சம்பந்தர் தேவாரம் – திருக்கோளிலி திருப்பதிகம் No ratings yet.

சம்பந்தர் தேவாரம்

திருக்கோளிலி திருப்பதிகம்
[1/62/4 – 23/06/18]

சிவதீபன்  – 📱9585756797

குறிப்பு: “திருக்குவளை என்று தற்காலத்தே அழைக்கப்பெறும் இத்தலம் நவகோள்கள் வழிபட்டமையால் திருக்கோளிலி எனப்பட்டது”

திருவாரூருக்கு அருகில் இருக்கும் இவ்வூருக்கு நாகையில் இருந்தும் திருவாரூரில் இருந்தும் பேருந்து வசதிகள் உண்டு

சப்தவிடங்க தலங்களுல் ஒன்றான இத்தலத்தில்தான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்பெற்ற அற்புதம் நிகழ்ந்தது

“சிவபூசையின் மகத்துவத்தை உணர்த்தும் சண்டேச நாயனாரது வரலாற்றை பிள்ளைப் பெருமானார் இத்தலத்து பதிகத்தில் குறித்து பாடியிருக்கிறார்”

“நாளாய போகாமே” என்று துவங்கும் அற்புதமான இத்தல பதிகத்தின் நான்காம் பாடல் இது

பண் : பழந்தக்கராகம்

பாடல்

வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.

பொருள்

மண்ணியாறு கொண்டுவந்த மணலால் அவ்வாற்றின் கரையில் இலிங்கம் அமைத்து மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசுவின் பாலை அபிடேகித்து வழிபட்ட விசாரசருமனது செயலைக் கண்டு அச்சிவபூசையைச் சிதைக்க முற்பட்ட அவன் தந்தையின் காலை அவன் தடிய, அதனைக் கண்டு அவ்விசாரசருமனுக்குச் சண்டீசப் பதவி அருளித் தான் உண்ட கலத்தொடு சூடிய மலர் மாலைகளைச் சூடிக்கொள்ளும் சிறப்பை அளித்தவன், திருக்கோளிலியில் விளங்கும் எமது பெருமான் ஆவான்

அற்புதமான இசை தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *