சைவ சமய சாத்திர நூல்கள்

சைவ சமயத்தின் தலையாய நூல்கள் எவை ? 4.76/5 (17)

சைவ சமயத்தின் தலையாய நூல்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா ?

சைவ சமய நூல்கள் தொகுப்பு.

எந்த ஒரு கிறிஸ்தவரைக் கேட்டால், பைபிள் தான் எங்கள் நூல், புனிதமான நூல் என்பார். ஒரு முசுலீமைக் கேட்டால் குரான் என்பார். நம் நூல்கள் எவை என்று தெரியாமலேயே இன்று பெரும்பான்மையோர் உள்ளனர். அறியாமையின் தாண்டவத்தைப் பார்த்தீர்களா ?

நம் சமயத்தைப் பற்றிய அடிப்படை அறிவு/கல்வி இல்லாமையினாலேயே நமக்கு இந்த இழி நிலை. அதனால் தான் உரக்க கூறுகிறேன், கல்வி இல்லாதவன் கண் இல்லாதவன். சமயகல்வி இல்லாதவன் உயிர் இல்லாதவன். நம் சமயங்களின் நூல்கள் எவை என்று நாம் அறிந்து கொண்டு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக படித்து ஞானத்தைப் பெறுவது நாம் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களில் ஒன்று. நம் நூல்கள் யாவும் இறைவனாலேயே அருளப் பட்டவை. இவை எவற்றிலும் கீழ்த்தரமான வார்த்தைகள் ஒன்று கூட கிடையாது. யாரையும் அழிக்கச் சொல்லும் தீமையான வார்த்தைகளோ, வாக்கியங்களோ ஒன்று கூட கிடையாது. இவை எக்காலத்தையும் சாராமல், காலத்தை வென்றவை. அதாவது எக்காலத்திற்கும் பொருந்தும் உண்மையை கொண்டவை. இனி வரும் ஆயிரமாயிரம் காலத்திற்கும் இது பொருந்தும். இது போன்று எந்த சமயங்களிலும் கிடையாது. இது இறைவனின் திருவருள் ஒன்றினாலேயே கூடும். அப்படிப்பட்ட பெருமையுடைய, என்றைக்கும் பொருந்தக்கூடிய, இதுவரை ஒரு சிறு எழுத்து கூட மாற்றாமல் அப்படியே இன்றைக்கும் பொருந்துவதாக அமைந்த நூல்கள் அத்தனையும் படிக்க நாம் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் ? அந்த நூல்கள் எவை என்று அறிந்து கொண்டு அவற்றை படிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

அநாதியானதும், அநாதியான முதல் நூல்களை உடையதும் எனக் கொள்ளப்படும் சைவ சமயத்தின் பிரமாண நூல்கள்

திருநெறி

  • வேதம் 4 – அருநெறிய மறை: உலகிற்கு வேண்டிய பொது அறம் சொல்வது
  • சிவ ஆகமம் 28 – பெருநெறி: சத்திநிபாதத்திற்குரிய சைவ நுட்பங்களைச் சொல்வது

திருமுறை சார்ந்த நூல்கள்

பன்னிரு திருமுறை 12 – தோத்திரம்
திருக்கடைக்காப்பு (திருமுறை 1,2,3 திருஞானசம்பந்தர்)

  • தேவாரம் (திருமுறை 4,5,6, திருநாவுக்கரசர்)
  • திருப்பாட்டு (திருமுறை 7, சுந்தரர்)
  • திருவாசகம், திருக்கோவையார் (திருமுறை 8, மாணிக்கவாசகர்)
  • திருவிசைப்பா, திருப்பல்லாண்டு (திருமுறை 9, 9 ஆசிரியர்கள்)
  • திருமந்திரம் (திருமுறை10, திருமூலர்) பிரபந்தம் (திருமுறை 11, 12 ஆசிரியர்கள்)
  • பெரியபுராணம் (திருமுறை 12, சேக்கிழார்)
  • திருத்தொண்டர் புராணசாரம்
  • திருப்பதிக்கோவை
  • திருப்பதிகக்கோவை
  • திருமுறை கண்டபுராணம்
  • சேக்கிழார் புராணம்
  • திருத்தொண்டர் திருநாமக்கோவை

சைவ சமய சாத்திர நூல்கள்

  1. திருவுந்தியார் – திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
  2. திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
  3. சிவஞானபோதம் – மெய்கண்ட தேவநாயனார்
  4. சிவஞான சித்தியார் – திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்
  5. இருபா இருபஃது – அருள்நந்திசிவாசாரியார்
  6. உண்மை விளக்கம் – திருவதிகை மனவாசகங்கடந்தார்
  7. சிவப்பிரகாசம் – உமாபதிசிவாசாரியார்
  8. திருவருட்பயன் – உமாபதிசிவாசாரியார்
  9. வினாவெண்பா – உமாபதிசிவாசாரியார்
  10. போற்றிப்பஃறொடை – உமாபதிசிவாசாரியார்
  11. உண்மைநெறி விளக்கம் – உமாபதிசிவாசாரியார்
  12. கொடிப்பாட்டு – உமாபதிசிவாசாரியார்
  13. நெஞ்சுவிடுதூது – உமாபதிசிவாசாரியார்
  14. சங்கற்ப நிராகரணம் – உமாபதிசிவாசாரியார்

புராண நூல்கள்

  • திருவிளையாடற் புராணம்
  • மதுரைக் கலம்பகம்
  • மதுரைக் கோவை
  • மதுரை மாலை
  • காஞ்சிப் புராணம்
  • கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
  • கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
  • சிதம்பர மும்மணிக் கோவை
  • திருவாரூர் நான்மணி மாலை
  • சிதம்பர செய்யுட் கோவை
  • காசிக் கலம்பகம்
  • திருக்குற்றாலக் குறவஞ்சி
  • பிரபந்தத்திரட்டு
  • இரட்டைமணி மாலை
  • கந்த புராணம்
  • பிற நூல்கள்
  • சித்தாந்த சாத்திரம்
  • சொக்கநாத வெண்பா
  • சொக்கநாத கலித்துறை
  • சிவபோக சாரம்
  • முத்தி நிச்சயம்
  • சோடசகலாப் பிராத சட்கம்
  • திருப்புகழ்
  • முத்துத்தாண்டவர் பாடல்கள்
  • நீலகண்டசிவன் பாடல்கள்
  • நடராசபத்து

வீரசைவ நூல்கள்

  • சித்தாந்த சிகாமணி
  • பிரபுலிங்க லீலை
  • ஏசு மத நிராகரணம்
  • இட்டலிங்க அபிடேகமாலை
  • கைத்தல மாலை
  • குறுங்கழி நெடில்
  • நெடுங்கழி நெடில்
  • நிரஞ்சன மாலை
  • பழமலை அந்தாதி
  • பிக்ஷாடன நவமணி மாலை
  • சிவநாம மகிமை
  • வேதாந்த சூடாமணி
  • திருத்தொண்டர்மாலை
  • ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்

ஒட்டக்கூத்தர், புகழேந்தி, பட்டினத்தார், தாயுமானார், சிவப்பிரகாசர், குமரகுருபரர், சைவத் திருமடத்து தலைவர்கள், அருளாளர்கள், ஔவையார், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயர், கிருஷ்ணபாரதி, சுத்தானந்த பாரதி, 18 சித்தர்கள் ஆகியோரது நூல்கள்

இன்னும் எண்ணற்ற நூல்களும் உள.

இணைத்துள்ள படங்களை B4 தாளில் அச்சிட்டு உங்கள் கோவில்களில் ஒட்டி வையுங்கள். இதுவும் ஒரு சிவதொண்டே. நமசிவாய.

அச்சிட ஏதுவான கருப்பு வெள்ளைப்படம்.

சைவ சமய சாத்திர நூல்கள்

வண்ணப்படம்

சைவ சமய சாத்திர நூல்கள்

திருச்சிற்றம்பலம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

Please rate this

3 thoughts on “சைவ சமயத்தின் தலையாய நூல்கள் எவை ?”

  1. ஐயா இந்துமதத்தின் நூல்கள் படிக்க ஆசை ஆனால் நான் வசிப்பது பெங்களூரில் சைவ நூல் எங்கு கிடைக்கும் படிப்பதற்கு எழிமையான வரிசைப்படுத்தி கூறவும் ஐயா

    1. நிறைய நூல்கள் pdf வடிவிலேயே இருக்கிறது. அதை முயற்சி செய்யுங்கள். shaivam.org அவர்களை அணுகிப் பார்க்கவும்.

Leave a Reply to M. ILANGOVAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *