காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே
எளிமையான சொற்களை மாலையாகக் கோர்த்து, உணர்வுகளை அப்படியே மிகுந்த வாசனையோடு கூடிய மணம் கமழ வைத்து, ஆழ்ந்த ஞானத்தையும் இடையே பொதித்து, படிப்பவரின் உணர்வுகளைத் தூண்டி சிவத்தை நோக்கி பாட, ஆட வைக்கும் திறமை தேனினும் இனிய திருவாசகத்திற்கு உரித்தாகும். அத்தகைய சுவையோடு ஞானமும் கலந்த திருவாசகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமானால் அதற்கு ஈடு இணையாக எதுவுமே இல்லை.
திருக்கழுக்குன்றத்திலே அடியார்களின் முன்னிலையிலேயே மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தார் சிவபெருமானார். அந்த திருக்கழுக்குன்ற பதிகத்தை சற்றே சிந்தித்து பார்த்தால், உள்ளம் உருகும், சிவபெருமானிடம் இலயிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
திருச்சிற்றம்பலம்.
உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.