இறைவனை அறியாத கிராமங்களை எப்படி விழிப்படையச் செய்வோம்? No ratings yet.

இறைவனை அறியாத கிராமங்களை எப்படி விழிப்படையச் செய்வோம்?

கடந்த சில பத்தாண்டுகள் நமக்கு மிகவும் சவாலாக இருந்தது. நம் சமய உணர்வு மொழி உணர்வு ஆகியவற்றை மழுங்கச் செய்து நம் மொழி சமயங்களுக்கு நமக்கே தெரியாமல் மிகுந்த பெருந்த சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிப் பாடங்களில் தேவாரமும் திருவாசகமும் படித்து வந்தோம். சமய பாடங்கள் என்றே ஒரு தனி பாட அமைப்பு இருந்தது. அனைவரும் படித்து வந்தோம். பின்னர் மெல்ல மெல்ல நம் சமயங்கள் பற்றிய செய்திகளை பள்ளிப் பாடங்களிலிருந்து நீக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறு கோவில் இருந்தது. அதில் வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகமும் வழிபாடும் நடந்தது. அனைத்து மாணவர்களும் அதில் பங்கு பெற வேண்டும். இவை அத்தனையும் திராவிடர்கள் என்று தங்களை கூறிக் கொண்ட அரசு கொண்டவர்கள் நீக்கி விட்டனர். நம் சமய ஞானத்தை சிறு வயதிலேயே மழுங்கடித்து விட்டனர். சமய உணர்வு இல்லாத பிணமாக நம்மை அலைய விட்டு விட்டனர். இன்று நாம் திருநீறு பூசுவதற்க்கே வெட்கப்படுகிறோம், அஞ்சுகிறோம். நம் நாட்டிலேயே நாம் நம் மொழி, சமய உணர்வின்றி பிணமாக நடமாடுகிறோம். இதை விட ஒரு இழிவான நிலைக்கு யாரும் செல்ல முடியாது. அத்தகைய இழிவான நிலைக்கு நம்மைத் திராவிட அரசுகள் தள்ளி விட்டன. இது அரசியல் பதிவு அல்ல, நமக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்லும் பதிவு.

தமிழகத்தைச் சேர்த்து இன்று இந்தியாவில் எத்தனையோ கிராமங்களில் இதை பிணங்களை நடமாட விட்டு விட்டார்கள். இதனாலேயே, பாதுகாப்பு வேலி இல்லாத நம் கிராமங்களுக்குள் அந்நிய மதத்தினர் மெல்ல மெல்ல ஊடுறுவிச் சென்று, நம் குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுத்து அவர்களை முதலில் கவர்ந்தும், அவர்கள் சார்ந்த பள்ளிக்கூடங்களை எழுப்பியும் மெல்ல மெல்ல அவர்களின் மதத்தைப் புகுத்தி இன்று பெருமளவில் நம்மவர்களை மதம் மாற்றம் செய்து பெரிய கூட்டமாக உட்கார்ந்து விட்டார்கள். மேலும் தமிழகம் முழுவதையுமே அவர்கள் மதத்திற்க்கு மாற்றுவோம் என்று சவால் விடுகிறார்கள்.

அந்நியர்கள் நம் நாட்டை விட்டு ஓடிப்போய், நம் பாரதம் சுதந்திரம் பெற்ற பின் 70 ஆண்டுகளில் எத்தனை பெரிய இழப்பை நாம் சந்தித்து விட்டோம் ? அந்நியர்களின் ஆட்சிக் காலத்தில் கூட நாம் இத்தனை பெரிய இழப்புகளைச் சந்திக்கவில்லை. நம் பண்பாடு, மொழி, கோவில்கள், சமயம் என்று நமக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பின் அளவு அளவிட முடியாதது.

இன்று நம் கிராமங்கள் அனைத்திலும் நம் மொழி மற்றும் சமய விழிப்புணர்வு இல்லாத அப்பாவி மக்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவர் கையிலும் கைபேசி இருந்தாலும், எத்தனை பொய்ச் செய்திகள் ? அந்த செய்திகளை அனுப்பும் அத்தனை ஊடகங்களும் அந்நியர்கள் விட்டுச் சென்ற மீதமுள்ளவர்களின் பிடியில் இருக்கிறது. இது நம் மொழி, பண்பாடு சமயம் ஆகியவற்றின் பிடிப்பை மேலும் வலுவிழக்கச் செய்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், காலகட்டத்தில் தான் இந்துக்களாகிய நாம் வாழ்ந்து வருகிறோம்.

இனி என்ன செய்யப் போகிறோம் ?

ஒவ்வோரு இந்துவும் உங்கள் ஊரில் இருக்கும் இந்து அமைப்புகளோடு இணைய வேண்டும். அமைப்புகள் இல்லையென்றால், உங்கள் ஊரில் உள்ள கோவில்களுக்கு வரும் அன்பர்கள் இணைந்து ஒரு சபை போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். உங்கள் குழு மாதம் ஒரு முறை அல்லது இரு முறை, ஞாயிற்றுக் கிழமைகளில் ஏதாவது ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள கோவில்களிலும் ஊர் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தச் செய்ய வேண்டும்.

இன்று நம் சமயங்களுக்கு நிறைய சேனல்கள், செய்திகள், குழுக்கள் வந்துவிட்டன. ஆகவே, நம் சமயத்தை நன்கு நாம் முதலில் அறிவோம். நம் குழுக்களில் இருக்கும் அனைவரும் அறிவோம். பின்னர் நாம் செல்லும் கிராமங்களில் அறிவுறுத்துவோம். ஒவ்வொரு இந்துவும் களத்தில் இறங்கி களப்பணி செய்யாமல் நம் மொழி சமயங்களை நாம் காப்பாற்ற இயலாது.

 

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *