பண்ணமர் பதிகம் – தேவார பண் இசை ஆதார தொகுப்பு 5/5 (3)

பண்ணமர் பதிகம் – தேவார பண் இசை ஆதார தொகுப்பு

பண்ணமர் பதிகம் – சான்று பாடல்களின் சுட்டியை PDF வடிவில் பதிவிறக்கம் செய்க

தேவார பாடல்களை எவ்வாறு பாட வேண்டும்?

தேவார பாடல்களை முறைப்படி பாட அதன் பண் அமைப்பில் பாட வேண்டும்.

தேவார பண்கள் மொத்தம் எத்தனை?

தற்போது நம்மிடம் இருக்கும் தேவார பண்கள் மொத்தம் 23 (+யாழ்மூரி)

தேவார பண்கள் எவை?

தேவார பதிகங்களை, அதற்குரிய பண்ணில் பாடுவது எப்படி?

பண் என்பது ஒலி அலைகளின் தொடர் அமைப்பாகும். ஒவ்வொரு பண்ணையும் எவ்வாறு பாட வேண்டும் என்று முறைப்படி ஓதுவார்களிடம் பயிற்சி செய்து பாட வேண்டும். ஒவ்வொரு பண்ணுக்கும் ஒரு பாடலை எவ்வாறு பாட வேண்டும் என்று ஒரு சான்று ஆதாரமாக வைத்துக் கொண்டு, அதற்குரிய தாளத்தையும் இணைத்து பாடுவது புதியவர்களுக்கான எளிய வழியாகும். நிறைய பயிற்சி செய்ய செய்ய, அனைவரும் மிகவும் அழகாக பாடலாம்.

எல்லோரும் தேவாரம் பாடலாமா, குரல் வளம் கட்டாயமாக தேவையா?

குரல் என்பது ஒவ்வொருவருக்கும் இறைவனே அருளிச் செய்த வரமாகும். ஒவ்வொருவருடைய குரலும் வித்தியாசமானதாகும். ஸ்ருதியோடு இணைத்து பாடினால், அனைவரின் குரலிலும் தெய்வீக உணர்வு ஊற்றெடுக்கும். ஆகவே, முயற்சி திருவினையாக்கும். அனைவரும் கட்டாயமாக இனிமையாக தேவாரம் பாடலாம்.

ஒவ்வொரு தேவார பண்ணிற்க்கும் நம் பண்ணிசை மரபின் வழியாக ஒவ்வொரு சான்று பாடல் தொகுப்பு இருக்கிறதா?

இருக்கிறது. இதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் பண்ணமர் பதிகம் தேவார பண் இசைத் தொகுப்பு. அந்த தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சான்று பாடல் தொகுப்பாகிய பண்ணமர் பதிகங்களை PDF வடிவில் தொகுக்கப்பட்ட கோப்பை பதிவிறக்கம் செய்ய.

பண்ணமர்பதிகம் கைக்கோப்பு வடிவம்

பண்ணமர் பதிகம் – தேவார பண் இசைத் தொகுப்பு

YouTube Play List:  பண்ணமர் பதிகம்

 

YouTube.com/ThiruNandhiTV

 

 

Please rate this

மார்கழி திருவீதி உலா 2022 பள்ளிக்கரணை 63வர் நடராஜ பெருமானுடன் No ratings yet.

சிவமயம்.

பன்னிரு திருமுறைகளை சிரசில் ஏந்தி, திருமுறை பள்ளிக்கரணை வீதிகள் எங்கும் ஒலிக்க, கயிலாய வாத்தியங்கள் முழங்க, அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் மாணிக்கவாசகரும் இணைந்து, அருள்மிகு சிவகாமி அம்மை உடனுறை ஆனந்த நடாரஜர் பள்ளிக்கரணையின் வீதிகளில் எங்கும் எழுந்தருளி அருள்பாலித்தார்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை மற்றும் மல்லிகேசுவரர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து நடத்திய மார்கழி வீதி உலா நிகழ்விலிருந்து சில காட்சிகள்.

காணொளி:

படக்காட்சிகள்:

 

Please rate this

சைவ சமயக் காணொளி போட்டி !!! No ratings yet.

சைவ சமயக் காணொளி போட்டி !!!

காணொளிகளை அனுப்ப: shivathondu14@gmail.com

வாட்சப்பில் அனுப்ப: 9445769019

 

 

 

 

 

Please rate this

63 பக்தித் திரைப்படங்கள் உங்கள் விரலின் நுனியில்.. 5/5 (6)

திருச்சிற்றம்பலம்.

நோய் தொற்றின் காரணமாக வீட்டிற்க்குள் வாழ்வை அனுபவிக்கும் அன்பர்களுக்கு ஏதுவாகவும், விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு அமர்ந்து பக்தி மணம் கமழ குழந்தைகளுக்கு பக்தி சுவை ஊட்டவும், சைவ சமய திரைப்படங்களின் தொகுப்பை ஒரு கோப்பில் தொகுத்து அளிக்கப்படுகிறது.

அன்பர்கள், குடும்பத்தோடு அமர்ந்து பக்தி திரைப்படங்கள் கண்டு மகிழுங்கள். நம் சமயம் மற்றும் பண்பாட்டை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

கீழே உள்ள சைவ சமய காணொளி தொகுப்பு.pdf கோப்பை பதிவிறக்கம் செய்க.

63 பக்தி திரைப்படங்கள் உங்கள் விரல் நுனியில்

பக்தி திரைப்படங்கள்

திருச்சிற்றம்பலம்.

Please rate this

கயிலாய வாத்திய பயிற்சி குறிப்புகள் வாய்பாடு 4.77/5 (62)

கயிலாய வாத்திய பயிற்சி குறிப்புகள்

கயிலாய வாத்தியம்

பஞ்ச வாத்தியம் எனப்படும் கயிலாய வாத்தியம் சிவவாத்தியம் என்றும் அழைக்கப்படும். ஐந்து வித வாத்திய கருவிகளால் இசைக்கப்படுவதால் பஞ்ச வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு மட்டும் வாசிக்கப்படும் இந்த இசை, பூதகணங்களால் வாசிக்கப்படும். இதனால் இதை பூதகணஇசை என்றும் கூறுவர். திருநந்திதேவர் தலைமையில் பூதகணங்கள் வாத்தியம் இசைக்க, சிவபெருமான் நடமாடுவதை விரும்பாதவர் எவருமிலர். அதை நினைப்பதற்க்கும் காண்பதற்க்கும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அவ்வாத்தியம் பயிற்சி எடுக்க, சில குறிப்புகள் விரைந்து கற்பதற்க்கு ஏதுவாக இருக்கும். அவை இங்கே பகிரப்படுகிறது. வாத்தியம் தாளத்தின் அடிப்படையில் அமைவதாகும். அந்த தாளத்தை வாய் வழியே சொல்லி முதலில் கற்றுக் கொண்டால், அதை இசை வடிவமாக திருவுடலிலும் தாளத்திலும் எளிதாக கொண்டு வந்து விடலாம். அவ்வாறு வாய் வழியே சொல்லி கற்பது வாய்பாடு எனப்படுகிறது. கயிலாய வாத்தியம் கற்க விரும்பும் மாணவர்கள், இந்த வாய்பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டு, வாயில் சொல்லி பயிற்சி எடுத்து, அதை தொடையிலும், வீட்டில் நாற்காலியிலும் தட்டி பயிற்சி எடுத்துக் கொண்டு திருவுடலிலும் தாளத்திலும் முயற்சி செய்தால், விரைந்து கற்றுக் கொள்ளலாம்.  அதற்கான வாய்பாடு இங்கே.

வாய்பாடு

 கயிலாய வாத்திய அடிப்படை பயிற்சி – வாத்திய வாய்ப்பாட்டு உரை

 

  1. மகுடம்
  2. முதல் மெட்டு
  3. இரண்டாம் மெட்டு
  4. மூன்றாம் மெட்டு
  5. நான்காம் மெட்டு
  6. காளி நடை 1
  7. காளி நடை 2
  8. நந்தி நடை 1
  9. நந்தி நடை 2
  10. ஐயாரப்பர் மெட்டு
  11. அண்ணாமலையார் மெட்டு
  12. புறப்பாடு மெட்டு
  13. நடராசர் மெட்டு
  14. முதல் மெட்டு மூன்று சுற்று
  15. நான்காம் மெட்டு மூன்று சுற்று

 

 கயிலாய வாத்திய அடிப்படை பயிற்சி – வாத்திய வாய்ப்பாட்டு உரை

மேலும் வளரும்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சைவ சித்தாந்தம் அடிப்படை வகுப்பு காணொளிகள் 4.78/5 (9)

சைவ சித்தாந்தம் அடிப்படை வகுப்பு காணொளிகள்

சைவ சித்தாந்தம் அடிப்படை வகுப்பு

அனைத்து காணொளிகளின் பட்டியல் தொகுப்பு

அனைத்து வகுப்புகளிலும் பயன்படுத்தப்பட்ட விளக்கத் தகடுகளின் தொகுப்பு புத்தகம் இந்த வலைதளத்தின் பதிவிறக்கம் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழே ஒவ்வொரு வகுப்பின் தனி காணொளி சுட்டி

வகுப்பு 1

நம் கண்களுக்குத் தெரியும் இந்த உலகத்தில் இருக்கும் பொருட்களை ஆராய்ச்சி செய்வோம். கண்களுக்குத் தெரியும் உருவம், கண்களுக்குத் தெரிந்து குறிப்பிட்ட வடிவம் இல்லாத அருவுருவம், கண்களுக்குத் தெரியாத அருவம் ஆகிய பொருட்கள் உள்ளன. பொருட்கள் அன்றி, ஆற்றலும் உள்ளது. பொருட்களுக்கும் ஆற்றலுக்கும் தொடர்பு இருக்கிறது.

வகுப்பு 2

சைவ சமயத்தின் கருப்பொருள் முப்பொருள் உண்மை. இவ்வுலகை பகுத்தறிந்து ஆராய்ந்து அடிப்படையான பொருட்களைக் கருதினால், அவை மூன்று. அவையாவன, பதி, பசு, பாசம் என வடமொழியிலும், இறை, உயிர், தளை என்று தீந்தமிழிலும் அறியப்படும். அந்த மூன்று அடிப்படைப் பொருளை அறிந்து உணர்ந்து அவற்றின் தன்மைகளை அறிந்து, நாம் யார், நமக்கு ஏன் பிறப்பு இருக்கிறது, நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதை உணர வைப்பதே சைவ சித்தாந்த நெறியின் குறிக்கோளாகும்.

வகுப்பு 3

முப்பொருள் உண்மை பற்றிய சில வேறு கருத்துக்களைக் கொண்ட அகப்புற சமயங்கள் எவை. அடுத்து முப்பொருளில் முதலில் இறைவனைப் பற்றி அறிவோம். பதியின் சொரூப நிலை யாது? தடத்த நிலை யாது? பதியின் குணங்கள் எவை?

வகுப்பு 4

இறைவன் ஏன் உலகை உருவாக்க வேண்டும்? ஆணவம் கன்மம் மாயை என்றால் என்ன? உலகினால், உயிர்கள் பெறும் நன்மை யாது ? இறைவன் எவ்வாறு உலகை உருவாக்குகிறான்?

வகுப்பு 5

36 தத்துவங்களாகிய கருவிகள் எங்கிருந்து பெறப்படுகிறது ? இந்த கருவிகளால் யாருக்கு என்ன பயன்? இந்த கருவிகள் எப்படி வந்தது? இதனால் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது?

வகுப்பு 6

உயிர்களாகிய நம்முடைய பல்வேறு நிலைகள் என்ன? இறைவன் செய்யும் ஐந்து தொழில்கள் எவை? இந்த தொழில்களால் யாருக்கு என்ன பயன்?

தேர்வு 1

வகுப்பு 7

சிவபெருமான் ஏன் நடனம் ஆட வேண்டும்? சிவபெருமானது திருநடனத்தினால் என்ன பயன் கிடைக்கும்? அவர் எங்கெல்லாம் திருநடனம் செய்வார்?

வகுப்பு 8

திருவைந்தெழுத்து அல்லது பஞ்சாக்கரம் என்று சொல்லக்கூடிய உயரிய மந்திரம் யாது?  இதை ஓதுவதால் நமக்கு என்ன நன்மை? எத்தனை வகையான மந்திரங்கள் உள்ளன?

வகுப்பு 9

சைவ சித்தாந்த சாத்திரங்களாக கருதப்படும் மெய்கண்ட சாத்திரங்களின் மொத்த நூல்கள் எத்தனை? அவை எவை? அவற்றை அருளிய குருமார்கள் யாவர்?

வகுப்பு 10

கன்மம் அல்லது கர்மா என்றால் என்ன? நல்வினை தீவினை செய்தால் கிட்டும் பயன் என்ன? சித்தாந்தம் கூறும் வினைக் கொள்கை யாது?

வகுப்பு 11

சந்தான குரவர்களாகிய குருமரா்கள் மெய்கண்டார் மற்றும் அருள்நந்திசிவம் ஆகியோரது வரலாறு.

வகுப்பு 12

நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? எனக்கு ஏன் துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன?

வகுப்பு 13

வாக்குகள் என்றால் என்ன? அவை எங்கிருந்து வருகிறது? சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி  ஆகிய வாக்குகளால் என்ன பயன்?

 

வகுப்பு 14

வீடுபேறு என்றால் என்ன? முக்தி என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? ஞானம் அடையும் வழி யாது? இருவினை ஒப்பு, மலபரிபாகம், சந்திநிபாதம் என்றால் என்ன?

வகுப்பு 15

சைவ சமய சந்தான குரவர்கள் மறைஞானசம்பந்தர் மற்றும் உமாபதிசிவம் ஆகியோரது வரலாறு.

வகுப்பு 16

நான் ஏன் பிறந்தேன்? தொடர் துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி? முக்தி அடைவது எப்படி? மீண்டும் பிறவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சைவ நெறிகள் எவை? சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவை காட்டும் நெறி யாது?

வகுப்பு 17

இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே முக்தி அடைய முடியுமா? சீவன் முத்தர் என்றால் யார்? அவர்களின் தன்மை என்ன? திருவைந்தெழுத்து அல்லது பஞ்சாக்கரம் என்று சொல்லக்கூடிய மந்திரத்தின் சிறப்பு யாது ? யாரெல்லாம் திருவைந்தெழுத்து ஓதலாம்? திருவைந்தெழுத்து ஓதுவது எப்படி?

வகுப்பு 18

இறந்த பின் தான் முக்தியா? முக்தியடைந்த பின்னர் என்ன செய்வோம்?  வீடுபேறு சிவப்பேறு என்றால் என்ன? அணைந்தோர் தன்மை யாது?

வகுப்பு 19

சிவஞானபோதம் நூல் அமைப்பு மற்றும் நூற்பா 1, 2, 3 ஆகியவற்றின் பதவுரை.

வகுப்பு 20

சிவஞானபோதம் நூல் அமைப்பு மற்றும் நூற்பா 4, 5, 6, 7, 8 ஆகியவற்றின் பதவுரை.

வகுப்பு 21

சிவஞானபோதம் நூல் அமைப்பு மற்றும் நூற்பா 9, 10, 11, 12 ஆகியவற்றின் பதவுரை.

வகுப்பு 22

தாத்துவிகங்கள் என்றால் என்ன? இந்த பிரபஞ்சத்தில் எத்தனை புவனங்கள் இருக்கின்றன? சித்தாந்த தத்துவங்கள் எவற்றைக் கொண்டு நிரூபிக்கப்படுகின்றன?

தேர்வு 2

உலகின் இல்லங்கள் (உள்ளங்கள்) தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

 

Please rate this

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம். அவ்வினைக்கு இவ்வினையாம் Avvinaikku Ivviani 5/5 (2)

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

இறைவனைக் காட்ட முடியுமோ என்றார். ஒழுக்கம் விலகினார். கண்டதையும் எடுத்துத் தின்றார். செய்யத் தகாதன செய்தார். என்னை விஞ்ச ஆள் இல்லை என்றார்.  நானே கடவுளும் என்று கூட சொல்லிப் பார்த்தார். எத்தனை ஆட்டம் போட்டார் ? இன்று உலக மக்கள் அனைவரையும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது கண்களுக்குத் தெரியாத நுண்கிருமி. நிலநடுக்கம் வந்தது. பேரலை வந்தது. புயல் மழை வந்தது. வெள்ளம் வந்தது. இப்போது கிருமி வந்திருக்கிறது. இந்த பிரபஞ்சம் எத்தனை எத்தனை இன்னல்களைப் பார்த்து விட்டது? எத்தனை விலங்குகள் இங்கு காணாமல் போய்விட்டது?

இயற்கையோடு இயைந்து வாழ் என்று நமக்கு இறைவன் மணி அடித்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறான். நம் அறியாமையை அகற்ற ஒவ்வொரு பொழுதும் பாடு பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால், நாமோ, எங்கோ சென்று கொண்டே இருக்கிறோம். எதுவுமே நடவாதது போல சென்று கொண்டே இருக்கிறோம். அவ்வப்போது நம்மை நம் கனவிலிருந்து எழுப்பி உண்மையை உணர வைக்கிறான். இன்பமும் துன்பமும்  கொடுத்து நம்மை வலுவுறச் செய்யவே தருகிறான். நம்மைப் பக்குவப் படுத்துகிறான்.

ஒவ்வொரு துன்பத்திலும் நம் அறிவை செயல்படுத்தி பாதுகாப்பாக இருக்கச் சொல்கிறான். இறைவன் என்னென்ன செய்வான் என்று நம்மால் கூறவே இயலாது. ஆனால், எல்லாமே நமக்கு நன்மை தருவதற்க்கே செய்வான் என்பது மட்டும் திண்ணம்.

கொரானா பரவாமல் தடுக்க அற்புதமான நடவடிக்கைகளை நம் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, அவர்கள் கொடுக்கும் விதிமுறைகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அவ்வப்போது நன்றாக கழுவ வேண்டும். குறிப்பாக வெளியே சென்று வந்த பின் கை கால், முகம் அகியவற்றை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். உடல் நிலை சரியில்லாதது போல இருந்தால், முதலில் பயம் கொள்ளத் தேவையில்லை. மருத்துவரின் துணையை நாட வேண்டும். அரசாங்கம் கேட்கும் தகவல்களைக் கொடுக்க வேண்டும்.  பின்னர், இறைவனை வணங்க வேண்டும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. ஆகவே, இறைவனை வணங்கி விண்ணப்பிப்பது மிகவும் முக்கியமானது. நம் கடமைகளை ஒழுக்கமாக சரியாகச் செய்துவிட்டு இறைவனிடம் விண்ணப்பிக்க வேண்டும். இறையருள் எதையும் செய்ய வல்லது.

நம் நாட்டிலும், உலகம் முழுவதிலும், கொரானா நுண்கிருமியின் பரவுதலைத் தடுக்கவும், அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மக்கள் இனிதாக தங்கள் வழக்கமான வாழ்விற்க்குத் திரும்பவும், நம் குருமார்கள் அருளிய இந்த பதிகத்தை ஒரு முறையாயினும் வாயார படிப்போம். திருஞானசம்பந்தர் தேவாரம்.

( Avviniakku Ivvinai )

அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் திருஞானசம்பந்தர் தேவாரம்  திருநீலகண்டப் பதிகம் விஷ ஜுரம், விஷக் கடி நீங்க, தொண்டையில் ஏற்பட்ட கோளாறுகள் நீங்க, எடுத்த காரியம் வெற்றி பெற, குரல் வளம் பெருக, செய்வினை பில்லி சூனியம் ஆகியவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, துணிவுடன் செயலாற்ற ஓத வேண்டிய பதிகம். திருச்சிற்றம்பலம்.

 

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சனிப் பிரதோஷத்தின் மகிமை. சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசனம் செய்வோம் 5/5 (2)

சனிப் பிரதோஷத்தின் மகிமை. சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசனம் செய்வோம்

தினமும் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். அத்தகைய வாய்ப்பைப் பெற்றோர்கள், மிகவும் பாக்கியசாலிகள். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஔவையார் வாக்கு. பிரதோஷ காலங்களில் சிவாலயம் சென்று வழிபடுவது இன்னும் சிறப்பாகும். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் எனப்படும். தேய்பிறை சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் எனப்படும்.

*** பிரதோஷ வழிபாடு ***

திரயோதசி திதி என்பது நிறைமதி மற்றும் புதுமதி தினத்திலிருந்து பதிமூன்றாம் நாளாகும். இந்த தினத்தில் மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். மிருத சஞ்சீவினி மந்திரத்திற்க்கு இணையான, நீண்ட ஆயுளைத் தர வல்ல, இறந்தவர்களை மீண்டும் உயிருடன் எழுப்ப வல்ல கடலுக்கு அடியில் இருக்கும் அமிர்தத்தை எடுக்க முயன்றனர் தேவர்களும் அசுரர்களும். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறு போல நாணாக்கி, பாற்கடலைக் கடைந்தார்கள். கடலில் இருந்து பல பொருட்கள் வந்தன. பின்னர் ஆலகால விடம் என்று சொல்லக்கூடிய கொடிய விடம் வந்தது. வாசுகி பாம்பும், கடைவதைப் பொறுக்க முடியாமல் விடத்தைக் கக்கியது. எல்லாவற்றையும் அழிக்க வல்ல கொடிய விடத்தைக் கண்டு அனைவரும் ஓடினர். தேவர்கள் அனைவரும் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் தங்களை ஆலகால விடத்திலிருந்து காக்குமாறு வேண்டிக் கொண்டனர்.

*** திருநீலகண்டம் ***

இந்த ஆலகால விடத்தை எதிர் கொள்ளும் சக்தி இறைவனாகி சிவபெருமான் ஒருவனுக்குத் தான் உண்டு. வேறு எவருக்கும் அந்த சக்தி இல்லை. ஆகையால், சிவபெருமானிடம் அனைவரும் சென்று தங்களைக் காக்குமாறு வேண்டிக் கொண்டனர். சிவபெருமானுக்கு அருகிலேயே இருந்து திருத்தொண்டு செய்து வரும் சுந்தரரை அந்த விடத்தை எடுத்து வரும் படி கட்டளையிட்டார் சிவபெருமான். சுந்தரரோ, அத்தனை விடத்தையும் ஒரு சிறு பந்து போல உருட்டி சிவபெருமானிடம் கொடுத்தார். அந்த விட பந்தை சிவபெருமான் வாங்கி வாயில் போட்டு உண்டார். இதைக் கண்டு பயந்து போன பார்வதி தேவியார், அகில உலகங்களையும் விடத்திடமிருந்து காக்கும் பொருட்டு,  அந்த விடமானது கழுத்திலேயே இருக்கும் வண்ணம், சிவபெருமானின் கழுத்தை சற்றே இறுக்கிப் பிடித்தார். இதனால், சிவபெருமானின் கண்டத்திலேயே அந்த நஞ்சு தங்கி, அகில உலகங்களையும் காத்தது. சிவபெருமானின் கழுத்து நீல நிறத்தில் மாறியதால், திருநீலகண்டம் என்ற பெயரையும் சிவபெருமான் பெற்றார். பின்னர் சிவபெருமான் தாண்டவம் ஆடினார்.

சிவபெருமான் அன்று உலகங்களைக் காத்திராவிடில், இன்று இந்த பூமியும், நாமும் உயிரோடு இல்லை. சிவபெருமானுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்க நாம் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறோம். அவ்வாறு நன்றி சொல்லவே பிரதோஷ வழிபாடு செய்கிறோம்.

*** சனிப் பிரதோஷ மகிமை ***

சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் எனப்படும். இந்த பிரதோஷ காலத்திலே சிவபெருமான் நடனமாடுவதாக ஐதீகம். இதனால், இதைக் காண அனைத்து தேவர்களும் ரிஷிகளும் ஆலயம் வருவார்கள். இந்த பிரதோஷ வேளையிலே, நாமும் சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசித்தால் எண்ணற்ற பலன்களைப் பெறலாம். தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம், சனி மகா பிரதோஷம் எனப்படும்.

ஒவ்வொருவர் ஜாதகத்திலும், அதாவது வாழ்கை அமைப்பிலும் குறைந்தது நான்கு தோஷங்களாவது இருக்கும். இந்த தோஷங்கள் அனைத்தும் சனிப் பிரதோஷ வழிபாடு செய்வதால் நீங்கி விடும்.

சனிப் பிரதோஷம் சர்வ பாவ விமோட்சனம்

என்பது பழமொழி. சிவபெருமானையும் நந்தியம்பெருமானையும் வணங்க, நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும். பிரதோஷ வழிபாட்டால், அனைத்து தோஷங்களும் பாவங்களும் நீங்குவது மட்டுமின்றி, சகல நன்மைகளும் உண்டாகும். பொதுவாக பிரதோஷ காலத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்தால், ஓராண்டு சிவாலயம் சென்று வழிபட்ட பலன்கள் கிடைக்கும். சனிப் பிரதோஷம் அன்று வழிபடுவதால், ஐந்து ஆண்டுகள் வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும்.

ஏழரை சனி, கண்ட சனி, அட்டம சனி என்று சனியினால் ஏற்படும் தொல்லைகள் குறைந்து நீங்கும். ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியும், பன்னிரு திருமுறைகளை ஓதியும், சகல வாத்தியங்களுடன் இணைந்து சிவபெருமானை வழிபட்டால், அனைத்து நன்மைகளும் வந்து சேரும். சிவபெருமானிடம் நேரடியாக உபதேசம் பெற்றவர் நந்தியம்பெருமான். இவர் 64 கலைகளுக்கும் குருவாக விளங்குகிறார். வேத ஆகமங்களை நமக்கு அருளிச் செய்வதால், நமக்கு சந்தேகங்கள் நீங்கி, ஞானம் பெருகும். பசும்பால், சங்குப்பூ, வில்வ இலைகள் ஆகியவை கொண்டு வழிபட்டால், எல்லா சாபங்களும் நீங்கும். பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்துப் பின்னர், வில்வம், அரளி, தாமரை, மல்லிகை ஆகிய மலர்களால் அருச்சனை செய்து தீபாராதனை நடைபெறும்.

சனிப்பிரதோஷம் அன்று மறவாமல் சிவாலயம் செல்வோம். அபிஷேக பொருட்களை அளித்தும், அபிஷேகம் செய்தும், ஐந்தெழுத்து, திருமுறைகள் ஓதியும் வழிபடுவோம். மிகுந்த திருவருளோடு பாவங்கள் நீங்கப் பெற்று, சகல நன்மைகளைப் பெறுவோம். திருச்சிற்றம்பலம்.

 

 

Please rate this

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு சமய வகுப்பு பாடங்கள் சொல்லிக்கொடுங்கள் No ratings yet.

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு சமய வகுப்பு பாடங்கள் சொல்லிக்கொடுங்கள்

நம் பண்பாடு, சமயம், மொழி ஆகியவற்றை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை. கடந்த 60 ஆண்டுகளில், திராவிட அரசுகள், நம் மாண்பு மிக்க வரலாற்றையும், பண்பாடுகளையும், உலகின் மகுடமாக விளங்கும் நம் சமய அடிப்படை செய்திகளையும் நம் பாட நூல்களிலிருந்து அகற்றிவிட்டார்கள். அவற்றை நம் குழந்தைகட்டு சொல்லிக் கொடுக்கும் தலையாய கடமை தற்போது ஒவ்வொரு பெற்றோரிடமும் உள்ளது. நம் குழந்தைகள் ஆங்கிலம் கலவாத அருமையான தமிழ் மொழி பேச வேண்டும். நம் சமயத்தின் அடிப்படை அறிந்து கொண்டு நம் தமிழ் மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து காத்து நிற்கும் வீரர்களாக வளர வேண்டும். தேவாரம் திருவாசகம், வாயார இறைவன் முன் பாட வேண்டும். தினமும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக திருக்கோவில் தரிசனம் செய்ய வேண்டும். நம் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் நன்றாகக் கொண்டாட வேண்டும். இதற்கெல்லாம் உறுதுணையாக பெற்றோர்களாகிய நீங்களே திகழ வேண்டும்.

உங்கள் வீடுகளுக்கு அருகில் இது போன்ற வகுப்பு நடைபெறவில்லை என்றால், நீங்களும் உங்கள் தெருவில் அல்லது உங்கள் ஊரில், பகுதியில், அடுக்ககத்தில் இருக்கும் பெற்றோர்கள் இணைந்து உங்கள் அருகில் உள்ள கோவிலிலோ, அல்லது ஒருவர் வீட்டிலோ, ஒரு வகுப்பை ஏற்படுத்தி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துப் பாருங்கள். அதை ஒவ்வொரு ஆண்டும் விடவே மாட்டீர்கள்.

அவ்வகையிலே, இந்த ஆண்டு வரும் கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு திருமந்திரம் உபதேசம் பகுதியில் உள்ள 30 பாடல்களும் சொல்லிக் கொடுங்கள். மனனம் செய்து எழுதச் சொல்லுங்கள். அந்த பாடல்களை இங்கே. கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை இதை படித்து மனனம் செய்து ஒப்புவிக்கலாம், அல்லது எழுதிக் காட்டலாம்.

2020 கோடை விடுமுறை வகுப்பு — திருமந்திரம் உபதேசம் 30

இந்த பிரதியை அச்சிட்டுக் கொடுத்து படித்து மனனம் செய்யச் சொல்லுங்கள். ஐந்து ஐந்து பாடல்களாக மனனம் செய்து எழுதியோ ஒப்புவித்தோ காட்டலாம்.

முந்தைய ஆண்டு கோடை விடுமுறை வகுப்பு பாடத் திட்டம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

எல்லாக் குழந்தைகளும் படிக்கும் வண்ணம் அடிப்படைப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

சைவ சமயம் பற்றிய அடிப்படை செய்திகள் படித்து அறிய இங்கே சொடுக்கவும்.

சிறியவர்களும் பெரியோர்களும் சைவ சமய அடிப்படை நுட்பம் அறிந்து கொள்ள கீழேயுள்ள வீடியோ காணவும்.

 

 

Please rate this

காசி விசுவநாதரின் தரிசனம் நேரலையில் காணுங்கள் 5/5 (1)

காசி விசுவநாதரின் தரிசனம் நேரலையில் காணுங்கள்.

எம்பெருமான் காசி விசுவநாதரின் திருவருளாலும், அக் கோவில் நிர்வாகத்தின் கருணையாலும், எங்கிருந்தும் காசி விசுவநாதரை நேரலையில் காணும் பாக்கியம் கிடைக்கும் அதிசய அற்புதமான காலம் இது. கண்டு மகிழுங்கள். சிவசிவ.




காசி விசுவநாதர் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ தளம்:

https://shrikashivishwanath.org/

Please rate this

காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றி 30 க்கும் மேற்பட்ட பழம்பெரும் கோவில்கள் கண்டுபிடிப்பு No ratings yet.

காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றி 30 க்கும் மேற்பட்ட பழம்பெரும் கோவில்கள் கண்டுபிடிப்பு

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவுத் திட்டமானது, காசி விசுவநாதர் ஆலயத்தில் இருந்து கங்கையின் கரை வரை செல்ல நேரடியாக பாதை அமைக்கும் காசி-விசுவநாதர் சாலை திட்டமாகும்.  சென்ற 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கிய இந்த திட்டத்தைச் செயல் படுத்த, கோவிலைச் சுற்றியுள்ள வீடுகளும் நிலங்களும் கையகப்படுத்தும் பணி துவங்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து அதில் இருந்த வீடுகளை இடிக்கும் பணியும் நடைபெறுகிறது.

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு உள்ளே பழம்பெரும் கோவில்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஒன்று இரண்டு அல்ல, மொத்தம் 43 கோவில்களை அடையாளம் கண்டிருப்பதாக தொல்லியல் துறையினர் (ASI) தெரிவித்துள்ளனர். இந்த வீடுகளை இடிக்கும் பணிகளின் போது, இது வரை 30 க்கும் மேற்பட்ட கோவில்கள் வெளி வந்துள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் மிகவும் பழமையானதாகவும், கந்த புராணத்தோடு தொடர்புடையதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

திட்டமிடப்பட்டுள்ள முதலாவது வாயிலின் அருகே பழம்கோவில் துந்திராஜ் விநாயகர் ஆலயம்  என்ற கோவிலை புதியதாக கண்டுபிடித்திருப்பதாக இந்த காசி-கங்கை கரை சாலை திட்டத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு விஷால் சிங் தெரிவித்துள்ளார். இத்தனை கோவில்களும் இது நாள் வரை, காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீடுகளுக்குள் மறைந்து இருந்துள்ளன. புதியதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்த 30 க்கும் மேற்பட்ட கோவில்களை அனைத்தும் இந்த திட்டத்தின் கீழ் புணரமைக்கப்படும்.

காளி மாதா கோவில்,  திரு கோனேஷ்வர் மகாதேவர் ஆலயம், திரு ராணி விஜயராஜ் மகோய்பா கோவில், திரு பிரமோத் விநாயகர் கோவில், திரு ருத்ரேஸ்வர் மகாதேவர் ஆலயம், ஷீட்லா மாதா கோவில் ஆகிய கோவில்கள் கண்டெடுக்கப்பட்ட கோவில்களில் மிகவும் முக்கியமானவை. இவை அனைத்தும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த தொகுதியான வாரணாசில் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதைச் சுற்றிக் கிடைத்துள்ள பழம்பெரும் கோவில்களை அழகாகப் புணரமைத்தும், விசுவநாதர் ஆலயத்திலிருந்து கங்கையின் கரை வரை அழகான நடைபாதை அமைத்தும் இந்த கோவில் மிக அழகாகவும், புதுப் பொலிவுடனும், புனிதத் தன்மையுடனும் மின்னுவதைக் காணும் நாளை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Please rate this

எறிபத்தர் நாயனார் வரலாறு நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் சில 4.5/5 (4)

எறிபத்தர் நாயனார் வரலாறு நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் சில

பகுதி 1  எறிபத்தர் நாயனார் வரலாற்றுச் சுருக்கம்

பகுதி 2:

எறிபத்த நாயனார் வரலாறு நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் சில

1. தினமும் அதிகாலையில் குற்றம் இல்லாத, மலரும் தருவாயில் இருக்கும் பூக்களை மாலையாகத் தொடுத்து, இறைவனுக்குச் சாற்றிய பின்னர் தான், தாம் உணவு உண்பதையே வழக்கமாகக் கொண்டவர்கள் நம் சிவனடியார்கள். சிவகாமியாண்டாரும் இந்த வழக்கத்தைக் கொண்டவர் என்பதை இந்த வரலாறு காட்டுகிறது. வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் வரலாறு, முருக நாயனார் வரலாறு என்று பல வரலாறுகள் இதை நமக்கு உணர்த்துகின்றன. புறம் மற்றும் அகத்தூய்மையோடு மலர்களைப் பறிக்க வேண்டும் என்பது மிகத் தெளிவு. முகத்தைத் துணியினால் கட்டுவது அசுத்தக் காற்று பூக்களின் மீது படாமல் இருக்கவும், எதேச்சையாக இருமினாலோ, தும்மினாலோ, நம் எச்சில் நீர் இறைவனுக்குச் சாற்றுப்போகும் மலர்களில் பட்டுவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள். மலர் தானே, பறித்து மாலையாக்கி போட்டால் போச்சு என்று எளிதாக எடுத்துக் கொள்ளாமல், தாமே தம் நந்தவனங்களில் பறிந்து மாலை தொடுத்து அதை இறைவனுக்குச் சாற்றும் போது கிடைக்கும் பேரானந்தத்தை அனுபவித்தால் தான் புரியும். புறத்தூய்மை போலவே, அகத்தூய்மையும் முக்கியம். ஐந்தெழுத்து மந்திரம் சொல்லிக் கொண்டு பறித்தல் மிக உன்னதம்.

2. பட்டத்து யானையும் பாகர்களும் இறந்ததைக் கேள்வியுற்று, சிறு படையோடு வந்த மன்னன், அந்த இடத்தில் சிவனடியார் ஒருவர் நிற்பதைக் கண்டு, இவர் இதைச் செய்திருக்க மாட்டார் என்று மிக உறுதியுடன் இருந்தான். அடியார்கள் மீது தான் எத்தனை நம்பிக்கை?

3. எறிபத்தர் தான் இந்த யானையையும் பாகர்களையும் கொன்றார் என்ற செய்தி கேட்டு, அவரிடம் பேசுவதற்க்கு முனைந்த மன்னன், முதலில், தனது படைகளையும் மற்று அனைவரையும் நிறுத்தி விட்டு, தானும் முதலில் வலிமை வாய்ந்த குதிரையிலிருந்து கீழே குதித்தான். ஒரு சிவனடியாரை எவ்வாறு அணுக வேண்டும், அவரிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று நுட்பம் இதில் நிறைந்துள்ளது. தான் இந்த நாட்டிற்க்கே மன்னன் என்ற போதும், அவன் குதிரையிலேயே அருகில் சென்ற விசாரிக்கவில்லை. சிவ அடியாரைக் கண்டவுடன் முதலில் கீழே குதித்து பணிவோடு எறிபத்தரை நெருங்கி வணங்கினான். எத்தனை உயர்ந்த பண்பு? சிவனடியார்களிடத்து நாம் எவ்வாறு அணுக வேண்டும், அவர்களிடம் எவ்வாறு பணிவுடன் வணக்கம் செய்ய வேண்டும் என்ற மிக உயர்ந்த பண்பை இங்கு நுட்பமாக நோக்க வேண்டும்.

4. எறிபத்தர் தான் யானையையும் பாகர்களையும் கொன்றார் என்று உறுதிபடக் கேட்ட பின்னர், அவர் சிவனடியார் வேடம் தரித்திருந்தமையால், அந்த சிவனடியார் கண்டிப்பாக தவறு செய்திருக்க மாட்டார் என்று ஆயிரம் சதவிகிதம் உறுதி எடுத்துக் கொண்டான் மன்னன். யானை ஏதோ தவறு செய்யப் போய் தான் இந்த அடியார் யானையையும் பாகர்களையும் கொன்றிருக்க வேண்டும் என்று முழுமையாக முடிவு கொண்டான். சிறு சந்தேகம் கூட அவருக்கு வரவில்லை. அது பற்றி எந்தவித விசாரணையும் செய்யவில்லை. எத்தனை பெரிய பண்பு இது ? இதற்கு காரணம் என்ன என்று நாம் இன்னும் சற்று ஆழமாக சிந்தித்தால், சிவனடியார் வேடம் தரிந்திருந்தவர்கள் அத்தகைய உயர்ந்த பண்புகளோடு வாழ்ந்து காட்டியிருந்தனர். அனைத்து சிவனடியார்களும் சிறிது குற்றமும் இல்லாமல் நெறியின் வழிப்படி வாழ்ந்தார்கள். உலகினர் யாவரும் போற்றும் படி பிழையின்றி வாழ்ந்தனர். இதுவே அதற்கான காரணம்.

5. எறிபத்தர் நிகழ்ந்ததைக் கூறக் கேட்ட மன்னர், சிவனடியார் வருந்தும் படி இந்த நிகழ்வு நிகழ்ந்து விட்டதே என்று மனம் வருந்துவது எத்தனை உயரிய புரிதலும், இறைவர் பால் அன்பும் இருக்க வேண்டும்? இப்படி நிகழ்ந்து விட்டதா, சரி, பரவாயில்லை. நீங்கள் கிளம்புங்கள் என்று அதை முடித்துவிடாமல், இந்த நிகழ்வுக்கு, மன்னராகிய தானும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதை நினைந்து, என்னையும் கொல்லுங்கள் என்று எறிபத்த நாயனாரிடம் கேட்பது, சாதாரண மனிதர்களால் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத சிந்தனையும் செயலும் ஆகும். சிவபெருமான் மீதும், சிவனடியார்கள் மீதும் எத்தனை அன்பு கொண்டிருந்தால், இறைவனின் திருவருள் நம்மை இப்படி சிந்திக்க வைக்கும்? (என் கண்களில் நீர் பெருகி வழிந்தோடுகிறது.) புகழ்த்துணையாரான இவரும் ஒரு நாயன்மார் அன்றோ?

6. தன்னிடம் வாளை நீட்டி தன்னைக் கொல்லச் சொல்லும் மன்னரிடம், தயங்கி, இன்னும் கொஞ்ச நேரம் விட்டால், மன்னர் தானே தம்மை மாய்த்துக் கொள்வார் என்று பயங்கொண்டு, அந்த வாளை வாங்கி, அவருக்கு முன்பு நாம் மாண்டு விட வேண்டும் என்று தன் கழுத்தை அறுப்பது எத்தகைய செயல்? இன்றைய போர்க்களத்தை சற்றே சிந்தித்துப் பாருங்கள். மனிதன் உயிருக்குப் பயந்து எப்படி ஓடி ஒளிகிறான்? நாயன்மார்கள் அனைவருமே தங்கள் உயிரைத் துச்சமென நினைத்தவர்கள். தங்களால் ஒரு துன்பமோ, ஒழுக்கக் கேடோ வரவிருந்தால், தங்கள் உயிரை உடனே மாய்த்துக் கொள்ளத் துணிந்துவிடுவார்கள்.

7. எறிபத்த நாயனார் செய்த சிவ தொண்டு யாது? சிவனடியார்களுக்கு உதவுவதும், அவர்களுக்கு ஆபத்துக் காலத்தில், உதவி செய்து, ஆபத்தை நீக்குவதும், அந்த ஆபத்தை விளைவித்தரை மழுவால் கொல்வதும் ஆகும். ஒருவரைக் கொன்றால், பிரம்மகத்தி தோஷம் வந்துவிடுமே என்றெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. ஆபத்தை விளைவித்தவர் பிராமணராகவோ (இறை தொண்டு செய்பவர்), தபோதனராகவோ (தவம் உடைய முனிவர்கள்) இருந்தால், அவர்களைக் கொல்லாமல், பிற வழிகளால் அவர்களை வெல்ல வேண்டும். சிவதொண்டு செய்வர்களுக்கு தீங்கு செய்பவர்களைத் தடுக்கவில்லை என்றால், தொண்டு செய்பவர்கள் தொடர்ந்து அந்த தொண்டை செய்ய இயலாத நிலை ஏற்படும். இது சிவ தொண்டு செய்வதற்க்கான தடையாகும். இந்த தடையை எவ்வாறாயினும் நீக்க வேண்டும். இதனால் ஒருவரைக் கொல்ல நேரிடும் போது, அவர் செய்யும் கொலை தன்னுடைய சுயநலத்திற்க்கோ, தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்களின் நலனுக்கோ செய்யப்படவில்லை. அது முழுக்க முழுக்க இறை பணி தடையில்லாமல் நடப்பதற்க்குச் செய்யப்படும் கொலையாகும். இந்த கொலை செய்வதால், சிவ தொண்டு தடைபடாமல் நடக்கும், வளரும். இதனால் இறுதியில் கிடைப்பது சிவபுண்ணியமே. ஆகவே, சிவபுண்ணியத்தின் பொருட்டு செய்யப்படும் கொலைக்கும் சிவபுண்ணியமே கிடைக்கும். இந்த உண்மையை எறிபத்த நாயனார் வரலாறு மட்டுமல்ல, சண்டிகேஸ்வரர் வரலாறு, கோட்புலி நாயனார் வரலாறு என்று பல வரலாறுகள் நமக்கும் உணர்த்துகின்றன. பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே என்பார் சேந்தனார். சிவ புண்ணியம் செய்வதற்க்கு உரிய தடையாக இருப்பவரை நீக்கா விட்டால், இதைப் பார்த்து இன்னும் நிறைய பேர் அந்த தடைகளைச் செய்ய முயல்வர். தடைகள் வளரும். ஆகவே, சிவ புண்ணியத்திற்க்கான தடைகளை நீக்குவதும் சிவ புண்ணியமே. கொலை களவு ஆகியன உலகத்தாரால் நீக்கப்பட்டாலும், அவை நன்மை பயக்கும் இடத்தில் அவை புண்ணியத்தைத் தருகின்றன. இதை நம் சாத்திர நூல்களும் உறுதி படுத்துகின்றன.

ஒலி/ஒளி வடிவத்தில்:

Please rate this

இறைவனுக்கு தீப ஆராதனை காட்டப்படுவதன் தத்துவம் என்ன? ஏன் தீபம் தொட்டு வணங்குகிறோம்? 5/5 (2)

இறைவனுக்கு தீப ஆராதனை காட்டப்படுவதன் தத்துவம் என்ன? ஏன் தீபம் தொட்டு வணங்குகிறோம்?

கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசனஞ் செய்யும் காலத்தில், சிவாச்சாரியார் மந்திரங்களும் திருமுறைகளும் ஓதி இறுதியில் கற்பூரம் அல்லது விளக்கு தீப வழிபாடு செய்கிறார். அந்த தீபத்தை இறைவனைச் சுற்றிக் காட்டுகிறார். அந்த நேரத்தில் பக்தர்கள் அனைவரின் கவனமும், சிந்தனையும் ஒருங்கே இறைவனை நினைந்து வேண்டிக்கொள்ளும். தேவையில்லாத சத்தங்கள் ஒடுங்க, சங்கொலி, மணி, வாத்திய ஒலிகளும் மிகுந்து ஒலிக்கின்றன. பின்னர், அந்த தீபத்தை நமக்குக் காட்டி, நாமும் அதைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். இந்த தீபத்தின் தத்துவம் என்ன?

இதை உணர்ந்து கொள்ள, ஒரே ஒரு விடயம் நாம் அனைவரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இறைவன் என்பவன் ஒருவனே. அவன் பிறப்பு இறப்பிற்க்கு அப்பாற்பட்டு, அவனுடைய உண்மையான சொரூப நிலையில் கண்களுக்குத் தெரியாத எந்த நிறமும் உருவமும் இல்லாத நிலையில் இருந்து நாம் இறைவனை அறியும் பொருட்டு, கீழிறங்கி வந்து, அருவம், அருவுரும், உருவம் ஆகிய நிலையை எடுக்கிறான். அவ்வகையில் அவன் சோதியாக இருக்கிறான். கண்களுக்குப் புறத்தே அமையும் தீப சோதியாகவும், உள்ளே உள்ளத்தின் உள்ளே இருளைப் போக்கி ஞாயிறு போன்று எழுகின்ற சோதி உருவாகவும் இறைவன் இருக்கிறான்.

எனவே, நாம் கோவில்களில் நேரடியாக கண்களில் காணும் அருவுருவ நிலையான சிவலிங்க வடிவம் அல்லது உருவ வடிவமான நிலையில், அம்மைய்ப்பராக, தென்முகக் கடவுளாக, நடராசனாக, சந்திரசேகரராக, சோமஸ்கந்தராக என்று பல்வேறு உருக் கொண்டு இருந்தாலும், அவனுடைய உண்மையான நிலையான சோதி வடிவத்தை நாம் உணர்ந்து கொண்டு அதை நம் மனக் கண்களில் கண்டு போற்றித் துதிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே தீப ஆராதனை காட்டப்படுகிறது.

சோதி வடிவாக இருக்கும் இறைவனை நாம் வணங்கி, அவனது அருளை நாம் கண்களில் ஒற்றிக் கொண்டு நன்றி சொல்கிறோம். இன்னும் ஆழமாக இதை சிந்திக்க, இந்த காணொளி உதவும்.

Please rate this

நாயன்மார்களின் நட்சத்திரமும் குருபூசையும் 4.67/5 (9)

நாயன்மார்களின் குருபூசை நட்சத்திரம்

திருச்சிற்றம்பலம்.

தாமாக அறியும் திறன் இன்றி, அறிவிக்க அறியும் திறனை உடைய நமக்கு, ஒவ்வொன்றையும் குருவாக ஒருவர் அறிவிக்க, அதைக் கற்று அறிகிறோம். அவ்வகையிலே, இறைவனை அறியவும் அவனின் திருவருளைப் பெறவும் நமக்கு வழி காட்டுபவர்களாய் இருப்பவர்கள் நம் குருமார்கள். சீடனுடைய அறியாமையை நீக்கி, இறைவனிடம் இட்டுச் செல்ல வல்லவரே குருவாவர். துன்பமின்றி வாழவும் இறைவன் திருவருள் பெற்று பேரின்பவீடு பெறவும் நமக்கு வழிகாட்டியார் இருப்போர் 63 நாயன்மார்கள். அத்தகையோரை நாம் கொண்டாட வேண்டாமா ? பூசை செய்ய வேண்டாமா ?
 
