108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் திருக்கழுக்குன்றம் No ratings yet.

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் திருக்கழுக்குன்றம்

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் என்பது என் வாழ்விலேயே அடியேன் சிந்தித்துக் கூட பார்த்திராத ஒரு மாபெரும் நிகழ்வாகும். தன்னிறைவற்ற விஞ்ஞான அறிவும், மேற்கத்திய மோகமும் நம் தேசத்தை மெல்ல மெல்ல கடந்த அறுபது எழுபது ஆண்டுகளில்பற்றிக் கொள்ள, நம் பல்லாயிரம் ஆண்டுகளின் திரட்சியான மெய்ஞானமும், அந்த ஞானம் வழிகாட்டிய நம் வாழ்வு முறையும், சமயமும், சாத்திரங்களும், மாபெரும் ஒளி பொருந்திய சூரியனை மேகங்கள் சற்றே மறைப்பது போல மறைத்துவிட்டன. அந்த நிழலை சாதகமாக பயன்படுத்தியும், நம் பாரத தேச மக்களின் அறியாமையையும் பயன்படுத்திக் கொண்டும், அந்நிய பரசமயங்கள் தங்களின் சிறகுகளை வேகமாக பரப்பி வருகின்றன. இறைவன் திருவருளால், நம் குருமார்கள் நமக்கு அருளிச் சென்ற நம் சமய ஞானத்தையும், இறைவனை அடையும் வழிகளையும் நாம் வேகமாக நம் மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக பணியாற்றி பரவும் சூழலில் இருக்கின்றோம்.

இத்தகு சூழலில், நம் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருவாசகம் திருமுறைகளுக்கே உரிய ஆழ்ந்த ஞானம், மெய்யுணர்வு, எளிமையாக பாடும் தன்மை என்று பல சிறப்புகளுடன் கூடியதை, நம் மக்களுக்கு பரவச் செய்வது என்பது மிகப்பெரிய திருவருள் கூடிய செயலாகும்.  அதுவும் எளிய தொடர்பு வசதியில்லாத நம் கிராமங்கள் அத்தனையும் சிந்தித்து பாருங்கள். அத்தகு மேம்பட்ட திருப்பணியில் முக்கிய பெரும் பங்களிப்பு செய்தவர் நம் திருக்கழுக்குன்றம் சிவதாமோதரன் ஐயா என்றால், அது மிகையாகாது. அவர்கள் முற்றோதல் செய்தலைத் தொடர்ந்து, அவர்களது திருக்கழுக்குன்ற இல்லத்தில் தொடர்ந்து 108 நாட்கள் திருவாசகம் முற்றோதல் நிகழச் செய்யும் நிகழ்வு தற்போது நிறைவு பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரும் சைவ மடம், மடாதிபதிகள் பல்வேறு துணையோடு செய்யும் செயற்கரிய செயலை ஐயா நம் சமய மேம்பாட்டிற்காக செய்கிறார்கள் என்றால், அது சிவபிரானின் சித்தமே ஆகும்.

அந்த 108 நாட்கள் திருவாசகம் முற்றோதலில் ஒரு நாளாக, சென்னை பள்ளிக்கரணை அடியார்கள் இணைந்து 97 ஆவது நாளில் ஐயாவின் திருக்கழுக்குன்றம் சிவசிவ இல்லத்தில் ஓதினர். திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் கைலாய வாத்திய இசையோடு மிகவும் சிறப்பாக முற்றோதல் இறைவன் திருவருளால் நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கோமல் கா. சேகர் ஐயாவும் இணைந்தது மிகவும் சிறப்பானது.

இந்த முற்றோதல் நிகழ்வு முழுமையடைந்து அதன் குறிக்கோளை அடையும் என்பது பிறப்பு இறப்பற்ற பெருங்கருணையாளின் திருவருள்.

திருச்சிற்றம்பலம்.

இந்த நிகழ்வு பற்றி கோமல் கா சேகர் ஐயாவின் பதிவு:

ஓம்
சிவ சிவ:
=====
மீண்டும் திருவாசக உலா !
=====. =====
19-12-18 திருக் கழுக் குன்றம் ஐயா இல்லத்தில் பள்ளிக் கரணை முற்றோதல் குழுவினரால் திரு வாசகம் ஓதப்பட்டது !
ஐயா அவர்கள் சுமார் 15- திருப் பதிகங்களை இறையாற்றல் வெளிப்படும் வண்ணம் உணர்ச்சி பொங்கப் பாடி , எல்லோரையும் மறந்தும் அயல் நினைவிற்கு இடமின்றி ஈர்த்து மகிழ்வித்தார் !
குழு அன்பர்கள் கிட்டத்தட்ட திருவாசகத்தையே மனப் பாடம் செய்திருந்தது அவர்கள் இசைத்து ஓதும் முறையில் உணர முடிந்தது!
குழுவில் உள்ள மகளிர்கள் சிற்ப்பாக ஆடிப் பாடியும் மகிழ்வித்தனர்.
108- நாள் முற்றோதல் 01-01-19 அன்று நிறைவெய்துகிறது !
திருவாசகத்தை மேலும் பட்டி தொட்டியெல்லாம் எடுத்துச் சென்று அனைத்து இன் மக்களையெல்லாம்
சிவத்துக்கே ஆட்படுத்திட சிவ. தாமோதரன் ஐயா அவர்கள் ,எதிர் நிற்கும் தொடர் 10-ஆண்டுகளுக்குச் ஆற்ற வேண்டியப் பணிகள் குறித்து விவாதித்தோம்.
இனி ஆங்காங்கே முற்றோதல் செய்ய விழைவோர் ஐயா அவர்களைத் தொடர்பு கொள்க !
படங்கள் :~~ 19-12-18 முற்றோதல் நிகழ்வின் போது சிவ தாமோதரன் ஐயா அவர்களுடன் ,சிவ பழனி இராஜம்மாள் அம்மா மற்றும் கோமல் கா சேகர்.
திருச்சிற்றம்பலம்.

அந்த நிகழ்விலிருந்து சில காட்சிகள்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *