சென்னை புத்தகத் திருவிழா 2018 இப்போது நடைபெற்று வருகிறது.
41 ஆவது புத்தகத் திருவிழா சென்னை புனித ஜார்ஜ் ஆங்லோ இண்டியன் மேல் நிலைப் பள்ளியில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) தற்போது நடைபெற்று வருகிறது. சனவரி 10 முதல் 22 ஆம் தேதி வரை.
இரண்டாம் நாளான இன்று (11-01-2018, வியாழக்கிழமை), தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும், சென்னை கோசை நகரான் குழுவினரின் கயிலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.
எல்லா வகையான புத்தகங்களும் இந்த புத்தக கடலில் இருக்கிறது. அள்ளுபவர்கள் வந்து அள்ளுங்கள். குறிப்பாக, சைவ சமய நூல்கள் எண்ணற்றவை உள்ளன. குறிப்பான சில பதிப்பகங்களில் நம் சைவ சமய நூல்கள் கிடைக்கின்றன. சித்தர திருவிளையாடல், சித்திர பெரியபுராணம் புத்தகங்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பதிப்பகத்திலும், அதை அடுத்து உள்ள கிரி டிரேடர்ஸ் கடைகளிலும் கிடைக்கிறது. உமா பதிப்பகம், சைவ சிந்தாந்த நூற்புக்கழகம், கிரி டிரேடர்ஸ், மணிவாசகர் பத போன்றவை சில. சைவ சமய புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் கீழே புகைப்படங்களில் கடை எண்ணோடு பதிவிடப்பட்டுள்ளது. அனைவரும் தங்கள் விருப்பம் போல வாங்கி அள்ளி எடுத்துச் சென்று படித்து பயன்பெறுங்கள். எல்லா கடைகளிலும் 10%. சாரதா பதிப்பகம் 50%.
வலைதளம்: https://bapasi.com/