this

சுந்தரரின் தமிழை விரும்பிய சிவபெருமான்….. 4/5 (1)

நமசிவாய_வாழ்க
சுந்தரரின் தமிழை சிவன் எப்படி விரும்பினார் என்று பாருங்கள்.சேரமான்பெருமான்நாயனார் திருக்கயிலாய ஞானவுலா பாடிய வரலாறு!

கொடுங்காளூரில் சேரர் குடியில் பெருமான் கோதையார் என்பவர் இளம் வயதிலேயே சிவபக்தி மிகுந்து அரச வாழ்வைத் துறந்து திருவஞ்சைக்களத்தில் ஆலயத் தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தார்.அப்போது செங்கோற் பொறையன் என்றும் சேர மகாராஜாவுக்குத் திடீரென்று ஞானோதயம் ஏற்பட, அவன் மகுடத்தைத் துறந்து காட்டிற்குச் சென்று தவம் செய்யலானான். நாடு அரசன் இல்லாமல் இருக்க முடியுமா? அதனால் நாட்டின் அமைச்சர்கள் யாவரும் திருவஞ்சைக்களத்திற்குச் சென்று அங்கு சிவத்தொண்டில் ஈடுபட்டிருந்த பெருமான் கோதையாரை அரசுப் பொறுப்பை ஏற்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். அவர் “சிவபெருமான் உத்தரவு தந்தால் அரியணை ஏறத்தயார்’ என்று கூறிச் சிவபெருமானைத் துதித்தார். சிவபெருமானும் சிற்சில சகுனங்கள் மூலம் அவர் இசையை தெரிவிக்க ஒரு சுபயோக தினத்தில் முடி சூட்டிக் கொண்டார். தினந்தோறும் நெடுநேரம் சிவபூஜை செய்வதைத் தவிர்ப்பதில்லை.

ஒருநாள் யானை மீது அமர்ந்து சகல விருதுகளுடன் நகரைப் பவனி வரும்போது ஒரு சலவைத் தொழிலாளி உவர் மண்ணைச் சுமந்து வந்தான். அப்போது சிறிது மழை பெய்யவே உவர் மண் கரைந்து அவன் உடலில் ஒழுகிக் காய்ந்து உடலெங்கும் விபூதி பூசியதுபோல் தோன்றியது. அவ்வளவுதான்… இதனைக்கண்ட யானைமீது அமர்ந்திருந்த மன்னன் கிடுகிடுவென்று கீழே இறங்கிப்போய் அந்த நபரை வணங்கினார்! அந்த சலவைத் தொழிலாளியோ அரசர் தன்னை வணங்குவது கண்டு நடுநடுங்கி விட்டான்! அரசரை பலமுறை தொழுது கைகூப்பி, “”மன்னர் பெருமானே! என்ன இது… என்னை நீங்கள் வணங்கலாமா” என்றான். அது கேட்ட மன்னன் (சேரமான் பெருமாள் நாயனார்) நிவீர் திருநீற்று வடிவத்தை எனக்கு நினைவு படுத்தினீர். அடியேன் அடிச்சேரன். நிவீர் வருந்த வேண்டாம். போம்” என்று மறுமொழி கூறி அவனை அனுப்ப அமைச்சர் முதலானோர் மன்னர், சிவனடியார்கள் பால் காட்டும் பரிவையும் மரியாதையையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தனர்.

நாள்தோறும் தவறாமல் மன்னன் செய்யும் சிவபூசையின் முடிவில் #நடராஜப்_பெருமானின் #சிலம்பொலி கேட்கும்! அதனைக் கேட்டால்தான் மன்னனுக்கும் நிம்மதி. தான் நியமம் தவறாமல் பூஜை செய்திருக்கிறோம் என்று மனம் பூரிப்பான்.

இப்படி இருக்கையில் ஒருநாள் பூஜை முடிவில் சிவனது சிலம்பொலி #கேட்கவில்லை! உடனே சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பெரும் வருத்தம்! இனி இவ்வுடல் இருந்து என்ன பயன்? என்று வாளை எடுத்துத் தன்னை #மாய்த்துக் கொள்ளத் துணிந்தார்.

மறு நொடி சிவபெருமான் சிலம்பை ஒலிக்கச் செய்து, “”அன்பனே! அவசரப்பட்டுப் பிராணத் தியாகம் செய்து விடாதே. #சுந்தர மூர்த்தியின் #பாடலில் சற்று ஆடி அமிழ்ந்து விட்டோம். அதனால் வரத் தாமதமாகிவிட்டது!” என்று கூறி சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பெருமையை வெளிப்படுத்தினார்.

சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பெரும் வியப்பு. சிவபெருமானின் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்ட அந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளை நேரில் சென்று தரிசித்திட வேண்டும் என்று நினைத்து உடனே #திருவாரூருக்குச் சென்று சுவாமிகளை வணங்கி நின்றான்.

சுந்தர மூர்த்தி சுவாமிகள் மீது மிகவும் நட்பு பாராட்டிய சேரமான் பெருமான் நாயனார் அவரைத் தம்மோடு கொடுங்காளூருக்கு அழைத்துச் சென்று உபசரித்து மகிழ்ந்தார். பின்னர் சுந்தரர் ஆரூர் சென்றார். இருவரும் மாற்றி மாற்றி இவர் அங்கு சென்று தங்குவதும் அவர் இங்கு வந்து தங்குவதுமாய் இருவரின் நட்பும் மிகப் பலப்பட்டு விட்டது.

ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவஞ்சைக்களம் சென்று சிவபெருமானைத் தரிசித்து வழிபாடு செய்து கொண்டிருந்தார். சிவபெருமான் ஒரு வெள்ளையானையை அனுப்பிச் சுந்தரரை அதில் ஏறிவரும்படி பணித்தார். சுந்தரரும் சிவனால் அனுப்பப்பட்ட அந்த வெள்ளை யானை மீது ஏறி அமர்ந்து திருக்கயிலாயம் நோக்கிச் செல்கையில், தன் தோழரான சேரமான் பெருமாள் நாயனாரை நினைத்து “”அடடா! அவரும் நம்மோடு இருந்தால் மிகச் சிறப்பாக இருக்குமே” என்று எண்ணினார்.

அப்போது கொடுங்காளூரில் அரண்மனையில் நீராடிக் கொண்டிருந்தார் சேரமான் பெருமாள். அந்த நிலையிலேயே தன்னைப்பற்றி சுந்தரர் நினைப்பது பளிச்சென்று அவருக்குப் புலப்பட்டது! உடனே, அப்படியே அருகிலிருந்த குதிரை மீது தாவி ஏறி திருவஞ்சைக்களம் சென்றார். இவர் சென்று அடைவதற்குள் சுந்தரர் ஐராவதத்தின்மீது ஏறி விண்ணில் சென்று கொண்டிருந்தார்.

அதைக் கண்ட சேரமான் தன் குதிரையின் காதில் ஐந்தெழுத்தை (#நமசிவாய) ஓதினார். உடனே அக்குதிரை விருட்டென்று துள்ளித்தாவி விண்ணில் பாய்ந்து விரைவாகப் பறந்து சுந்தரமூர்த்தி நயனாரின் யானையை அடைந்து அதனை வலம் வந்து அதற்கு முன்னால் சென்றது! அதில் அமர்ந்தபடியே சேரமான் சுந்தரரை வணங்கிய படியே இருந்தார்.

இருவரும் கயிலாயத்தை அடைந்து கீழே இறங்கி பல வாயில்களைக் கடந்து பெருமாள் வீற்றிருக்கும் இடத்தை அடைந்தனர். அதன் வாயிலில் சேரமான் பெருமாள் நாயினார் தடுத்து நிறுத்தப்பட்டார். சுந்தரர் மட்டும் உள்ளே சென்று சிவபெருமான் முன் விழுந்து வணங்கித் துதித்துச் சேரர் கோன் வாயிலில் நிற்பதைக் கூறுகிறார்.

சிவபெருமான் புன்னகையுடன் சேரமானை உள்ளே அழைக்கிறார். “”இங்கே உம்மை நாம் அழையாதிருக்க எப்படி வந்தீர்?” என்று வினவ சேரமான் சிவனைப் பன்முறை விழுந்து வணங்கி, “”எனையாளும் எம் பெருமானே!

சுந்தர மூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிச் சென்ற வெள்ளையானைக்கு முன் அவரைச் சேவித்துக் கொண்டே இங்கே வந்து விட்டேன். தேவரீரின் #ஐந்தெழுத்து மந்திரமே யான் ஏறிய புரவிக்கு அந்த மாயசக்தியைத் தந்து இங்கே என்னைக் கொண்டு வந்து சேர்ந்தது. தேவரீர் பொழியும் கருணை வெள்ளம் அடியேனை இங்கே கொண்டு வந்து ஒதுக்கியதால் இப்பேறு பெற்றேன். மலைமகள் நாயகனே! ஒரு விண்ணப்பம். அடியேன் தேவரீரது திருவருள் துணை கொண்டு திருவுலா ஒன்று பாடியுள்ளேன். அதனைக் கேட்டருள வேண்டும்!” என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.

அப்பொழுது சிவபெருமான் இளம் புன்னகையுடன் “”அப்படியா… சரி… அதனைச் சொல்!” என்று திருவாய் மலர்ந்தருள, சேரமான் பெருமாள் நாயனார், உடனே திருக்கயிலாய ஞானவுலாவை ஆசுகவியாகப் பாடிப் பெருமானைக் கேட்கும்படி செய்தார்.

அதனைச் செவிமடுத்த சிவன் அகமகிழ்ந்து அருள் செய்து, “”நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு!” என்று பணித்தார். சேரமான் பெருமாள் நாயனாரும் சிவகண நாதராகிச் சிவமூர்த்திக்குத் தொண்டரானார்.

#சிவாயநம

Please rate this

எம்பிரான் திருஞானசம்பந்த மூா்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம். 5/5 (1)

சிவாயநம.

திருச்சிற்றம்பலம்.

📚 எம்பிரான் திருஞானசம்பந்த மூா்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம்.

📕 மூன்றாம் திருமுறை

📖 67.திருப்பிரமபுரம்.

🎼 பண் : சாதாரி.

🎼 பாடல் எண் : 10

பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா

ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்

கீழிசைகொண் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக்

காழியசில் காழிசெய வேழுலகி லூழிவளர் காழிநகரே.

🔴 பொழிப்புரை :

பாழியில் தங்கும் , யானையை ஒத்த சமணர்களும் , கூட்டமாக வாழும் உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் இறைவனை உணராதவர்கள் . ஏழிசையும் , யாழின் இனிமையும் போன்ற மொழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , கீழுலகில் புகழ்கொண்ட அரசர்களும் , மேலுலகில் வாழ்கின்ற அரசனாகிய இந்திரனும் , மற்றும் சூழ்ந்துள்ளவர்களும் வாழும்பொருட்டு நடனம் புரிந்த இறைவனிடம் ஆடலில் தோற்று , தன் குற்றம் நீங்குமாறு அப்பெருமானை வழிபட்டு காளி அருள் பெற்ற செயல் சப்தலோகங்களிலும் பல ஊழிக்காலமாக பேசப்பட்டு வரும் பெருமையுடைய காழிநகராகும் .

🔵 குறிப்புரை :

பாழி உறை – பாழியில் தங்கும் , வேழம் நிகர் – யானையை யொத்த , பாழ் அமணர் – பாழ்த்த அமணர்களும் . சூழும் – கூட்டமாக உள்ள , உடல் ஆளர் – உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் , உணரா – உணராத , ஏழின் இசை – ஏழு சுரங்களையுடைய , யாழின்மொழி – யாழ் போற் பேசுகின்ற , ஏழையவள் – பெண்ணாகிய அம்பிகையுடன் , வாழும் இறை – வாழ்பவராகிய சிவபெருமான் , தாழும் – தங்கும் , ( இடம் ஆம் ) கீழ் ( உலகில் ) கீழ் உலகில் , சூழ் – சூழ்ந்த அரசு – அரசர்களும் , இசைகொள் – புகழ்கொண்ட , மேல் உலகில் மேல் உலகத்தில் , வாழ் – வாழ்கின்ற , அரசு – அரசனாகிய இந்திரனும் ; வாழ – ( காளியின் துன்புறுத் தலினின்று ) வாழும் பொருட்டு ( நடனம் ஆடுதலில் ) அரனுக்கு சிவபெருமானுக்கு , ஆழிய – ஆழ்ந்த , தோற்ற , சில்காழி – சிலகோவைகளையுடைய மேகலாபரணம் அணிந்தவளாகிய அக்காளி , செய – தன் குற்றம் நீங்கும்படி வந்துபோற்ற , அருள் பெற்ற செயல் ஏழுலகில் – சப்த லோகங்களிலும் , ஊழி – பல ஊழி காலமாக , வளர் – பெருகும் காழிநகர் .

🔥 சிவாயநம.
திருச்சிற்றம்பலம்.

அடியேன்.

📖 சிவ.விஜயகுமாா்.

Please rate this