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
 
என்பது தெய்வப் புலவர் வாக்கு. நமக்கு இறைவனையும் அவனை அடையும் வழியையும் காட்டும் குருவிற்கு நாம் நன்றி சொல்ல மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.  இறைவன் திருக்காட்சி கொடுத்து நாயன்மார்கள் முக்தி அடைந்த தினத்தை நாம் நாயன்மார் குருபூசையாக வணங்குகிறோம். நாயன்மார்களின் குருபூசை செய்வது நம் தொன்று தொட்டு செய்து வரும் மரபாகும். இல்லங்களிலும் திருக்கோவில்களிலும் நாயன்மார்களின் குருபூசை நிகழ்ந்து வருகிறது. குருவருளைப் பெற்றால், திருவருளை எளிதில் பெறலாம் என்பது பெரியோர் வாக்கு.

63 நாயன்மார்கள் முக்தியடைந்த நட்சத்திர நாளை நாம் அவர்களது குருபூசையாக வணங்கி வருகிறோம். எத்தனையோ உலகங்கள் காலத்தை துல்லியமாக கணக்கிட முடியாமல் தவித்த காலத்தில் நம் முன்னோர்கள் காலத்தையும் இடத்தையும் மிக மிகத் துல்லியமாக அளக்கும் அளவைகளையும் வைத்து மிகவும் முன்னோடியான நாகரீகமாகத் திகழ்ந்தார்கள். ஆகையாலேயே, நாம் இன்றும் நம் நாயன்மார்களின் துல்லியமான முக்திநாளை கொண்டாடி குருபூசை செய்ய வேண்டும்.

சிவாயநம.

Please rate this

இறைவனை அறியாத கிராமங்களை எப்படி விழிப்படையச் செய்வோம்? No ratings yet.

இறைவனை அறியாத கிராமங்களை எப்படி விழிப்படையச் செய்வோம்?

கடந்த சில பத்தாண்டுகள் நமக்கு மிகவும் சவாலாக இருந்தது. நம் சமய உணர்வு மொழி உணர்வு ஆகியவற்றை மழுங்கச் செய்து நம் மொழி சமயங்களுக்கு நமக்கே தெரியாமல் மிகுந்த பெருந்த சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிப் பாடங்களில் தேவாரமும் திருவாசகமும் படித்து வந்தோம். சமய பாடங்கள் என்றே ஒரு தனி பாட அமைப்பு இருந்தது. அனைவரும் படித்து வந்தோம். பின்னர் மெல்ல மெல்ல நம் சமயங்கள் பற்றிய செய்திகளை பள்ளிப் பாடங்களிலிருந்து நீக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறு கோவில் இருந்தது. அதில் வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகமும் வழிபாடும் நடந்தது. அனைத்து மாணவர்களும் அதில் பங்கு பெற வேண்டும். இவை அத்தனையும் திராவிடர்கள் என்று தங்களை கூறிக் கொண்ட அரசு கொண்டவர்கள் நீக்கி விட்டனர். நம் சமய ஞானத்தை சிறு வயதிலேயே மழுங்கடித்து விட்டனர். சமய உணர்வு இல்லாத பிணமாக நம்மை அலைய விட்டு விட்டனர். இன்று நாம் திருநீறு பூசுவதற்க்கே வெட்கப்படுகிறோம், அஞ்சுகிறோம். நம் நாட்டிலேயே நாம் நம் மொழி, சமய உணர்வின்றி பிணமாக நடமாடுகிறோம். இதை விட ஒரு இழிவான நிலைக்கு யாரும் செல்ல முடியாது. அத்தகைய இழிவான நிலைக்கு நம்மைத் திராவிட அரசுகள் தள்ளி விட்டன. இது அரசியல் பதிவு அல்ல, நமக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்லும் பதிவு.

தமிழகத்தைச் சேர்த்து இன்று இந்தியாவில் எத்தனையோ கிராமங்களில் இதை பிணங்களை நடமாட விட்டு விட்டார்கள். இதனாலேயே, பாதுகாப்பு வேலி இல்லாத நம் கிராமங்களுக்குள் அந்நிய மதத்தினர் மெல்ல மெல்ல ஊடுறுவிச் சென்று, நம் குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுத்து அவர்களை முதலில் கவர்ந்தும், அவர்கள் சார்ந்த பள்ளிக்கூடங்களை எழுப்பியும் மெல்ல மெல்ல அவர்களின் மதத்தைப் புகுத்தி இன்று பெருமளவில் நம்மவர்களை மதம் மாற்றம் செய்து பெரிய கூட்டமாக உட்கார்ந்து விட்டார்கள். மேலும் தமிழகம் முழுவதையுமே அவர்கள் மதத்திற்க்கு மாற்றுவோம் என்று சவால் விடுகிறார்கள்.

அந்நியர்கள் நம் நாட்டை விட்டு ஓடிப்போய், நம் பாரதம் சுதந்திரம் பெற்ற பின் 70 ஆண்டுகளில் எத்தனை பெரிய இழப்பை நாம் சந்தித்து விட்டோம் ? அந்நியர்களின் ஆட்சிக் காலத்தில் கூட நாம் இத்தனை பெரிய இழப்புகளைச் சந்திக்கவில்லை. நம் பண்பாடு, மொழி, கோவில்கள், சமயம் என்று நமக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பின் அளவு அளவிட முடியாதது.

இன்று நம் கிராமங்கள் அனைத்திலும் நம் மொழி மற்றும் சமய விழிப்புணர்வு இல்லாத அப்பாவி மக்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவர் கையிலும் கைபேசி இருந்தாலும், எத்தனை பொய்ச் செய்திகள் ? அந்த செய்திகளை அனுப்பும் அத்தனை ஊடகங்களும் அந்நியர்கள் விட்டுச் சென்ற மீதமுள்ளவர்களின் பிடியில் இருக்கிறது. இது நம் மொழி, பண்பாடு சமயம் ஆகியவற்றின் பிடிப்பை மேலும் வலுவிழக்கச் செய்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், காலகட்டத்தில் தான் இந்துக்களாகிய நாம் வாழ்ந்து வருகிறோம்.

இனி என்ன செய்யப் போகிறோம் ?

ஒவ்வோரு இந்துவும் உங்கள் ஊரில் இருக்கும் இந்து அமைப்புகளோடு இணைய வேண்டும். அமைப்புகள் இல்லையென்றால், உங்கள் ஊரில் உள்ள கோவில்களுக்கு வரும் அன்பர்கள் இணைந்து ஒரு சபை போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். உங்கள் குழு மாதம் ஒரு முறை அல்லது இரு முறை, ஞாயிற்றுக் கிழமைகளில் ஏதாவது ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள கோவில்களிலும் ஊர் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தச் செய்ய வேண்டும்.

இன்று நம் சமயங்களுக்கு நிறைய சேனல்கள், செய்திகள், குழுக்கள் வந்துவிட்டன. ஆகவே, நம் சமயத்தை நன்கு நாம் முதலில் அறிவோம். நம் குழுக்களில் இருக்கும் அனைவரும் அறிவோம். பின்னர் நாம் செல்லும் கிராமங்களில் அறிவுறுத்துவோம். ஒவ்வொரு இந்துவும் களத்தில் இறங்கி களப்பணி செய்யாமல் நம் மொழி சமயங்களை நாம் காப்பாற்ற இயலாது.

 

 

Please rate this